Tagged: Daily manna

உறவே வாழ்வின் ஆணிவேர்

உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் இயேசு கிறிஸ்து. உறவில்லாமல் வாழ்வு இல்லை என்பதை இயேசு நற்செய்தியிலே சுட்டிக்காட்டுகிறார். உறவிலே விரிசல் ஏற்படுகின்றபோது, அந்த விரிசலை சரிசெய்ய எல்லாவித முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். விரிசலை அதிகப்படுத்துகின்ற செயல்களை நாம் செய்யக்கூடாது எனவும் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார். யாராவது நமக்கு எதிராக தவறு செய்தால், முதலில் நமக்குள்ளாகவே அதைப்புரிந்துகொண்டு, நம் உள்ளத்தை காயப்படுத்திக் கொண்டிருக்கக்கூடாது. அதை சரிசெய்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். முதலில் நாமாக சென்று சீர்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால், நம்பிக்கைக்குரியவர்களின் துணைகொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல வேண்டும். எது எப்படியென்றாலும், உறவை சரிசெய்வதில் தாமதிக்கக்சகூடாது என்கிற கருத்து ஆணித்தரமாக வலிறுத்தப்படுகிறது. கடவுளும் நாம் தவறுகள் எவ்வளவு. செய்தாலும், நம்மை மன்னித்து ஏற்றுக்கொண்டு நமக்கு புதுவாழ்வைத்தந்திருக்கிறார். அதற்காக, தன்னுடைய ஒரே மகனின் உயிரையே பலியாகத்தந்திருக்கிறார். கடவுளோடும், சக மனிதர்களோடும் நல்ல உறவோடு வாழக்கூடிய அருளிற்காக மன்றாடுவோம். கடவுள் நாம்...

இறைவார்த்தை நம்மை ஆட்கொள்ளட்டும்

எசேக்கியேல் 2: 8 – 3: 4 இன்றைய வாசகத்தில், ஆண்டவர்,எசேக்கியேலைப் பார்த்து கூறுகிறார்: ”உன் வாயைத் திறந்து நான் தருவதைத் தின்றுவிடு…….. நானும் என் வாயைத் திறக்க, அவர் அச்சுருளேட்டை எனக்குத் தின்ன கொடுத்தார்”. வார்த்தைகளைத் தின்பது, வார்த்தைகள் அடங்கியுள்ள சுருளேட்டைத் தின்பது என்கிற செய்தி, நமக்கு புதுமையாக இருந்தாலும், விவிலியத்தில் இது புதிதாக கொடுக்கப்படுகிற சிந்தனை அல்ல. ஏற்கெனவே ஒரு சில பகுதிகளில், இது போன்ற சிந்தனைகள் தரப்பட்டிருக்கின்றன. எரேமியா 15: 16, ”நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன். அவற்றை உட்கொண்டேன். உன் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன. என் உள்ளத்திற்கு உவகை அளித்தன”. யோவான் 6: 53 – 58 பகுதியும், இயேசு எப்படி வாழ்வு தரும் உணவாக இருக்கிறார் என்றும், அவருடைய சதையாக நமக்குத் தரப்படுகிற இறைவார்த்தையை உண்பவர்கள் வாழ்வு பெறுவார் என்று நமக்கு அழைப்புவிடுக்கிறார். திருவெளிப்பாடு 10: 8 – 9, ”விண்ணகத்திலிருந்து நான்...

