Tagged: Daily manna

கடவுளின் மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது

திருப்பாடல் 145: 2 – 3, 10 – 11, 12 – 13 நம்முடைய அன்றாட உரையாடலில் நாம் பல வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். பயன்படுத்துகிற வார்த்தைகளை ஒரே பொருளோடு பயன்படுத்துகிறோமா? என்றால், நிச்சயம் இல்லை. நமக்கு உதவி செய்கிறவர்களை “அவர் மிகவும் நல்லவர்” என்று சொல்கிறோம். கடவுளையும் நல்லவர் என்று சொல்கிறோம். இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தைக் குறிக்கக்கூடியதா? என்றால், நிச்சயம் இல்லை. கடவுளுக்கு பயன்படுத்துகிற வார்த்தையின் அர்த்தம் பல மடங்கு, நம்முடைய அறிவுக்கு எட்டாத வகையில் போற்றுதற்குரியது. இன்றைய திருப்பாடலில் ஆசிரியர், ஆண்டவரை ”மாண்புமிக்கவர்” என்று சொல்கிறார். மாண்பு என்பது உயர்ந்த மதிப்பீட்டைக் குறிக்கக்கூடியது. தாராள உள்ளத்தோடு, மன்னிக்கக்கூடிய மனப்பான்மையோடு, எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தாழ்ச்சியான மனப்பாங்கோடு, பொறுமையைக் கடைப்பிடிக்கிற ஒருவரை, மாண்புமிக்கவர் என்று சொல்கிறோம். கடவுளுக்கு இந்த வார்த்தையோடு ஒப்பிடுகிறபோது, மனிதர்களுக்கு பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளை விட, பல மடங்கு உயர்வானது. அது நம் அறிவுக்கு எட்டாதது என்பதைத்தான்...

ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்

திருப்படல் 145: 1 – 2, 8 – 9, 10 – 11, ”அனுபவமே சிறந்த ஆசான்” என்று பொதுவாகச் சொல்வார்கள். திருப்பாடல் ஆசிரியரின் இந்த வரிகள், அவருடைய அனுபவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அறியாததை, தெரியாததை கற்றுக்கொடுப்பது தான் அனுபவம். இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்று அனுமானத்தின் அடிப்படையில் பல நிகழ்வுகள் நம்முடைய வாழ்க்கையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த அனுமானத்தை உறுதிப்படுத்துவதுதான் அனுபவம். திருப்பாடல் ஆசிரியருடைய அனுபவம் என்ன? அவருடைய அனுபவத்திற்கும், இன்றைய திருப்பாடலுக்கும் என்ன தொடர்பு? ”ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்” என்பதுதான் திருப்பாடல் ஆசிரியரின் அனுபவம். அவருடைய அனுமானம் இதுவரை, கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமே என்பதாக இருந்திருக்கிறது. அந்த அனுமானத்தின் அடிப்படையில் தான், அவரும் வாழ்ந்திருக்கிறார். ஏனென்றால், இஸ்ரயேல் கடவுளின் விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்று அவருடைய முன்னோர்கள் வழியாக கேள்விப்பட்டிருக்கிறார். அந்த நம்பிக்கையோடு தான், அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவருடைய அனுமானம் சரியானதல்ல...

ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்

திருப்படல் 145: 1 – 2, 8 – 9, 10 – 11 ”அனுபவமே சிறந்த ஆசான்” என்று பொதுவாகச் சொல்வார்கள். திருப்பாடல் ஆசிரியரின் இந்த வரிகள், அவருடைய அனுபவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அறியாததை, தெரியாததை கற்றுக்கொடுப்பது தான் அனுபவம். இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்று அனுமானத்தின் அடிப்படையில் பல நிகழ்வுகள் நம்முடைய வாழ்க்கையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த அனுமானத்தை உறுதிப்படுத்துவதுதான் அனுபவம். திருப்பாடல் ஆசிரியருடைய அனுபவம் என்ன? அவருடைய அனுபவத்திற்கும், இன்றைய திருப்பாடலுக்கும் என்ன தொடர்பு? ”ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்” என்பதுதான் திருப்பாடல் ஆசிரியரின் அனுபவம். அவருடைய அனுமானம் இதுவரை, கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமே என்பதாக இருந்திருக்கிறது. அந்த அனுமானத்தின் அடிப்படையில் தான், அவரும் வாழ்ந்திருக்கிறார். ஏனென்றால், இஸ்ரயேல் கடவுளின் விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்று அவருடைய முன்னோர்கள் வழியாக கேள்விப்பட்டிருக்கிறார். அந்த நம்பிக்கையோடு தான், அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவருடைய அனுமானம் சரியானதல்ல...

