Tagged: இன்றைய சிந்தனை

ஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள். ஏசாயா 34:16.

பிரியமான சகோதர,சகோதரிகளுக்கு, நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நல்ல நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த உலகில் எத்தனையோ நூல்கள் இருந்தாலும் அது வேதத்துக்கு அடுத்ததாகத்தான் இருக்கும். ஏனெனில் வேதப்புத்தகம் பல்வேறு காலக்கட்டத்தில் கடவுளின் தூண்டுதலால் தூய ஆவியால் நிறைந்து நமக்கு எழுதி தரப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் மூலம் கடவுள் நம்மோடு பேசுவார். கடவுள் நம்மோடு பேச வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தினமும் மறைநூலை ஆய்ந்து படிக்கவேண்டும். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் கடவுள் அருளியதை உரைத்ததே இறைவாக்கு.இது ஒருபோதும் மனித விருப்பத்தால் உண்டானது அல்ல. 2 பேதுரு 1:21. ஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள்: எதுவுமே தனித்து விடப்படுவதில்லை. துணையின்றி எதுவும் இருப்பதில்லை. ஏனெனில்,ஆண்டவரின் வாய்மொழிந்த கட்டளை இது. அவரது ஆவிதான் இவற்றை ஒருங்கிணைத்தது. எசாயா 34:16. இது ஓர் அறிவுக் களஞ்சியமாகும். தினம், தினம் படிக்க படிக்க புதிதாய் நம்வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்யும்.உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லும் அளவுக்கு நீங்கள் அறிவிலும், ஞானத்திலும்,சிறந்து விளங்க செய்யும். மனிதனால்...

உங்கள் கண்ணீரை கண்டேன்

அன்பான சகோதர, சகோதரிகளுக்கு, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம் தூயவரும், நம் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: பயனுள்ளவற்றை நமக்கு கற்பித்து நாம் செல்லவேண்டிய வழியில் நம்மை நடத்தும் கடவுள் நம் கண்ணீரை ஆற்றி, நம் நிறைவாழ்வை ஆற்றைப்போலும், நமது வெற்றியை கடலலைபோலும் பாய்ந்து வரும்படி செய்து நம் வழிமரபினர் மணல் அளவாயும், நமது வழித்தோன்றல் கதிர்மணிகள் போலவும் நிறைந்திருக்க செய்து அவர் திருமுன் நம்மை வைத்து பாதுகாப்பதாக சொல்கிறார். வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்: மண்ணுலகே, களிகூரு: மலைகளே அக்களித்து ஆர்ப்பரியுங்கள்: ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார். சிறுமையுற்ற தம் மக்கள்மீது இரக்கம் காட்டியுள்ளார் எசாயா 49:13. அரியணையில் வீற்றிருக்கும் நமது ஆண்டவர் நம்மை பாதுகாத்து பசியோ, தாகமோ நம்மை தாக்காமல் அவரே நம்மை மேய்த்து வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்தி சென்று நம் கண்ணீர் யாவையும் துடைப்பேன் என்கிறார். திருவெளிப்பாடு 7:15,17. இரவும், பகலும் நமக்காக அவரின் தந்தையிடம் ஜெபித்து நமது விருப்பங்களை நினைத்து நம் கண்ணீரை...

நம்மை வழிநடத்திச் செல்பவர் நம் கடவுளாகிய ஆண்டவரே! இ.ச 9:3.

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். கடவுள் நம்மை ஒவ்வொருநாளும் ஆசீர்வதித்து கரம் பிடித்து வழிநடத்தி செல்லவேண்டுமானால் நாம் அவரை அதிகாலையில் தேடவேண்டும். எனக்கு அன்பு காட்டுவோருக்கு நானும் அன்பு காட்டுவேன். என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள் என்று நீதிமொழிகள் 8:17 ல் வாசிக்கிறோம். ஒரு நண்பரையோ, அல்லது உறவினர்களையோ நமக்கு பிடித்த நபர்களை காணவேண்டுமானால் நாம் எவ்வளவோ நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கிறோம். ஆனால் வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய கடவுளுக்கு நாம் எவ்வளவு நேரத்தையும், பணத்தையும் கொடுக்கிறோம் என்று யோசித்துப்பாருங்கள். ஏனெனில் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் கடவுளின் கையில் உள்ளது. அவரே நம்முடைய எதிரிகளின் கையினின்றும் நம்மை துன்புறுத்துவோரின் கையினின்றும் விடுவிக்கிறார். திருப்பாடல்கள் 31:15. கடவுளிடம் அடைக்கலம் புகுந்துள்ளோர் ஒருபோதும் வெட்கமடைய விடமாட்டார்.நம் துன்பத்தை பார்த்து இருக்கிறார்.நமது இக்கட்டுகளை அறிந்திருக்கிறார்.என் வாழ்க்கை வருத்தத்திலேயே கடந்து செல்கின்றது. ஆம்,என் வாழ்நாள் புலம்புவதிலேயே கழிகின்றது. துயரத்தால் என் வலிமை குறைந்து போகின்றது: என் எலும்புகள் தளர்ந்து போகின்றது திருப்பாடல்கள் 31:10ல் வாசிப்பது...

