Tagged: தேவ செய்தி

புனித பர்த்தலொமேயு திருவிழா

இதைவிட பெரியவற்றைக் காண்பீர்கள்… யோவான் 1:45-51 இறையேசுவில் இனியவா்களே! தூய பர்த்தலொமேயு திருவிழா திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் மேலும் நீயே ஆசியாக விளங்குவாய் போன்ற ஆசீர்வாதமான வார்த்தைகளைக் கேட்கும்போது நம் அகம் குளிர்கிறது. உடல்முழுவதும் ஊக்கமருந்து செலுத்தப்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதே போன்று இன்றைய நற்செய்தியில் வருகின்ற வார்த்தையும் நம்மை புல்லரிக்க வைக்கின்றது. அந்த வார்த்தை, “இதைவிட பெரியவற்றைக் காண்பீர்” இது புனித பர்த்தலமேயுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதமான வார்த்தை. இந்த ஆசீர்வாதமான வார்த்தைகளை நாம் பெறலாமா? கண்டிப்பாக பெறலாம். அதற்காக தூய பர்த்திலொமேயு எடுத்த இரண்டு முயற்சிகளை நாமும் எடுக்க வேண்டியதிருக்கிறது. முயற்சி 1: அவரோடு அமர்ந்தார் ஒரு சீடன் தன் குருவோடு அமர்ந்து அவர்...

என் நெஞ்சே! ஆண்டவரைப் போற்றிடு

திருப்பாடல் 146: 5 – 6b, 6c – 7, 8 – 9a, 9b – 10 ”என் நெஞ்சே! ஆண்டவரைப் போற்றிடு! “நெஞ்சம் நிறைந்த நன்றி“ என்று பொதுவாகச் சொல்வார்கள். இதனுடைய பொருள் என்ன? வழக்கமாக நன்றி சொல்கிறபோது, வார்த்தைகளால் அலங்கரித்து நன்றி சொல்வார்கள். மிகப்பெரிய மேடையில், ஒருவர் நன்றி சொல்கிறபோது, அதனை ஒரு கடமையாகத்தான் சொல்வார். அதே நேரத்தில், ஒரு விழாவினை ஏற்பாடு செய்ய எல்லாமுமாக இருந்து, அந்த விழாவினைச் சிறப்பாக நடத்தி முடித்த மனிதரே, நன்றி சொல்ல வருகிறபோது, அது வெறும் வார்த்தைகளாக இருக்காது. நன்றிப்பெருக்கினால், தன்னுடைய ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்லக்கூடிய நன்றியாக இருக்கும். அதுதான் உண்மையான நன்றி, ஆழமான நன்றி. இன்றைய திருப்பாடலில் ஆசிரியர் தன்னுடைய நெஞ்சத்தை “இறைவனைப் போற்றிடு“ என்று சொல்வது இதனைக் குறிக்கக்கூடிய வார்த்தையாகத்தான் இருக்கிறது. உள்ளத்தின் ஆழத்திலிருந்து இறைவனுக்கு எழுப்பக்கூடிய நன்றியாக...

கடவுள் கொடுத்திருக்கிற வாழ்வு

இந்த உவமையை இயேசு மக்களுக்குச் சொன்னபோது, ஏற்கெனவே யூதப்போதகர்கள் சொன்ன இரண்டு கதைகள், மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. முதல் கதை: ஓர் அரசர், முக்கியமான அலுவலர்களுக்கு, விரைவில் தான் விருந்து ஏற்பாடு செய்ய இருப்பதாகவும், அதற்கு எந்த நேரமும் தயாராக இருக்கும்படியும், சொன்னார். விருந்திற்கு எப்படி வர வேண்டும் என்பதையும் அவர்களுக்கு அறிவித்திருந்தார். முன்மதியுள்ள அலுவலர்கள், அரசரின் இந்த செய்திக்கு ஏற்ப, தங்களையேத் தயாரித்து, அரசரின் அழைப்பிற்காகக் காத்திருந்தனர். ஆனால், முன்மதியற்றவர்கள், விருந்திற்கு இன்னும் நாளாகலாம் என்று, தங்களின் அலுவல்களைக் கவனிக்கச் சென்றுவிட்டனர். திடீரென்று அழைப்பு வந்தபோது, ஞானமுள்ளவர்கள் தகுந்த தயாரிப்போடு, விருந்திற்கான ஆடை உடுத்திச் சென்றனர். முன்மதியற்றவர்களோ, தயாரிப்பில்லாமல் சென்றனர். அவர்கள் விருந்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தனர். ஆக, நாம் எப்போதும், கடவுளின் அழைப்பிற்குத் தயாரிப்போடு இருக்க வேண்டும் என்கிற கருத்தை, இது வலியுறுத்திக்கூறுகிறது. இரண்டாவது கதையும் இதை அடியொற்றித்தான் இருந்தது. ஓர் அரசர் தனது பணியாளர்களுக்கு விலையுயர்ந்த...

