Tagged: verse of the day in tamil

இணைச் சட்டம் 10:19

அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள். ~இணைச் சட்டம் 10:19

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 149:4

ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். ~ திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 149:4

எசாயா 7:15

தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்கு அறியும்போது அவன் வெண்ணெயையும், தேனையும் உண்பான். ~எசாயா 7:15

இணைச் சட்டம் 20:6

திராட்சைத் தோட்டம் அமைத்து அதன் பயனை அனுபவிக்காதவன் தன் வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். அவன் போரில் இறக்க நேரிட்டால், வேறு ஒருவன் அதன் பயனை அனுபவிக்க வேண்டியிருக்கும். ~இணைச் சட்டம் 20:6

புலம்பல் 3:57,58

உம்மை நோக்கி நான் கூவியழைத்த நாளில், என்னை அணுகி, “அஞ்சாதே” என்றீர்! . என் தலைவரே! என் பொருட்டு வாதாடினீர்! என் உயிரை மீட்டருளினீர்! .  ~புலம்பல் 3:57,58