பயப்படாதே,[அஞ்சாதே]நான் உங்களுடன் இருக்கிறேன்.எசாயா 43:5.

அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். வேதத்தில் 365 நாட்களுக்கும் 365 பயப்படாதே என்ற வார்த்தை இருக்கிறது. இது எதை குறிக்கிறது என்றால் நாம் ஒவ்வொருநாளும் பயப்படாமல் இருக்கும்படி நமக்காக எழுதி வைக்கப்பட்டுள்ளது. நாமும் இந்த வார்த்தையை பயன்படுத்தி ஜெபம் செய்து தைரியம் உள்ளவர்களாக மாறுவோம் நானும் எதற்க்கெடுத்தாலும் பயந்த சுபாவத்துடன் இருந்தேன். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகளை தினமும் வாசித்து தியானிக்கும் பொழுது என் பயம் எங்கே சென்றது என்று தெரியவில்லை. பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன், கலங்காதே, நான் உன் கடவுள். நான் உனக்கு வலிமை அளிப்பேன்: உதவி செய்வேன். என் நீதியின் வலது கரத்தால் உன்னை தாங்குவேன். எசாயா 41:10 ல் வாசிக்கலாம். நம்மை உண்டாக்கியவரும், நம் தாயின் கர்ப்பத்தில் உருவாக்கியவரும் நமக்கு உதவி செய்பவரும் அவரே. நான் தேர்ந்துக்கொண்ட எசுரூன் பயப்படாதே நீ அவமானதுக்குள்ளாக மாட்டாய்: வெட்கி நாணாதே. இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய் உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்: உன்...

தொண்டு ஆற்றவும்,தம் உயிரைக்கொடுக்கவும் வந்தவர் நம் இயேசு கிறிஸ்து. மத்தேயு 20:28.

இயேசுகிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம்ஆண்டவரின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். அன்பானவர்களே! நம்முடைய கடவுள் 2000 வருஷங்களுக்கு முன் இந்த உலகத்தில் வந்து நமக்கு தொண்டு ஆற்றவும், அவருடைய இரத்தத்தை கொடுத்து நமக்கு மீட்பு அளிக்கவும், தமது உயிரையே கொடுத்தார். மத்தேயு 20:28. கடவுளாகிய அவரே தொண்டு ஏற்பதற்கு வராமல் தொண்டு ஆற்றுவதற்காகவே வந்திருக்கிறார். அவரை ஆண்டவராக ஏற்றுக்கொண்ட நாமும் அவர் காட்டிய பாதையில் நடந்து அவரின் திருவுளத்தை நிறைவேற்ற இந்த தவக்காலத்தில் நாம் ஒவ்வொருவரும் நல்லதொரு முடிவு எடுத்து மற்றவர்களுக்கு நம்மால் முடிந்தஉதவிகளை செய்ய மனவுருதிக்கொள்வோம். மனிதர் தம் மடமையாலேயே வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்வர்: அவர்கள் ஆண்டவர்மீது சினங்கொண்டு குமுறுவர். நீதிமொழிகள் 19:3. இதில் நாம் எந்த வகையை சேர்ந்தவர்கள்? முடிவு உங்களின் கையில் தான் இருக்கிறது.எது நல்லது, எது கேட்டது என்று சிந்தித்து செயல்படும் அறிவை ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறார். அவருக்கு பயந்து, கீழ்படிந்து நடப்போமானால் நாம் ஒன்றுக்கும் கவலைப்பட தேவையில்லை. எப்பேர்பட்ட கஷ்டங்களில் இருந்தும் காப்பாற்ற அவர் வல்லவர்,...