Tagged: Daily manna

பெரியவர் தகுதி: பந்தாவா? பணியா?

மத்தேயு 23:1-12 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் இத்திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். “வெட்டி பந்தா வேஸ்ட்” என்பது தொலைக்காட்சியில் நாம் பார்த்த ஒரு விளம்பரம். பந்தா செய்பவர்கள் எல்லாம் வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு வர முடியாது. செல்வாக்கு நிரம்பிய பெரிய ஆளாகவும் அவர்கள் மாற முடியாது. பின் யார்தான் செல்வாக்கு படைத்த பெரிய மனிதராக மாற முடியும். அதை நற்செய்தி வாசகம் நறுக்கென சொல்கிறது. பணி செய்கிறவர்களே விண்ணரசில் பெரியவராக கருதப்படுவார். அவர்கள் என்றும் அழியாமல் இருப்பார்கள். அவர்கள் பலர் மத்தியிலும் மனங்களிலும் வாழ்வார்கள். அவர்களின் செல்வாக்கு அவர்கள் சென்றாலும் செல்லாது. இந்த பணியில் இவர்கள் செய்யக் கூடாதவைகள் இரண்டு 1. தங்களை உயர்த்தக் கூடாது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒருபோதும் தங்களை உயர்த்திக்...

இறைவனின் அன்பு

அன்பு தான் இந்த உலகத்தின் மொழி. அன்பு தான் நம்மை ஒன்றாக இணைக்கிற மொழி. அன்பு தான் இந்த உலகத்தில் எல்லாமே, என்பதனை நமக்கு உரக்கச் சொல்வது இன்றைய நற்செய்தி வாசகம். இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொருவருமே அன்பு செய்யப்பட விரும்புகிறோம். நாம் அன்பு செய்கிறோமோ, இல்லையோ, மற்றவர்கள் நம்மை நிர்பந்தமில்லாமல் அன்பு செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த உலகத்தில் நம்மை அன்பு செய்கிறவர்கள் இருக்கிறபோது, அதன் ஆனந்தமே தனிதான். இந்த உலகத்தில் யார் நம்மை வெறுத்தாலும், நமக்கு அன்புகாட்டக்கூடிய இறைவன் இருக்கிறார் என்கிற ஆழமான செய்தி இன்றைய வாசகத்தின் வழியாக நமக்குக் கொடுக்கப்படுகிறது. நம் மீது அன்பு காட்டக்கூடிய இறைவனுக்கு நமது வாழ்வில் நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். இறைவன் தான் நம் வாழ்வில், எல்லாமுமாக இருக்க வேண்டும். நாம் வாழ்வதும், இருப்பதும், இயங்குவதும் இறைவனுடைய அருளில் தான் என்பதை உணர வேண்டும். இறைவனின் பராமரிப்பு நமக்கு இல்லாவிடில்...

அதிஷ்ட தேவதை உங்கள் கதவைத் தட்டட்டும்…

மத்தேயு 20:1-16 இறையேசுவில் இனியவா்களே! பெருமகிழ்வோடு இந்த நாளை கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். எனக்கு மட்டும் அதிஷ்டமே கிடையாது என புலம்புவோர் நம்மிலர் பலர் இருக்கின்றனர். இவர்கள் கடைசி வரை புலம்பிக்கொண்டே தான் இருப்பார்களே தவிர, அதிஷ்ட தேவதை கதவைத் தட்ட என்ன செய்ய வேண்டும். என்ன முயற்சி எடுக்க வேண்டும் என்பதை ஒருபோதும் நினைப்பதே இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல இரண்டு யோசனையை வழங்குகிறது இன்றைய நற்செய்தி வாசகம். அது என்ன யோசனைகள்? தங்கள் வேலையைப் மட்டும் பார்க்க வேண்டும் நமக்கு பிறருடைய வேலையைப் பார்ப்பதே மிகவும் பழக்கமாகிவிட்டது. இப்படிப்பட்ட நாம் எனக்கு லக்கே இல்லை என சொல்வது நியாயம் தான். ஏனென்றால் என் வேலையின் வளர்ச்சிக்காக நான் நினைக்காமல், உழைக்காமல் அடுத்தவர் வேலையில்...

அகந்தை நம்மிடமிருந்து அகன்றுபோகட்டும்

எசேக்கியேல் 28: 1 – 10 அகந்தை நம்மிடமிருந்து அகன்றுபோகட்டும் ஏத்பால் தீர் நாட்டின் அரசன். தற்பெருமையினால் தன்னை கடவுளுக்கு இணையானவனாகக் காட்டிக்கொண்டு, கடவுளுக்குரிய ஆராதனையை மக்களிடத்தில் கேட்கிறான், ”நானே கடவுள், நான் கடல் நடுவே, கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன்” (28: 2). தன்னை இறைவாக்கினர் தானியேலை விட, அறிவாளியாகக் காட்டிக் கொள்கிறான், (28: 3). ஞானத்தாலும், அறிவாலும் செல்வம் சேர்ந்தது, ஆனால், அதனோடு செருக்கும் சேர்ந்தது. அந்த செருக்கு, அவனுடைய அழிவுக்கு காரணமாக போகிறது. இங்கு, தீர் நாட்டின் அரசன் என்று சொல்லப்பட்டாலும், அது தனிப்பட்ட அரசரையோ, இளவரசரையோ குறிக்கிற வார்த்தையாக பார்க்கக்கூடாது. மாறாக, ஒட்டுமொத்த நகரத்தை, நாட்டைக் குறிப்பதாக நாம் பார்க்க வேண்டும். தீர் நாட்டு மக்கள், தங்கள் நாட்டில் செல்வம் சேர்ந்ததால், கடவுளை விட, தங்களை மேலானவர்களாகக் கருதிக்கொண்டு, கடவுளை மறந்து போயினர். கடவுள் இருக்கிற இடத்தில், அவர்களுக்குள் செருக்கு நுழைந்தது. அதனால் வரப்போகிற அழிவைப் பற்றி...

மரியாளின் விண்ணேற்பு பெருவிழா & சுதந்திர திருநாள்

தாய்க்கும் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம் லூக்கா 1:39-56 உங்கள் அனைவருக்கும் அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழா நல்வாழ்த்துக்களையும், சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்களையும் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தித்திப்பான நாளிலே நல்ல உடல் ஆரோக்கியமும், குறைவில்லா வருமானமும், தீராத சந்தோசமும், சிறந்த நற்பண்புகளையும் நீங்கள் பெற்றிட உங்களை வாழ்த்துகிறேன். விண்ணேற்பு அன்னை மரியின் பரிந்துரையும், ஆண்டவரின் ஆசீரும் உங்களுக்கு நிறைவாகவே கிடைப்பதாக! இன்றைக்கு நம் தாய்க்கும் தாய்நாட்டிற்கும் விழா எடுக்கிறோம். இருவருக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமையும் தொடர்பும் இருப்பதை நாம் பார்க்கலாம். தாய்க்கு எதற்காக? ஒரு சாதாரண தாயைவிட மேலாக, மரியாள் பிள்ளைகளாகிய நம்மீது முழுமையான அக்கறை கொண்டிருப்பவள். கண்மணிபோல கருத்தாய் காப்பவள். அதனால் நாம் அவருக்கு விழா எடுத்துக்கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது ஆகும். “அன்னை தன்னைத் தேடிவரும் அனைவருக்கும் அடைக்கலம் தரும் நகரம்” – என்கிறார் புனித தமசீன் நகர அருளப்பர். “ஒரு மனிதனின் உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் நாக்குகளாக...