Tagged: Daily manna

நமது கடமையைச் செய்வோம்

இயேசுவைப்பற்றி ஏரோது அரசன் கேட்பது சற்று அதிசயமாக இருக்கிறது. ஏரோது ஓர் அரசன். இயேசுவோ சாதாரண தச்சரின் மகன். ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த இயேசுவைப்பற்றி, ஏரோதுக்கு எப்படி தெரிய வருகிறது? இயேசுவின் சீடர்கள் இப்போதுதான், அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, இயேசுவின் நற்செய்தியை அறிவித்திருக்கிறார்கள். அந்த நற்செய்தி மக்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைத்தான், இந்த நற்செய்தி நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இயேசுவின் பணிவாழ்வு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிற அழுத்தமான செய்தியை, நற்செய்தி நமக்கு வலியுறுத்திக்கூறுகிறது. ஏரோது அதை எதிர்மறையாகத்தான் பார்க்கிறான். காரணம், அவனுக்கு திருமுழுக்கு யோவானை கொலை செய்துவிட்டோம் என்கிற குற்ற உணர்ச்சியும், தனது பதவி போய்விடுமோ? என்கிற பய உணர்வும் அதிகமாக அவனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. நாம் நியாயமாக, நேர்மையாக இருக்கிறபோது, யாருக்கும் பயப்படத் தேவையில்லை. இன்றைக்கு ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். தாங்கள் என்ன செய்கிறோம்? என்ன...

ஆண்டவரைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல்

இந்த திருவிழாவின் தொடக்கத்தில் இது கன்னிமரியாவின் தூய்மைச் சடங்கு விழா என்று அழைக்கப்பட்டது. குழந்தை பிறந்த பிறகு ஒரு பெண் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்ய வேண்டியிருந்ததால், இவ்வாறு அழைக்கப்பட்டது. இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த நற்செய்தி பகுதியை அடிப்படையாகக் கொண்ட இவ்விழா, கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு அடுத்த 40 நாட்களில் கொண்டாடப்பட்டது. தொடக்கத்தில் இந்த திருவிழாவானது கி.பி400 ம் ஆண்டிலே, எருசலேமில் கொண்டாடப்பட்டதாக நாம் அறிகிறோம். அதன்பிறகு, ஐந்தாம் நூற்றாண்டில், இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக, மற்றொரு வரலாறு கூறுகிறது. பின்பு ஒளி பவனியும் இத்தோடு இணைக்கப்பட்டது. இது புறவினத்து மக்களின் பாவப் பரிகார சடங்கிற்கு பதிலாகச் சேர்க்கப்பட்டு, கிறிஸ்தவர்கள் ஒளியேற்றப்பட்ட மெழுகுதிரிகளோடு பவனியாக ஊரைச்சுற்றி வந்தார்கள். இது இயேசு வரும்போது உலகில் உள்ள இருள் மறைந்துபோகிறது என்பதை உணர்த்துகிறது. இயேசு இதற்கு புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறார். ஏனென்றால், இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுகிறபோது, சிமியோன் இயேசுவை புறவினத்தார்க்கு வெளிப்பாடு...

கடவுளின் வல்லமை

யூதர்களின் துக்கச்சடங்கு மிகவும் விரிவானது. ஒருவர் இறந்தவுடனே, அழுகையும், கூப்பாடும் வெளிப்பட்டு, இறப்பை, அங்கிருக்கிறவர்களுக்கு அறிவித்துவிடும். அழுகிறவர்கள் இறந்தவர்களின் மேல் விழுந்தும், தங்கள் முடிகளை பிய்த்துக்கொண்டும், தங்கள் உடைகளை கிழித்துக்கொண்டும் அழுவார்கள். எவ்வாறு உடைகள் கிழிக்கப்பட வேண்டும் என்பது பற்றி ஒழுங்குகள் இருந்தன. குழல்கள் ஊதப்பட வேண்டும். ஏழையாக இருந்தாலும், குறைந்தது இரண்டு குழல் ஊதுவோராவது இருக்க வேண்டும். சோகத்தை வெளிப்படுத்தும் இசைக்கருவியாக இது பார்க்கப்பட்டது. புலம்புகிறவர்கள் துக்கநாட்களில் வேலைக்குச் செல்லக்கூடாது. ஒரு கூலித்தொழிலாளி கூட, குறைந்தபட்சம் மூன்று நாட்கள் வேலைக்குச் செல்வதிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். இறைவாக்கு நூல்களை வாசிக்கக்கூடாது. ஏனெனில், இறைவாக்கு நூல்களை வாசிப்பது, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகும். யோபு, எரேமியா மற்றும் புலம்பல் நூல்களை மட்டும் வாசிக்கலாம். முப்பது நாட்களுக்கு ஊரைவிட்டு எங்கும் வெளியே செல்லக்கூடாது. திருமணமாகாதவர்கள் இறந்தால், அடக்கம் செய்வதற்கு முன்னதாக, திருமணச்சடங்குகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு, பல சடங்குகள் துக்கக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. இனிமேல் ஒன்றும் நடப்பதற்கில்லை....

