Tagged: இன்றைய வசனம்

அன்பே உருவான இறைவன்

அன்பே உருவான இறைவன், இன்று உங்கள் ஒவ்வொருவரிடம் கூறும் வார்த்தை என்ன தெரியுமா? எனக்கு மிகவும் பிரியமான என் இரத்தத்தினால் சம்பாதித்த என் செல்லக் குழந்தைகளே! நீங்கள் என் ஊழியன்.[என் சொந்த பிள்ளைகள்]உங்கள் வழியாய் நான் இன்று மாட்சியுறுவேன். ஏசாயா 49:3. ஆம்,ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உங்கள் வழியாய் மாட்சியுற இன்று உங்கள் உள்ளத்தில், உங்கள் இல்லத்தில் வருகிறேன், என்று சொல்கிறார். நீங்கள் செய்வதல்லாம் ஒன்றே ஒன்று தான்.அவரை உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்வீர்களா? இதோ அவருடைய இரத்தத்தினால் சம்பாதித்த நம்மை பார்த்து என் மகனே,என் மகளே உன் இருதயத்தை எனக்கு கொடுப்பாயா ? என்று கேட்கிறார்.பிரியமானவர்களே! உங்களை ஆண்டவருக்கு கொடுப்பீர்களா? நான் நாள் முழுதும் உழைக்கிறேன்.எனக்கு ஒன்றும் இல்லையே என்று ஏங்கித் தவிக்கும் அன்பானவர்களே!மனம் கலங்காதீர்கள். தாமே சோதனைக்கு உள்ளாகி துன்பபட்டதினால் சோதிக்கப்படுபவர்களுக்கு உதவி செய்ய அவர் வல்லவர்.  எபி 2:18. உங்கள் பணிக்கான பரிசு கடவுளிடம் இருக்கிறது. ஏசாயா 49:4. கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்.கேட்கிற யாவருக்கும் கொடுக்க ஆவலாய் உங்கள் அருகில் காத்திருக்கிறார். ஜெபம். ====== விண்ணையும்,மண்ணையும் படைத்த...

கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது; எபிரெயர் 1:10

கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார். சங்கீதம் 78:16

கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்;சங்கீதம் 37:34