Tagged: தேவ செய்தி

குழந்தைகள் கற்றுத்தரும் பாடம்

விண்ணரசில் மிகப்பெரியவர் யார்? என்ற கேள்விக்கு, இயேசு ஒரு சிறு பிள்ளையை அழைத்து, நடுவில் உதாரணமாக நிறுத்தி, சிறுபிள்ளைகளைப் போல மாறுகிறவர்கள் தான் விண்ணரசில் பெரியவர் என்று பதில் சொல்கிறார். சில பாரம்பரியத்தின்படி, அந்த சிறுகுழந்தை அந்தியோக்கு இஞ்ஞாசியார் என்று சொல்வர். ஏனென்றால், அந்தியோக்கு இஞ்ஞாசியாருக்கு “தியோபோரஸ்” என்ற பெயர் உண்டு. அதன் பொருள் “கடவுள் தூக்கினார்” என்பதாகும். அதே போல, இயேசு அழைத்த குழந்தை பேதுருவுடையது என்றும் ஒரு சிலர் சொல்வர். காரணம், வழக்கமாக கேள்விகளைத் துணிவோடு இயேசுவிடம் கேட்பது பேதுரு தான். பேதுருவிற்கு திருமணம் ஆகியிருந்ததால், அவருடைய குழந்தையாகக்கூட இருக்கலாம் என்றும் சொல்வர். குழந்தைகளிடத்திலே இருக்கக்கூடிய பல குணங்கள், பெரியவர்களிடத்தில் இருந்தால், நிச்சயம் இந்த உலகம் ஒரு அமைதிப்பூங்காவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. புதிதானவற்றைப் பார்க்கிறபோது, அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல், எது நடந்தாலும், தங்களுக்கு எதிராக எவர் தீங்கிழைத்தாலும், அதை உடனடியாக...

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக

திருப்பாடல் 147: 12 – 13, 14 – 15, 19 – 20 ஆண்டவர் யார்? ஆண்டவர் எப்படிப்பட்டவர்? என்பதை, இந்த திருப்பாடலானது நமக்கு விளக்கிச் சொல்வதாக அமைந்திருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளைப் போற்றுவதற்கான காரணத்தை இது விளக்குவதாகவும் இருக்கிறது. இஸ்ரயேல் மக்களை ஒட்டுமொத்தமாக இணைந்து, கடவுளைப் புகழ்ந்து பாடச்சொல்கிறார் திருப்பாடல் ஆசிரியர். ஏனென்றால், கடவுள் இஸ்ரயேல் நாட்டின் பிள்ளைகள் அனைவருக்கும் ஆசீர் அளிக்கிறார். கேட்டதால் கொடுக்கவில்லை. மாறாக, அவராகவே ஆசீர்வாதத்தைத் தருகிறார். இஸ்ரயேல் மக்களை எல்லாவிதத்திலும் வழிநடத்தக்கூடிய தலைவராக, அரசராக, ஆயராக இறைவன் இருக்கிறார். இஸ்ரயேல் மக்களுக்கென்று இந்த உலகத்தில் அரசர்கள் இருந்தாலும், அவர்களை வழிநடத்துகிறவர் ஆண்டவர் ஒருவரே. அவர் மக்களுக்கு ஒழுங்குமுறைகளையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கிறார். இவற்றை அவர் மற்றவர்களுக்குச் செய்யவில்லை. இஸ்ரயேல் மக்களுக்கு மட்டும் செய்கிறார். எப்படியாவது இஸ்ரயேல் மக்களை உருவாக்கி, இந்த உலகத்தார் நடுவில் பெருமைப்படுத்தி, அவர்கள் வழியாக இந்த உலகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பது...