இயேசு சந்தித்த சவால்கள்

”கடவுள் ஏன் இப்படி தொடர்ந்து எனக்கு சோதனைகளை தந்து கொண்டிருக்கிறார்?” என்று நம்மில் பலபேர் புலம்புவதைக் கேட்டிருப்போம். அடுக்கடுக்காக அவர்கள் வாழ்வில் சந்தித்த துன்பங்களின் பாரம் தாங்காமல், அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தைகள் தான் இவை. ஆனால், இயேசுவின் வாழ்வை நாம் சற்று சிந்தித்துப்பார்த்தால், அவரது மூன்றாண்டு பணிவாழ்வின் ஆழத்தை நாம் பார்த்தால், ஒரு மனிதன் இவ்வளவு துன்பங்கள், சவால்களுக்கும் மத்தியில் நேர்மையாக, உண்மையாக, கொண்ட கடமையில் கண்ணும் கருத்துமாக வாழ முடியுமா? என்று நாம் ஆச்சரியப்படுவோம். அந்த அளவுக்கு இயேசு ஒரு நிறைவாழ்வை வாழ்ந்திருக்கிறார். இன்றைய நற்செய்தியில் இயேசு தீய ஆவி பிடித்திருந்த மனிதனை எதிர்கொள்கிறார். இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம் என்றால், கடலின் சீற்றத்திலிருந்து தனது சீடர்களை பாதுகாப்பாக கரைசேர்த்திருக்கிறார். அதிலிருந்து நிலத்திற்கு வந்தவுடன் தீய ஆவியை எதிர்கொள்கிறார். ஒரு பக்கத்தில் சதுசேயர், பரிசேயர், மறைநூல் அறிஞர் என, அதிகாரவர்க்கம் இயேசுவை பழிவாங்க காத்துக்கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கத்தில், பொதுமக்கள் இயேசுவை...

சொந்தங்களின் புறக்கணிப்பு !

இயேசு தம் சொந்த ஊருக்கு வந்தபோது புறக்கணிக்கப்பட்ட நிலையை இன்றைய நற்செய்தி வாசகம் அழகாகச் சித்தரிக்கிறது. ”இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை” என்று இயேசுவே தம் ஊர் மக்களிடத்தில் சொல்கின்றார். இயேசுவின் குடும்பத்தை, பின்னணியை, சுற்றத்தை நன்கு அறிந்தவர்கள் நாசரேத் ஊர் மக்கள். அந்த அறிமுகமே அவரை ஏற்றுக்கொள்வதற்கும், அவரது நற்செய்தியை நம்புவதற்கும் தடையாக அமைந்துவிடுகின்றன. எனவே, அவர்கள் அவரது செய்தியைப் புறக்கணிக்கின்றனர். நமது வாழ்விலும் இத்தகைய அனுபவங்கள் நமக்குக் கிடைத்திருக்கலாம். நமது சொந்த வீட்டினர், குடும்பத்தினர், உறவினர்களே நமது அருமையை, திறமைகளை உணராமல், அறியாமல் நம்மை இகழ்ந்து ஒதுக்கிய நிலை நமக்கு ஒருவேளை கிடைத்திருக்கலாம். நாம் கொஞ்சம் கவனமாக இருப்போம். அடுத்த முறை நன்கு அறிமுகமான நபர்களின் ஆளுமையை, ஆற்றல்களை, சிந்தனைகளைத் திறந்த மனதுடன் ஏற்றுக்;கொள்ள முன்வருவோம். அறிமுகமே முற்சார்பு எண்ணங்களைத் துhண்டி, உறவை முறித்துவிடாதபடி, தவறான தீர்ப்புகளுக்கு நம்மைத் தள்ளிவிடாதபடி கவனமாயிருப்போம். மன்றாடுவோம்: அன்புத் தந்தையே...