Tagged: தேவ செய்தி

வாழ்வியல் செபம்

இறைமகன் இயேசு கற்றுக்கொடுத்த இந்த செபம் ஓர் அழகான இறையியலைக் கொண்ட செபம். ஒரு செபம் எப்படி இருக்க வேண்டும்? என்பதைச் சொல்வதைக்காட்டிலும், நமது அன்றாட வாழ்க்கை எப்படி அமைந்திருக்க வேண்டும்? என்பதை, நமக்கு கற்றுத்தரக்கூடிய செபம். நமது வாழ்வில், நமது இன்றைய நிலை என்ன? கடவுளைத் தேடுகிறோம். உணவிற்காக உழைக்கிறோம். சோதனைகளைச் சந்திக்கிறோம். தீய சிந்தனைகளுக்கு பலியாகிறோம். சற்று ஆழமாகச் சிந்தித்தால், இதுதான்நமது வாழ்க்கை. இதனைக் கடந்து வாழ்கிறவர்கள், சிந்திக்கிறவர்கள் ஒரு சிலர் மட்டும் தான் இருக்கிறார்கள். நமது வாழ்வில் கடவுள் தான் எல்லாமே என்பதை, இயேசு சிறப்பாக வெளிக்காட்டுகிறார். கடவுள் தான் நமது வாழ்வின் மையம். இது யூதர்களின் இறையியல். எதைச் செய்தாலும், எது நடந்தாலும், ஏதாவது ஒரு வழியில், வகையில் அதில் கடவுள் இருக்கிறார் என்று அவர்கள் நம்பினார்கள். எனவே, கடவுள் தான் நமது வாழ்வின் மையமாக இருக்க வேண்டும். அதற்கு அடுத்த தேவையாக, நமக்கு உண்ண...

குறைசொல்வதைத் தவிர்ப்போம்

மார்த்தாவுக்கும், மரியாவுக்கும் என்ன வேறுபாடு? இதுதான் இன்றைய நற்செய்தியை (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42) வாசித்தவுடன் நமக்கு ஏற்படக்கூடிய உணர்வு. இரண்டு பேருமே நல்ல பண்புகளைக் கொண்டிருந்தனர். இரண்டு பேருமே அவரவர் தேவைக்கேற்றவாறு பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். இரண்டு பேருமே எண்ணத்திலும் சரி, சிந்தனையிலும் சரி, ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ”உன் நண்பன் யார் என்று சொல். நீ யாரென்று சொல்வேன்” என்று பொதுவாகச் சொல்வார்கள். இயேசுவின் நண்ராக இலாசர் இருக்கிறார் என்றால், உண்மையில் அவரது பண்புநலன்களை நாம் அறிந்து கொள்ள முடியும். அப்படியென்றால், எந்த ஒரு பண்பு மரியாவையும், மார்த்தாவையும் வேறுபடுத்திக் காட்டுகிறது? மரியா, மார்த்தாவிற்கு இடையேயான வேறுபடுத்திக் காட்டக்கூடிய பண்பு, மார்த்தாவிடத்தில் காணப்படக்கூடிய அடுத்தவரிடத்தில் குறை காணக்கூடிய பண்பு. மார்த்தா இயேசுவைக் கவனிக்க வேண்டும் என்பதற்காக, பரபரப்பாகி வேலை செய்துகொண்டிருக்கிறார். அந்த வேலையில் கருத்தூன்றி இருந்திருந்தால், இந்த பிரச்சனை இல்லை. ஆனால், அவர் மரியாவின் மீதும்...

நிலைவாழ்விற்கான போதனை

நிலையான வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்பது தான் இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி. இயேசு அதற்கு எளிதான பதிலைத் தருகிறார். திருச்சட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ, அதனைச் செய், நீ நிலையான வாழ்வை பெற்றுக்கொள்வாய் என்று சொல்கிறார். இந்த உலகத்தில் இருக்கிற எல்லா மக்களின் நோக்கமும், குறிக்கோளும் நிலையான வாழ்வை அடைவதுதான் அதனை அடைவதற்காகத்தான் நாம் பல வழிகளில் முயன்று கொண்டிருக்கிறோம். அதைத்தான், திருச்சட்ட அறிஞரின் கேள்வியும் நமக்கு எடுத்துரைக்கிறது. இந்த கேள்வியை திருச்சட்ட அறிஞர் எதற்காக கேட்டார்? அவர் இந்த கேள்வியை கேட்கலாமா? ஏனென்றால், அவர் கடவுளின் சட்டத்தை அல்லும் பகலும் தியானிக்கக்கூடியவர். அதனை மக்களுக்குப் போதிக்கக்கூடியவர். இப்படி கடவுளின் வார்த்தையைப் போதிக்கக்கூடிய திருச்சட்ட அறிஞரே, நிலைவாழ்விற்கான வழியைத் தெரியாமல் இருந்தால், அவர் எப்படி மக்களுக்குப் போதிக்க முடியும்? இன்றைக்கு போதனை என்பது அடுத்தவர்க்கு மட்டும் தான், எனக்கு இல்லை என்கிற மனநிலையை இது எடுத்துக்காட்டுகிறது. இன்றைய...