என் மீட்பும் மேன்மையும் கடவுளிடமே இருக்கின்றன

திருப்பாடல் 62: 5 – 6, 8 இந்த திருப்பாடல் செபமாகவோ, புகழ்ச்சிபாடலாகவோ இருக்கலாம். அது உறுதியாகத் தெரியவில்லை. எந்த சூழலில் எழுதப்பட்டது என்பதும் உறுதியாகவில்லை. சோகமான சூழலிலா? அல்லது மகிழ்ச்சியான வேளையா? என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், திருப்பாடல் ஆசிரியர் கடவுள் மீது வைத்திருக்கிற நம்பிக்கை மட்டும் இங்கே அதிகமாக வெளிப்படுத்தப்படுகிறது. ”எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்” என்று, ஆசிரியர் விடுக்கிற அழைப்பு இதனை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. கடவுளின் அருளும், வல்லமையும் நம் வாழ்வில் வெளிப்பட நாம் காத்திருக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார் திருப்பாடல் ஆசிரியர். நாம் எதிர்பார்க்கிற நேரத்தில் கடவுளின் அருளைப் பெற்றுக்கொள்ள முடியாது. மாறாக, கடவுள் விரும்புகிற நேரத்தில், அதிலும் சிறப்பாக நமக்குத் தேவையான நேரத்தில் கடவுளின் வல்லமை வெளிப்படும். இதுதான் கடவுள் மட்டில் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையின் வெளிப்பாடு. அந்த நம்பிக்கையிலிருந்து நாம் சிறிதும் அடிபிறழக்கூடாது. அந்த நம்பிக்கையில் நாம் நிலைத்திருக்க வேண்டும். அதுதான் ஆசிரியர்...

கிறிஸ்துவே முழுமுதற்செல்வம்

”கிறிஸ்துவின் பொருட்டு அனைத்தையும் குப்பையென்று கருதுகிறேன்” என்று, பவுலடியார் சொல்வார். இன்றைய நற்செய்தியின் சாராம்சத்தைத்தான், பவுலடியார் நிச்சயம் தன் வாழ்வில் அனுபவித்து இதனைச் சொல்லியிருக்க வேண்டும். இயேசுவின் சீடராக இருக்க வேண்டியவர் எப்படி இருக்க வேண்டும்? அவருக்குரிய தகுதிகளாக இயேசு கிறிஸ்து எதிர்பார்ப்பது என்ன? எப்படி நாம் இயேசுவின் சீடர்களாக மாற முடியும்? இந்த கேள்விகளுக்கான பதில் அனைத்தும், இன்றைய வாசகத்தில் காணப்படுகிறது. கிறிஸ்துவை முழுமுதற்செல்வமாக நாம் பெற வேண்டுமென்றால், நமது வாழ்வில் நாம் பலவற்றை இழந்துதான் ஆக வேண்டும். ஆனால், கிறிஸ்துவை நாம் பெறுகிறபோது, நமக்கு வேறு எதுவும் நிச்சயம் தேவையில்லை தான். ஏனென்றால், கிறிஸ்து தான் நமது வாழ்வின் இலக்காக இருக்கிறார். ஓட்டப்பந்த வீரன் ஒருவனுக்கு வெற்றி ஒன்று தான் இலக்காக இருக்க முடியும். அதற்காக, அவன் எதையும் இழப்பதற்கு தயாராக இருக்கிறான். அந்த வெற்றி ஒன்று தான் வாழ்வின் இலக்காக இருக்கிறது. அதை அடைகிறபோது, மற்ற இழப்புகள்,...