இறைவன் தன் மக்களுக்கு நிறைவாழ்வை வாக்களிக்கின்றார்

திருப்பாடல் 85: 8, 10 – 11, 12 – 13 இறைவன் தன்னுடைய மக்களுக்கு நிறைவாழ்வை வாக்களிப்பதாக ஆசிரியர் கூறுகிறார். நிறைவாழ்வு என்பது என்ன? நிறைவாழ்வை இறைவன் வாக்களிக்கக்கூடிய அளவிற்கு அது சிறந்ததா? நிறைவாழ்வு என்பது நிறைவான வாழ்வைக் குறிக்கக்கூடிய அர்த்தம். இந்த நிறைவான வாழ்வு எதிலிருந்து கிடைக்கிறது? நிறைவாழ்வு என்பது ஒரு பொருளல்ல. அது ஒரு நிலை. ஆன்மாவின் மகிழ்வு தான் நிறைவாழ்வு. இந்த ஆன்மாவின் மகிழ்வு வெறும் பொருளைச் சேர்ப்பதிலோ, அதிகாரத்தைப் பெறுவதிலோ இல்லை. மாறாக, அதனையும் கடந்த மதிப்பீடுகளிலும், விழுமியங்களிலும் காணப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இன்றைக்கு பணம் சேர்க்க வேண்டும் என்கிற ஆவல் கொண்டிருக்கிறோம். அந்த பணம் நிறைவைத்தரும், நிறைவாழ்வைத் தரும் என்கிற எண்ணம் கொண்டிருக்கிறோம். ஆனால், பணத்தை முழுவதுமாக சேர்த்து வைத்த பின்னர், அந்த நிறைவைப்பெற்ற உணர்வு இல்லை. அப்போதுதான், நிறைவு என்பது பணத்திலிருந்தோ, பொருளிலிருந்தோ கிடைக்கக்கூடியது அல்ல என்பதை உணர ஆரம்பிக்கிறோம். ஆக,...

உம் மக்கள் மீது இரங்கும்போது ஆண்டவரே, என்னை நினைவுகூறும்

திருப்பாடல் 106: 34 – 35, 36 – 37, 39 – 40, 43 கடவுளிடத்தில் செபிக்கிற மன்றாட்டுக்களில் இரண்டு விதமான மன்றாட்டுக்கள் இருக்கிறது. நிர்பந்தமில்லாத மன்றாட்டுக்கள், நிர்பந்தமுள்ள மன்றாட்டுக்கள். நிர்பந்தமில்லாத மன்றாட்டுக்கள் என்பது, கடவுளுக்கு பிரியமானால், இது நடக்கட்டும் என்கிற ஆழமான விசுவாசத்தில் வேரூன்றிய மன்றாட்டு. இப்படிப்பட்ட மனநிலையோடு செபிக்கிறவர்கள் மிகவும் குறைவு. அப்படி செபிப்பதற்கு நமக்கு நிறைய ஆன்மீக பலம் வேண்டும். புனிதர்களின் செபங்கள் இப்படிப்பட்ட செபங்கள் தான். நிர்பந்தமான மன்றாட்டு என்பதில் இரண்டு விதமான பிரிவுகளைப் பார்க்கலாம். ஒன்று தாழ்ச்சியுடன் கூடிய நிர்பந்தம், இரண்டாவது அதிகாரம் நிறைந்த நிர்பந்தம். இன்றைய திருப்பாடலில் வருகிற இந்த பாடல், தாழ்சியுடன் கூடிய நிர்பந்தமான மன்றாட்டாக இருக்கிறது. திருப்பாடல் ஆசிரியர் தவறு செய்திருக்கிறார். அந்த தவறுக்காக ஆண்டவரிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேவேளையில் கடவுளிடத்தில் தான் கேட்பதற்கு தகுதியற்றவனாக உணர்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடவுளுக்கு எதிராக நன்றியுணர்வு இல்லாமல் பாவங்கள்...