நம்பிக்கையிழந்த இளைய சமுதாயம்

நம்பிக்கை என்பது ஒரே சமதளத்தில் இருக்கக்கூடியது அல்ல. சில வேளைகளில் மிகுந்த நம்பிக்கை உணர்வு நம்மிடம் மேலோங்கியிருக்கும். பல நேரங்களில் நாம் நம்பிக்கை உணர்வு அற்றவர்களாக இருப்போம். அப்படிப்பட்ட மனநிலையைத்தான் சீடர்கள் தங்களது வார்த்தையில் பிரதிபலிக்கிறார்கள். நிச்சயமாக, இது குற்ற உணர்வில் வெளிப்படுகின்ற வார்த்தைகள். தங்களுடைய போதகரிடத்தில் உண்மையாக இல்லாத ஒரு நிலையில் வெளிப்படுகின்ற வார்த்தைகள். சாதாரண மனிதர்களின் நம்பிக்கை வாழ்வில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை, உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகள். சீடர்கள் தங்களின் நம்பிக்கை உணர்வை அதிகப்படுத்தும்படியாக இயேசுவிடத்தில் கேட்கிறார்கள். ஒன்று மட்டும், சீடர்களின் வார்த்தையில் தெளிவாக இருக்கிறது. தங்களிடம் நம்பிக்கை குறைவு என்பதை, ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த நம்பிக்கைக் குறைவை இயேசு ஒருவரால் தான், சரிப்படுத்த முடியும் என்பதிலும் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இன்றைக்கு நம்பிக்கையை அதிகப்படுத்துவது, கடவுளின் வல்லமையால் மட்டும் தான் முடியும் என்பதை, இந்த நற்செய்தி நமக்குக் கற்றுத்தருகிறது. நமது வாழ்வில், நமது நம்பிக்கை இறக்கம் காண்கிறபோதெல்லாம், நாம் கடவுளின்...

தற்பெருமை வேண்டாம்

இயேசு, ”வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப்போல விழக்கண்டேன்” என்கிறார். இதனுடைய பொருள் என்ன? இதனை எப்படிப்புரிந்து கொள்வது? இயேசு எதற்காக இதைச்சொல்கிறார்? இயேசு தனது பணியின் பயிற்சியாக, எழுபத்திரண்டு சீடர்களை அனுப்புகிறார். அவர்கள் தங்களது பணியை முடித்தபின் இயேசுவிடம் மகிழ்ச்சியோடு தங்கள் அனுபவத்தைப்பகிர்ந்து கொள்கிறார்கள். ”ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள்கூட எங்களுக்கு அடிபணிகின்றன” என்று பெருமை பொங்கச்சொல்கிறார்கள். இதனுடைய பிண்ணனியில்தான் இயேசு மேற்கண்ட வார்த்தைகளைச்சொல்கிறார். இதற்கு இரண்டுவிதத்திலே பொருள் கொடுக்கலாம். 1. இயேசு கொண்டு வர விரும்பிய இறையாட்சிக்கான அறிகுறிகள் தான் சாத்தான் தோற்கடிக்கப்படுவது. ஏனென்றால், இருளின் ஆட்சி முடிந்து, சாத்தான் தோற்கடிக்கப்பட்டு, கடவுளின் அரசு மலரத்தொடங்கிவிட்டதற்கான அருங்குறிகள் தான் சீடர்களின் வெற்றி. 2. இயேசு சீடர்களின் தற்பெருமைக்கு எதிராக கொடுக்கின்ற எச்சரிக்கையாகவும் இதை எடுக்கலாம். ஏனென்றால், சாத்தான்கள் தற்பெருமையினால் கடவுளுக்கெதிராக கிளர்ந்தெழுந்த வானதூதர்கள். அவர்கள் தற்பெருமையினால் கீழே விழுந்தார்கள். சீடர்களும் பெற்றிருக்கிற சிறிய வெற்றியை வைத்து தற்பெருமை அடைந்துவிடக்கூடாது, என்று...