Tagged: Daily manna

உம் ஆற்றலைவிட்டு நான் எங்கு செல்லக் கூடும்?

திருப்பாடல் 139: 7 – 8, 9 – 10, 11 – 12 இறைவன் நம்மை முழுமையாக அறிந்திருக்கிறார் என்பதுதான் இந்த திருப்பாடல் வழியாக ஆசிரியர் சொல்ல வருகிற செய்தியாகும். நம்மைப் பற்றி நாம் அறிந்ததை விட, நம்மைப்பற்றி நம்முடைய உறவுகள் அறிந்ததை விட, இறைவன் முழுமையாக அறிந்திருக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் நாம் எதைச்செய்தாலும் கடவுளின் பார்வையிலிருந்து தப்பிவிட முடியாது. ஏனென்றால், ஆண்டவர் எப்போதும் நம்மை உற்று நோக்கிக் கொண்டேயிருக்கிறார். தாவீது அரசர் பத்சேபாவோடு தவறு செய்கிறார். தான் செய்கிற தவறை யாரும் உணராதவாறு, அவருடைய கணவரை கொன்றுவிடுகிறார். அரசர் என்கிற தற்பெருமை, செய்கிற தவறை மற்றவர்களிடமிருந்து மறைத்த செருக்கு அவரிடத்தில் இருக்கிறது. தன்னைப்பற்றி கர்வம் கொள்கிறார். ஆனால், இறைவன் நாத்தான் இறைவாக்கினர் வாயிலாக அவருக்கு அழிவின் செய்தியை அறிவிக்கிறார். கடவுள் முன்னிலையில் தாவீது செய்த தவறு அவருக்கு உணர்த்தப்படுகிறது. இதுவரை தனக்கு நிகரில்லை என்ற மமதை கொண்டிருந்த தாவீது...

ஆண்டவரே! நீர் என்னை அறிந்திருக்கிறீர்

திருப்பாடல் 139: 1 – 3, 4 – 6 ஒரு சில யூதப்போதனையாளர்களின் கருத்துப்படி, தாவீது எழுதிய திருப்பாடல்களில் இது தான், தலைசிறந்த பாடல். கடவுள் எங்குமிருக்கிறார். நம்மை அருகிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கடவுளின் பேராற்றலை எடுத்துரைக்கக்கூடிய பாடல் இந்த திருப்பாடல். கடவுள் அறியாதது ஒன்றுமில்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிற பாடல். நம் வாயிலிருந்து நாம் சொல்லப்போகிற வார்த்தைகளைக் கூட கடவுள் தெளிவாக அறிந்திருக்கிறார். கடவுளை முழுவதுமாக அறிந்தவராக வெளிப்படுத்தும் இப்பாடல், மனித அறிவின் எல்லையையும் கோடிட்டுக் காட்டுகிறது. மனிதர்களாகிய நாம் நமது எல்லையை உணர வேண்டும். நம்முடைய அறிவு குறிப்பிட்ட எல்லைக்குரியது. கடவுளைப் பற்றி மனிதன் கூறும் பிரச்சனைகளுக்கு அடிப்படையே இங்கிருந்து தான் தொடங்குகிறது. நடக்கிற நிகழ்வுகளை நம்முடைய அறிவைக் கொண்டு தீர்வு காண முயற்சி எடுக்கிறோம். நாம் நினைப்பது போல நிகழ்வுகள் நடக்கவில்லை என்றால், கடவுளிடத்தில் கோபம் கொள்கிறோம். இந்த கோபம் கடவுளிடத்தில் வெறுப்புணர்வாக மாறுகிறது....

ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்

திருப்பாடல் 149: 1b – 2, 3 – 4, 5 – 6a & 9 இந்த திருப்பாடல் ஒரு புகழ்ச்சிப்பாடல். இஸ்ரயேலின் கடவுளை ஆர்ப்பரிப்போடு வாழ்த்துகிற பாடல். போர்க்களத்தில் எதிரிநாட்டினரை அடிபணியச் செய்து தன்னுடைய வல்லமையை நிலைநாட்டிய யாவே இறைவனுக்கான பாராட்டுப்பாடல். இதனுடைய பிண்ணனி நிச்சயம் போர்க்களம். எதிரிநாட்டினருக்கு எதிராக, வெற்றியைப் பெற்றிருக்கிற தருணத்தில், தங்களது உள்ளக்கிடக்கைகளை மகிழ்ச்சியாக வெளிப்படுத்தியது தான் இந்த பாடல் என்று சொல்லலாம். அதிலும் சிறப்பாக சீயோனின் மீது தாவீது தன்னுடைய முழுமையான ஆளுமையை நிரூபித்த நேரத்தில் பாடப்பட்ட பாடலாகவும் நாம் கருதலாம். இஸ்ரயேல் மக்கள் எப்போதும் வாழ்க்கை நிகழ்வுகளோடு கடவுளைப் பொருத்திப் பார்த்தார்கள். தங்களுக்கு துன்பம் வந்தாலும் அது கடவுள் தான் அனுப்பியிருக்கிறார் என்று நினைத்து, அதற்கான காரணத்தை ஆராய்ந்தார்கள். அது போல வெற்றி வந்தாலும், தங்களுடைய பலத்தினால் அல்ல, மாறாக, யாவே இறைவனின் கொடையினால் தாங்கள் பெற்றது என்ற எண்ணம் அவர்களுக்கு...

நேரிய வழியில் நடப்போம்

வாழ்வுக்குச் செல்லக்கூடிய வழி அவ்வளவு எளிதானதல்ல. அது மிகவும் கடினமானது. நம்முடைய உழைப்பில்லாமல், அர்ப்பணம் இல்லாமல் நிச்சயமாக நம்மால் மீட்பு பெற முடியாது. நாம் அனைவருமே கடவுள் விரும்பக்கூடிய வாழ்வை வாழ வேண்டும். அப்படி வாழ்கிறபோதுதான், நாம் கடவுளின் அன்பைப் பெற்று, அவரது விருந்திலே பங்கெடுக்க முடியும். எது எளிதானதோ, அவ்வழியில் செல்லவே அனைவரும் விரும்புவர். கடினமான வழியில் செல்ல எவருமே விரும்ப மாட்டார்கள். கடினமாக உழைத்துப்படிக்கலாம். தவறான வழியில் எளிதாகவும் மதிப்பெண் வாங்கலாம். இந்த உலகம் இரண்டாவது வழியைத்தான் தேர்ந்தெடுக்கும். இந்த உலகத்தில் இருக்கிற பலரும், இந்த இரண்டாம் வழியைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். உண்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்களை, இந்த உலகம் அவமானப்படுத்துகிறது. கேலி செய்கிறது. உதாசீனப்படுத்துகிறது. அவர்களுக்கு ஏராளமான சங்கடங்கள் வாழ்வில் இருந்தாலும், அவர்கள் பெறக்கூடிய பரிசு மிகப்பெரிதானது. நமது வாழ்வில் நாம் எத்தகைய வழியைத் தேர்ந்தெடுக்கிறோம்? என்று கேட்டுப்பார்ப்போம். எப்போதுமே, உண்மையான, நேர்மையான பாதையில் நடக்க விரும்புகிறவர்கள்...

புனித பர்த்தலொமேயு திருவிழா

இதைவிட பெரியவற்றைக் காண்பீர்கள்… யோவான் 1:45-51 இறையேசுவில் இனியவா்களே! தூய பர்த்தலொமேயு திருவிழா திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் மேலும் நீயே ஆசியாக விளங்குவாய் போன்ற ஆசீர்வாதமான வார்த்தைகளைக் கேட்கும்போது நம் அகம் குளிர்கிறது. உடல்முழுவதும் ஊக்கமருந்து செலுத்தப்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதே போன்று இன்றைய நற்செய்தியில் வருகின்ற வார்த்தையும் நம்மை புல்லரிக்க வைக்கின்றது. அந்த வார்த்தை, “இதைவிட பெரியவற்றைக் காண்பீர்” இது புனித பர்த்தலமேயுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதமான வார்த்தை. இந்த ஆசீர்வாதமான வார்த்தைகளை நாம் பெறலாமா? கண்டிப்பாக பெறலாம். அதற்காக தூய பர்த்திலொமேயு எடுத்த இரண்டு முயற்சிகளை நாமும் எடுக்க வேண்டியதிருக்கிறது. முயற்சி 1: அவரோடு அமர்ந்தார் ஒரு சீடன் தன் குருவோடு அமர்ந்து அவர்...