Tagged: இன்றைய வசனம் தமிழில்
ஆண்டவர் இயேசுவின் வாக்குறுதிகள் அனைத்திலும் நமக்கு மிகுந்த ஆறுதல் தருவது இதுதான்: உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்”. இயேசு தம் சீடர்களுக்குப் போலியான வாக்குறுதிகளைத் தரவில்லை. ‘உங்களுக்குத் துயரமே வராது’ என்று சொல்லவில்லை. ‘நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள், துயருறுவீர்கள்’ என்றுதான் சொன்னார். ஆம், இயேசுவின் சீடராய் வாழ்வதில் பல இடையூறுகள் எழத்தான் செய்யும். ஆனால், துயரமே வாழ்வாகிவிடாது. துயரம் மகிழ்ச்சியாக மாறும். அதுதான், இயேசுவின் சொந்த அனுபவம்கூட. அவரது பாடுகள், துன்பங்கள், இறுதியில் சிலுவைச் சாவு; அத்தோடு அவரது வாழ்வு தோல்வியாக முடிந்துவிடவில்லை. மாறாக, உயிர்ப்பில், வெற்றியில் நிறைவுபெற்றது. அதுபோலவே, நமது வாழ்விலும் இயேசுவின் மதிப்பீடுகளுக்காக நாம் துயரங்களைச் சந்திக்கும்போது, இறுதியில் அந்தத் துயரங்கள் நீங்கி, நமக்கு வெற்றியும், மகிழ்ச்சியும் நிச்சயம் கிட்டும். இந்த நம்பிக்கையோடு நாம் சீடராய் வாழ்வோம். மன்றாடுவோம்: வாக்கு மாறாத இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் வாக்களித்தவாறே எங்கள் துயரங்கள் நீங்கி, எங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்ற...
Like this:
Like Loading...
இன்றைய சமுதாயத்தில் முன்சார்பு எண்ணங்கள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஒருவரை நேரடியாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னதாகவே அவரைப்பற்றி நாம் கேள்விப்பட்ட செய்திகளை வைத்து, அவர் இப்படித்தான் என்று முடிவுகட்டி விடுகிறோம். அவரைப்பற்றி நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். இது அடிப்படை உறவுச்சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால், இன்றைய நற்செய்தி நாம் திறந்த உள்ளத்தோடு மற்றவர்களுக்கு செவிமடுக்க அழைப்புவிடுக்கிறது. தொடக்கத்தில் இயேசு தன்னுடைய பணிவாழ்வை ஆரம்பித்தபோது, மக்களில் ஒருசிலர் தான் அவருடைய போதனையைக் கேட்டிருப்பார்கள். கேட்டதில் ஒவ்வொருவரும் அவரவர் அறிவுக்கேற்ப, இயேசுவைப்புரிந்திருப்பார்கள். சிலர் சரியாகப் புரிந்திருக்கலாம். சிலர் தவறாகப் புரிந்திருக்கலாம். அந்த கருத்து தான், மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கும். அவரைச் சந்தித்தவர்கள் அனைவருமே இந்த ஒரு கண்ணோட்டத்தோடு தான் அணுகியிருப்பார்கள். இந்த பார்வை நிச்சயம் சரியான பார்வையாக இருக்க முடியாது. நாம் ஒருவரை அணுகுகிறபோது, திறந்த உள்ளத்தோடு அணுக வேண்டும். அவர் எப்படி இருக்கிறார் என்பது நமக்கு முக்கியமல்ல. நாம் எப்படி இருக்கிறோம்? நமது பார்வை, சிந்தனை...
Like this:
Like Loading...
