Tagged: தேவ செய்தி

கடவுளே! எம்மீது இரங்கி, ஆசி வழங்குவீராக!

திருப்பாடல் 67: 1 – 2, 4, 5 & 7 கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு, அவரது இரக்கம் நமக்கு நிறைவாகக் கிடைக்க வேண்டுமென்று ஆசிரியர் அழைப்புவிடுக்கின்றார். கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு எதற்கு இரக்கம் தேவைப்படுகிறது? இரக்கத்திற்கும், ஆசீர்வாதத்திற்கும் என்ன தொடர்பு? கடவுளின் ஆசீரைப் பெற வேண்டுமென்றால், கடவுளின் இரக்கத்தைக் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால், கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு நாம் தகுதியற்றவர்கள். ஆசீர்வாதம் என்பது புனிதத்தன்மை நிறைந்தது. கடவுளிடமிருந்து வருவது. அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு, மனிதர்களாகிய நாம் தகுதியற்றவர்கள். கடவுளின் இரக்கம் நம்மோடு இருக்கிறபோது மட்டும் தான், அவரது அருளை நாம் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக இருக்கும். கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு முன்னதாக, நம்மையே கடவுளிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும். பழங்காலத்தில், முனிவர்கள் காடுகளில் நோன்பிருந்து, தவம் செய்தார்கள். இந்த தவத்தை அவர்கள் செய்வது, கடவுளின் அருளைப் பெற்றுக்கொள்வதற்கான தயாரிப்பிற்காகத்தான். தங்களையே ஒறுத்து, தங்களின் தேவையற்ற ஆசைகளை அடக்கி, உடலை வருத்தி,...

இறைவல்லமை

திருத்தூதர் பணி 11: 19 – 26 ஸ்தேவான் கொலை செய்யப்பட்ட பிறகு, நிச்சயம் இயேசுவைப் பற்றி போதிக்கிறவர்கள் தங்களின் உயிருக்குப் பயப்படுவார்கள் என்று அதிகாரவர்க்கத்தினர் நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எவ்வளவுக்கு அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்களை துன்புறுத்தினார்களோ, அதற்கு மேலாக கிறிஸ்துவைப் பற்றிய போதனை, மக்களுக்கு கொடுக்கப்பட்டது. அதற்கு காரணமாக, இன்றைய முதல் வாசகம் நமக்கு சொல்வது, ”அவர்கள் ஆண்டவரின் கைவன்மையைப் பெற்றிருந்தனர்”. இயேசுவைப் பற்றி போதித்தவர்கள் மிரட்டலுக்கு அஞ்சாமல், தங்கள் உயிரைப் பற்றிய கவலை கொள்ளாமல், மக்களுக்கு கிறிஸ்துவை அறிவித்தனர் என்றால், அதற்கு காரணம், இறைவனின் வல்லமை தான். இயேசுவின் சீடர்கள் படிக்காத பாமரரர்கள். இயேசு தான் அவர்களை வழிநடத்தினார். இயேசுவைக் கொலை செய்தபோது, அதிகாரவர்க்கத்தினர் சீடர்களை எளிதாக அச்சுறுத்தி சமாளித்து விடலாம் என்று நினைத்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போலவே, இயேசுவின் இறப்பிற்கு பிறகு, சீடர்கள் அறைகளில் தங்கி ஒளிந்து கொண்டிருந்தனர். ஆனால், இயேசுவின் உயிர்ப்பு...

