Tagged: Daily manna

இறைவனின் அன்பு

தொடக்கநூல் 2: 18 – 24 கடவுள் தான் எல்லா படைப்புக்களுக்கும் ஊற்றாக இருக்கிறார் என்கிற ஆழமான சிந்தனையை இந்த பகுதி நமக்கு வழங்குகிறது. இந்த உலகத்தில் இருக்கிற எல்லாவற்றையும் படைத்த இறைவன், தன்னுடைய படைப்பின் இறுதியில், மனிதர்களைப் படைக்கிறார். அவர்களை தன்னுடைய சாயலில் படைக்கிறார். தன்னுடைய உருவத்தில் படைக்கிறார். மனிதர்களைப் படைத்தது, இறைவனின் படைப்பில் சிறந்த படைப்பு என்று சொல்லலாம். எதற்காக? கடவுள் ஒரே கடவுளாக இருந்தாலும், மூன்று ஆட்களாக இருக்கிறார். இந்த மூன்று பேரும், அன்பில் இணைந்திருக்கிறார்கள். அன்பின் வடிவமாக இருக்கிறார்கள். இந்த அன்பிலிருந்து பிறந்தவர்கள் தான், மனிதர்கள் என்று சொன்னால் அதுதான் உண்மை. ஆக, மனிதன் அன்பிலிருந்து உருவாகிறான். அந்த அன்பு தான், அவனுடைய இயல்பாக இருக்கிறது. ஒருவேளை, ஒரு மனிதனிடம் அன்பு குறைந்து விட்டது என்றால், அவன் அந்த இயல்பிலிருந்து விலகி விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும், அந்த இயல்பிலே...

ஏழைகளின் விண்ணப்பத்திற்கு ஆண்டவர் செவிசாய்க்கின்றார்

திருப்பாடல் 69: 32 – 34, 35 – 36 திருப்பாடல் வார்த்தைகளை எண்ணி ஆராய்ந்து பார்க்கிறபோது, துன்பப்படுகிற மனிதனின் வேதனையும், இழப்பும், கடவுளை விட்டால் தனக்கு வேறு ஆதரவு யாரும் இல்லை என்பதையும் இங்கே நாம் புரிந்து கொள்ளலாம். இங்கே தன்னை ஏழையாக ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். விவிலியத்தைப் பொறுத்தவரையில் ஏழைகள் என்று சொல்லப்படுகிறவர்கள், பொருளாதாரத்தின் அடிப்படையில் பின்தங்கியவர்களை அல்ல. மாறாக, கடவுள் மீது தங்களுடைய முழுமையான நம்பிக்கை வைக்கிறவர்களை விவிலியம் ஏழை என்று சுட்டிக்காட்டுகிறது. அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் எண்ணிக்கையில் பலராக மத்திய கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டது. அவர்களின் நியாயத்தை கேட்பார் யாருமில்லை. அடிமைத்தனம் என்பது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. அவர்களுக்கு பரிந்து பேசுகிறவர்கள் எவருமே இல்லை. இப்படிப்பட்ட நிலையில் இறைவன், தன்னை இவர்களுக்கானவராக அடையாளப்படுத்துகிறார், வெளிப்படுத்துகிறார். இது அடிமைநிலையில் இருந்த மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த ஆன்மீகத்தை அறிந்த கொண்ட மனிதரின் உள்ளக்கேவலாக...