திருத்தலங்களின் மகிமையும் மாண்பும்

இன்றைக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ ஊர்களில் ஒருவிதமான “திருத்தல” நோய் பரவி வருகிறது. எப்படியாவது நமது ஆலயத்தை திருத்தலமாக மாற்றிவிட வேண்டும் என்கிற, வியாபார ரீதியாக போக்கு, மக்கள் மனதில் பரவி வருவது வேதனைக்குரியது, ஆனால் உண்மையானது. இதனை நாம் மறுக்க முடியாது. எதையாவது வித்தியாசமான ஒன்றைச் செய்து, மக்கள் மனதில் இடம்பிடித்து, ஏதோ சாதனையைச் செய்துவிட்டோம், கூட்டத்தைக் கூட்டிவிட்டோம் என்கிற பாணியில் செயல்படுவது, கடவுளின் பணியாளர்கள் மத்தியிலும் அதிகமாகி வருகிறது. இவையனைத்துமே, கடவுளை வைத்து, வியாபாரம் செய்யக்கூடிய போக்கையே காட்டுகிறது. ஆனால், ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. எங்கே பணம் இருக்கிறதோ, அங்கே பிரச்சனைகளும் அதிகமாக இருக்கிறது. இந்த உண்மையே, நாம் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறோம் என்கிற உண்மையை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. திருத்தலம் என்பது இறையனுபவத்தை நமக்குப் பெற்றுத்தரக்கூடிய கடவுளின் அனுபவத்தைப் பெற்றிருக்கிற ஓர் உன்னதமான இடம். அது கடவுளின் பிரசன்னத்தை வெளிப்படுத்தக்கூடிய இடமாக இருக்க வேண்டும். வரக்கூடிய மக்களின் ஆன்மீக தேவைகளை...

மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்

திருப்பாடல் 112: 1 – 2, 5 – 6, 7 – 8, 9 உதவுதல் என்பது நாம் வாழக்கூடிய சமுதாயத்தில் ஒரு நல்ல விழுமியமாக பார்க்கப்படுகிறது. இன்றைக்கு உதவக்கூடிய மனிதர்கள் எல்லாரும் நல்லவர்களா? என்றால், அதனை நிச்சயமாக சொல்ல முடியாது. ஏனென்றால், இன்றைய உலகத்தில், எதையும் எதிர்பார்த்துச் செய்யும் பழக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒன்றைக்கொடுத்து மற்றொன்றைப் பெறுவத, நாம் வாழும் உலகில் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் செய்யக்கூடிய உதவி எப்படி இருந்தால், கடவுளின் ஆசீரை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை, இந்த திருப்பாடல் எடுத்துரைக்கிறது. நாம் மற்றவர்களுக்கு உதவுகிறபோது எதையும் எதிர்பார்க்காது கொடுக்க வேண்டும். அவர் மேல் நாம் கொண்டிருக்கிற அன்பின் மிகுதியினால் மட்டுமல்ல, மாறாக, நம்முடைய உள்ளத்தில் எழுந்த இரக்கத்தினால், உணர்வினால் பொங்கி எழுந்து கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அதுதான் மனமிரங்கி கொடுப்பது என்பதன் பொருளாகும். சாதாரணமாக, நாம் அதிகமாக அன்பு செய்கிறவர்கள்...

வாழ்வு என்னும் கொடையைப் போற்றுவோம்

இழப்பீடு என்பது இழப்பிற்கு சமமான ஒன்றைக் கொடுப்பதாகும். நாம் ஏதாவது பொருளை இழந்து விட்டால், அல்லது மழை, வெள்ளத்தில் நமது பொருட்களை இழந்துவிட்டால், அரசாங்கம் நமக்கு இழப்பீடு தருகிறது. அரசாங்கம் தரக்கூடிய இழப்பீடு நூறில் ஒரு பங்குக்கு கூட சமமாகாது என்பது வேறு கதை. ஆனால், இழப்பீடு வழங்குகிறது. அதேபோலத்தான், விபத்திற்கென்று இழப்பீடு, மருத்துவ இழப்பீடு என்று, இதில் பல வகைகள் அடங்கியிருக்கிறது. ஆக, ஒன்றிற்கு ஈடாக, அல்லது ஈடுபடுத்தும்விதமாகக் கொடுக்கப்படுவதுதான் இழப்பீடு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய நற்செய்தியில் வாழ்விற்கு ஈடாக எதை நாம் கொடுக்க முடியும்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பொருட்களுக்கு இழப்பீடாக பணத்தைக் கொடுத்துவிடலாம். ஆனால், இழப்பீடு தர முடியாத ஒன்று இருக்கிறது என்றால், அது நிச்சயம் வாழ்வு தான். பொன் கோடி கொடுத்தாலும், பதவி, புகழ், அந்தஸ்து பெற்றாலும், நமது வாழ்வை இழந்துவிட்டால், அவ்வளவுதான். இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை. எனவே, வாழ்வை பாதுகாப்போடு,...