என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது

திருப்பாடல் 42: 1 – 2, 43: 3, 4 விசுவாச வாழ்விற்கும், உலக வாழ்விற்கும் இடையேயான போராட்டத்தை மிக தெளிவாக எடுத்துக்காட்டுவதுதான் இன்றைய திருப்பாடல். இந்த உலக வாழ்க்கையின் ஏமாற்றங்கள், தோல்விகள், விரக்தி, பயம் விசுவாச வாழ்விற்கான சவாலாக தென்படுகிறது. ஆனால், இவையனைத்தையும், விசுவாசம் என்கிற ஆன்மீக ஆற்றல் ஒன்றுமில்லாததாக மாற்றிவிடுகிறது. பிரச்சனைகள் இருந்தாலும், அவற்றை எதிர்கொள்வதற்கு தேவையான ஆற்றலையும், அதனை பொருட்படுத்தாமல் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ஆழப்படவும் இது நமக்கு உதவியாக இருக்கிறது. கடவுள் மீது எப்போது நமக்கு ஈடுபாடு, ஆர்வம், தாகம் ஏற்படுகிறதோ, அப்போதுதான் விசுவாசம் நமக்குள்ளாக தோன்ற ஆரம்பிக்கிறது. வாழ்க்கையில் வரக்கூடிய எந்தவித பிரச்சனைகளையும் எதிர்கொள்வதற்கு இது நமக்கு உதவியாக இருக்கிறது. கடவுள் மீது நமக்கு ஈடுபாடே இந்த பிரச்சனைகளோடு தான், தோன்ற ஆரம்பிக்கிறது. பிரச்சனைகளின் தொடக்கத்தில், எதையும் நம்மால், தனி ஆளாக எதிர்கொள்ள முடியும் என்று நாம் நினைக்க ஆரம்பிக்கிறோம். நம்முடைய பலத்தில்...

ஆண்டவரே என் ஆயர்

திருப்பாடல் 23: 1 – 3, 3 – 4, 5, 6 தாவீது அரசரின் திருப்பாடல்கள் பொதுவாக, வேண்டுதலாகவும், வருத்தத்தை, துயரத்தை வெளிப்படுத்தும் புலம்பலாகவும் இருப்பதை நாம் பார்க்கலாம். ஆனால், இந்த திருப்பாடல் அதிலிருந்து சற்று மாறுபட்டது. கடவுள் செய்த நன்மையான செயல்களை நன்றியுணர்வோடு நினைவுகூறக்கூடிய பாடலாக இது அமைந்திருக்கிறது. இறைவனை ஆடுகளைப் பராமரிக்கும் ஆயரோடு ஒப்பிடுகிறார். கடவுள் அவருக்கு செய்த எல்லா நன்மையான செயல்களையும் நினைவுகூர்கிறார். தாவீது அரசர் ஓர் இடையராக வாழ்ந்தவர். தன்னுடைய அனுபவத்தைத்தான் இங்கே பாடலாக வடிக்கிறார். ஓர் ஆயராக இருந்து ஆடுகளைப் பராமரிப்பது, அந்த ஆடுகளுடன் அவர் கொண்டிருந்த அன்பு, அவை காணாமல் போனால், பதைபதைப்போடு அதை தேடுவது என, ஆயரின் ஒவ்வொரு நிலையையும் அவர் இங்கே பகிர்ந்து கொள்கிறார். ஆடுகள் மேல் தான் கொண்டிருந்த அன்பை விட, கடவுள் பல மடங்கு அன்பை, மக்கள் மீது வெளிப்படுத்துவதாக இங்கே சொல்லப்படுகிறது. அதுதான் கடவுளின்...

பேதுருவின் இறையனுபவம்

திருத்தூதர் பணி 9: 31 – 42 திருத்தூதர் பேதுரு செய்கிற வல்ல செயல்களை, அற்புதங்களை இன்றைய வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சுகமும், இறந்து போனவர்க்கு உயிரும் கொடுக்கிறார். இயேசுவோடு வாழ்ந்தபோது, பல அற்புதங்களை செய்ய முடியாமல் இருந்தவர், இப்போது தனியாகவே அற்புதங்களைச் செய்வது, நிச்சயம் அங்கிருந்தவர்க்கெல்லாம் ஆச்சரியத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும். எப்படி இவரால் இவற்றைச் செய்ய முடிகிறது? என்கிற கேள்வி மக்களின் உள்ளங்களை துளைத்தெடுத்திருக்க வேண்டும். ஒரு குழந்தை தன் தாய் இருக்கிறபோது, நடந்து வருகிறது என்று வைத்துக்கொள்வோம். ஒருவேளை அந்த குழந்தை நடக்கிறபோது கீழே விழுந்துவிட்டால், அது மீண்டும் எழ முயற்சிக்காது. மாறாக, அழ ஆரம்பிக்கும். தாய் தன்னை தூக்க வேண்டும் என்று அடம்பிடிக்க தொடங்கும். அதே குழந்தை தாய் இல்லாத நேரத்தில், நடந்து வருகிறபோது கீழே விழுகிறது என்று வைத்துக் கொள்வோம். அங்குமிங்கும் பார்க்கும். தொடர்ந்து எழுந்து நடக்க ஆரம்பிக்கும். இயேசுவோடு...