முகமலர்ச்சியோடு கொடுப்போம்

2கொரிந்தியர் 9: 6 – 10 கொடுத்தல் என்பது கிறிஸ்தவத்தின் முக்கியமான பண்பாகும். எனவே தான், தாய்த்திருச்சபை இறைமக்களின் பகிர்வை அதிகமாக எதிர்பார்க்கிறது. அவர்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட கொடைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள அழைப்பும்விடுக்கிறது. குறிப்பாக, திருச்சபையின் முக்கியமான விழாக்களிலும், முக்கியமான காலங்களிலும், கொடுத்தலை அதிகமாக வலியுறுத்திச் சொல்கிறது. கொரிந்து நகர மக்களுக்கு, கொடுத்தல் எப்படி இருக்க வேண்டும் என்கிற செய்தியை, தூய பவுலடியார் வழங்குவதை இன்றைய வாசகத்தில் பார்க்கிறோம். நாம் கொடுக்கிறபோது, முகமலர்ச்சியோடு கொடுக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் என்று தூய பவுலடியார் கூறுகிறார். நாம் கொடுப்பது கட்டாயத்தினால் இருக்கக்கூடாது. அல்லது இதனை நான் கொடுத்து தான் ஆக வேண்டுமா? என்கிற இரண்டுவிதமான மனநிலை கொண்டும் கொடுக்கக் கூடாது. இறைவன் எனக்கு தந்திருக்கிறார். இறைவனிடமிருந்து நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். பெற்றுக்கொண்ட இந்த கொடையை, நான் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் நம் உள்ளத்தில் நிறைந்திருக்க வேண்டும்....

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்

திருப்பாடல் 85: 8ab, 9, 10 – 11, 12 – 13 கேட்கக்கூடிய பழக்கம் இன்றைய நவீன தலைமுறையினரிடத்தில் குறைந்து கொண்டே வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு குடும்பத்தின் பெரியவர்கள் அந்த குடும்பத்தை வழிநடத்தி வந்தார்கள். அவர்களின் பேச்சுக்கு மறுபேச்சு இருக்காது. சரியா? தவறா? என்கிற விவாதமெல்லாம் அங்கே கிடையாது. அந்த குடும்பத்தின் பெரியவர் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட்டார்கள். அவருக்குரிய மரியாதையைக் கொடுத்தார்கள். இன்றைக்கு நாம் வாழக்கூடிய உலகத்திற்கு, இதுபோன்ற நிகழ்வுகள் ஆச்சரியமளிக்கக்கூடிய நிகழ்வுகள். ஏனென்றால், இது போன்ற நிகழ்வுகளை இப்போது கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இன்றைய திருப்பாடலில், நாம் அனைவரும் இறைவனின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்கிற செய்தி நமக்குத் தரப்படுகிறது. இறைவன் தான் நமக்கு எல்லாமுமாக இருக்க வேண்டும். இறைவனின் குரலுக்கு, நம்முடைய முதுபெரும் தந்தை ஆபிரகாம் எப்படி பணிந்தாரோ, அதேபோல நாமும் பணிந்து நடக்க வேண்டும் என்பதை, இது தெளிவுபடுத்துகிறது. இறைவனின்...

உங்களால் உலகையே உருட்ட முடியும்

மத்தேயு 17:14-20 நம் யாவே கடவுள் ஆற்றல் நிறைந்தவர். சக்தி நிறைந்தவர். அவரின் ஆற்றலால் அனைத்தும் நடக்கும். இதை தொடக்கநூல் 18:13ல் வாசிக்கிறோம், ”ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ? மேலும் லூக்கா 1:37ல், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என வாசிக்கிறோம். உருவமற்று வெறுமையாக இருந்த மண்ணுலகை பசுமையான சோலையாக மாற்றிய சர்வ வல்லமைமிக்க கடவுள் யாவே கடவுள். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் தந்தையைப் போல அதிவேக அற்றலுடன் செயல்பட்டார். வார்த்தையினால் வாழ்வு அளித்தார். பாவிகளை தொட்டார். மனமாற்றத்தை உருவாக்கினார். அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்தார். கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட நாமும் சக்திமிக்வர்கள் தான். அதிக அற்றல் கொண்டவர்கள் தான். இதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் அதிக அழுத்தத்துடன் அறிவிக்கிறார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. நம்மால் முடியாதது ஒன்றும் இல்லை. அதற்கு கீழே உள்ள கண்டுபிடிப்பு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. மகிழ்ச்சி என்பது நமக்கு வெளியில் இல்லை. நமக்குள்ளேதான் இருக்கிறது...