உம் பெயரின் மாட்சிமையை முன்னிட்டு கடவுளே எங்களை விடுவியும்

திருப்பாடல் 79: 1 – 2, 3 – 5, 8, 9 அடிமைத்தனத்தின் பிடியிலிருக்கிற இஸ்ரயேல் மக்களை கடவுள் விடுவித்தருள வேண்டுமென்று விடுக்கிற அழைப்பாக இந்த திருப்பாடல் அமைகிறது. பாபிலோனிய மன்னன் நெபுகத்நேசார் எருசலேமை தரைமட்டமாக்கினான். இஸ்ரயேலின் ஆண்களை அகதிகளாக பாபிலோனுக்கு நாடுகடத்தினான். எருசலேமை எவராலும் அழிக்க முடியாது என்கிற மமதை கொண்டிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு இது பேரிடியாக அமைந்தது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் இந்த பாடல் எழுதப்பட்டிருக்கலாம். வாழ்வில் பலம் இருக்கிறவரை அல்லது பலம் இருக்கிறது என்பதை நம்புகிற வரையிலும், மற்றவர்களை எவரும் தேடமாட்டார்கள். வெற்றிக்கு தங்களின் பலம் தான் காரணம் என்கிற மமதை அவர்களின் எண்ணத்தில் குடிகொண்டு விடுகிறது. ஆனால், எப்போது பலத்தை இழக்கிறார்களோ, அல்லது மற்றவர்கள் இவர்களின் பலவீனத்தை அறிந்து இவர்களை வீழத்துக்கிறார்களோ, அப்போதுதான், தங்களது உண்மைநிலையை அறிந்தவர்களாக மாறுகிறார்கள். கடவுளைத்தேடி வருகிறார்கள். இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் இது முற்றிலும் உண்மை. அவர்கள் வெற்றி பெற்ற...

ஆண்டவரின் நியமங்கள் சரியானவை, அவை இதயத்தை மகிழ்விப்பவை

திருப்பாடல் 19: 7, 8, 9, 10 இந்த உலகத்தில் இருக்கிற அனைவருமே சமமானவர்கள். இந்த உலகம் யாருக்கும் தனிப்பட்ட வகையில் சொந்தமானது அல்ல. கடவுளின் படைப்பு எல்லாருக்கும் பொதுவானது. ஆனால், ஒரு சிலர் தங்களது சுய லாபத்திற்காக, தங்களது வலிமையைப் பயன்படுத்தி மற்றவர்களை அடக்கி ஒடுக்கி, தாங்கள் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே, அனைவரையும் கட்டுப்படுத்துவதற்கு ஒழுங்குகளும், சட்டங்களும் இயற்றப்பட்டிருக்கின்றன. இந்த ஒழுங்குகள் பலருக்கு கடுமையானவையாக இருக்கின்றன. இன்றைய திருப்பாடலின் வரிகளில் ஆண்டவரின் கட்டளைகள் இதயத்தை மகிழ்விப்பவையாக இருக்கின்றன என்று ஆசிரியர் சொல்கிறார். யாருக்கு ஒழுங்குகள் இதயத்திற்கு இனிமையானதாக இருக்கும் என்றால், கடவுளுக்கு அஞ்சி வாழ வேண்டும், எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருக்கிறவர்களுக்கு மட்டும் தான், அப்படி இருக்கும். மற்றவர்களுக்கு அது எப்போதும் கடினமானதாக, கடுமையானதாகத்தான் இருக்கும். ஆண்டவரின் கட்டளைகள் கடைப்பிடிப்பதற்கு கடினமாக இருந்தாலும், அதனை கடைப்பிடித்து வாழ்கிறபோது, அது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிற...

புனித மிக்கேல்,கபிரியேல்,ரபேல்-அதிதூதர்கள் திருவிழா

புனித மிக்கேல்,கபிரியேல்,ரபேல்-அதிதூதர்கள் திருவிழா உடனிருக்கும் தூதர்களாவோம்! யோவான் 1:47-51 இறையேசுவில் இனியவா்களே! அதிதூதர்கள் திருவிழாவிற்கு ஆனந்தத்தோடும் ஆர்ப்பரிப்போடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் திருநாளைக் இன்று நாம் கொண்டாடுகிறோம். அதிதூதர்களின் சிறப்பு என்ன? கீழே பார்க்கலாம். தீமையிலிருந்து காப்பாற்றும் மிக்கேல், மங்கள வார்த்தை சொல்லும் கபிரியேல், நலம் நல்கும் இரபேல் என மூன்று அதிதூதர்கள் இருக்கின்றனர். நம் கத்தோலிக்க நம்பிக்கை மரபில். தூதர்கள் என்பவர்கள் இசுலாம், யூத, மற்றும் பாரசீக சமயங்களிலும் காணப்படுகின்றனர். இறைவனுக்கும், மனிதருக்கும் இடைப்பட்டவர்கள் இவர்கள். இரண்டு இயல்புகளையும் உடையவர்கள் இவர்கள். கடவுளைப் போல காலத்தையும், இடத்தையும் கடந்து நின்றாலும், மனிதர்களைப் போல காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள் இவர்கள். நிறைய நாள்கள் நாம் கடவுளையும்,...