நம் வாழ்க்கையில் மிகப் பெரிய ஆசீர்வாதம் நாம் கேட்டவை அனைத்ததையும் பெற்றுக்கொண்டோம் என்பதுதான். “நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்” (யோவான் 14:13, 14:14) இரண்டு முறை இயேசு இதைச் சொல்லுகிறார்.அவ்வாரே நம்பிக்கையோடு கேட்ட யாவரும், கேட்ட அனைத்தையும் பெற்றுள்ளனர் என்பதையும் விவிலியத்தின் பல சான்றுகளில் அறிய வருகிறோம். இவ்வாறு கேட்ட அனைத்தையும் நாம் பெற வேண்டுமானால், அந்த ஆளைப்பற்றிய அனுபவம், அறிவு இருக்கவேண்டும். இந்த ஆளிடம் இதைக்கேட்டால் கிடைக்கும் என்ற அனுபவமும் அறிவும் அவசியம் தேவை.இயேசுவைப்பற்றிய அனுபவமும் அறிவும் நாம் கேட்ட அனைத்தையும் நமக்குத் தர வல்லது. இதைத்தான் கடவுள் நம்பிக்கை அல்லது விசுவாசம் என்று சொல்லலாம். இன்று வரையிலும் அந்த அன்பு தெய்வம் நமக்குச் செய்துவருகிற நன்மைகளை நாம் ஆழ்ந்து சிந்தித்தாலே இந்த இறை அனுபவத்தைப் பெற்றுவிடுவோம்.பெரும்பாலும் கடவுள் நமக்குச் செய்து வரும் நன்மைகளை நாம் சிந்திப்பதே இல்லை. ஏதோ நமது திறமையால் பணத்தால் நாம் சாதித்ததாக...
Like this:
Like Loading...
16 ம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டைச்சேர்ந்தவர்கள் தெற்கு அமெரிக்காவை கைப்பற்றுவதற்கு முயன்றார்கள். அப்போது, அவர்களின் தலைவன் பிரான்சிஸ்கோ பிசாரோ அவர்களிடத்தில் பேசினான்: நண்பர்களே! முக்கியமான முடிவு எடுக்கக்கூடிய கட்டத்தில் இருக்கிறோம். நமக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கிறது அதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு வழியாகச் சென்றால், பெரு நாடும், அதன் வளமும் நமக்குச் சொந்தமாகும். ஆனால், அங்கே ஆபத்து அதிகம். அதேவேளையில் பனாமா சென்றால், நமக்கு கிடைப்பது ஒன்றும் கிடையாது. ஆனால், பாதுகாப்பானது. எதை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள்?” என்று கேட்டானாம். சற்று அமைதி அங்கே நிலவியது. தீடிரென்று ஒரு கும்பல் ஆபத்தான பாதைக்கு தயார் என்று சொல்ல, ஒட்டுமொத்த வீரர்களும் அதனை ஆமோதித்தனர். இயேசு விடுக்கக்கூடிய அழைப்பும் இத்தகையது தான். நாம் வாழ்வதற்கு இரண்டு வாய்ப்புகள். எப்படியும் வாழலாம்? என்பது ஒருபுறம். இப்படித்தான் வாழ வேண்டும்? என்பது மறுபுறம். இதில் நாம் தேர்வு செய்வதற்கு சுதந்திரத்தை கடவுள் நமக்குத் தந்திருக்கிறார்....
Like this:
Like Loading...
Success does not mean winning the battle, but winning the war – என்று பொதுவாகச் சொல்வார்கள். போர் என்பது பல நாட்களாக நடக்கக்கூடியது. அதிலே ஒருநாள் வெற்றிபெற்றால், எதிரியை விட சிறப்பாக செயல்பட்டால், அது உண்மையான வெற்றியல்ல. இறுதியாக யார் சிறப்பாகச் செயல்படுகிறார்களோ, எதிரியைத் தோற்கடிக்கிறார்களோ, அவர்கள் தான் வெற்றியாளர்கள். ஒரு விஞ்ஞானி தன்னுடைய கண்டுபிடிப்பிற்காக பலநாட்கள் செலவழிக்கிறார். அதிலே தோல்வி மட்டும் தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், திடீரென்று, இத்தனை நாட்களாக தான், எதற்காக உழைத்தோமோ அதனை அவர் சாதிக்கிறபோது, வெற்றி பெற்றுவிடுகிறார். இதுதான் வெற்றி. இதனை மையப்படுத்தி தான், இன்றைய வாசகங்கள் அமைந்திருக்கிறது. இயேசுவின் வாழ்க்கை வெற்றியா? தோல்வியா? என்று யாரிடமாவது கேட்டால், அவரது இறப்பை வைத்து அதை தோல்வி என்று தான் சொல்வார்கள். அவர் அநீதியாக தீர்ப்பிடப்பட்டார் என்று தான் சொல்வார்கள். ஆனால், அது உண்மையல்ல. உயிர்ப்பு இயேசுவின் வெற்றியை எடுத்துச் சொல்கிறது....
Like this:
Like Loading...