Tagged: இன்றைய சிந்தனை

கடவுள் நமக்கு விதித்த வழிகளில் நடப்போம். இணைச்சட்டம் 5:33.

அன்பார்ந்த சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம் ஆண்டவராகிய கடவுள் நமக்கு முன்னே சென்று குன்றுகளை சமப்படுத்தவும்,செப்புக்கதவுகளை,உடைத்து இருப்புத்தாழ்ப்பாள்களை தகர்த்து இருளில் மறைத்து வைத்த கருவூலங்களை யும்,புதையல்களையும்,தர காத்திருக்கிறார்.ஏனெனில் நம்மை பெயர் சொல்லி அழைத்த ஆண்டவர் அவரே என்று நாம் அறியும்படிக்கு இதை செய்கிறார். எசாயா 45:2,3. ஆகையால் நாம் அதை பெற்றுக்கொள்ள நம்மை தகுதிப்படுத்த வேண்டுமாய் விரும்புகிறார். நாம் அவர் விதித்த வழிகளில் நடந்தால் நிச்சயம் அவைகளை எல்லாம் பெற்றுக்கொள்வோம் என்பதில் சிறிதேனும் சந்தேகம் இல்லை. ஒளியை உண்டாக்கி, இருளை படைத்து நல்வாழ்வை அமைத்து கொடுப்பவர் அவரே. உலகை உருவாக்கி அதின்மேல் மனிதரை படைத்து, வானத்தை விரித்தவரும் அவரே.அவரின்றி கடவுள் இல்லை. நீதியுள்ளவரும்,மீட்பு அளிப்பவரும் அவரே, முழங்கால் அனைத்தும் அவர்முன் மண்டியிட செய்கிறவரும் அவரே. இத்தனை வல்லமை உள்ள தேவனின் திருவுளத்தை அறிந்து அவருக்கு பிரியமாய் நடந்து இந்த தவக்காலத்திலும் அவரின்...

ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கத்தை தருபவர் நம் கடவுள். இணைச்சட்டம் 7:9.

கடவுளுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள். இதோ!இந்த நாளிலும் நம்முடைய ஆண்டவராகிய இயேசு காட்டிய பாதையில் நம் வாழ்க்கை பயணம் செல்லுமேயானால்,நம்முடைய வாழ்க்கை மட்டும் அல்லாது நமக்கு பின் வரும் நமது சந்ததியும் ஆசீர்வாதத்தை பெற்று வாழும் என்பதில்சிறிதேனும் சந்தேகம் இல்லை. நம் முன்னோர்களாகிய ஆபிரகாம்,ஈசாக்கு,என்பவர்களுக்கு நம் கடவுள் வாக்குத்தத்தம் செய்தபடியே,அவர்களின் பின்வந்த சந்ததி எத்தனையோ பாவங்களை செய்து ஆண்டவரின் நாமத்தை அலட்சியப்படுத்தினாலும் வாக்கு மாறாத நம் கடவுள் அவர்களுக்கு ஆணையிட்டப்படியே அவர்கள் சந்ததியாரும் ஆசீர்வதிக்கப்பட அவர்கள்மேல் இரக்கம் பாராட்டுவதை திருச்சட்டத்தில் காணலாம். ஆகையால் நாம் கடவுளிடம் கேட்கும் காரியத்தை பெற்றுக்கொள்ள அவர் காட்டிய வழியில் நடந்து அவருடைய சினம் நமக்கு எதிராக செயல்பட்டு நம்முடைய ஆசீரை அழிக்காதபடிக்கு காத்துக்கொள்வோம். ஏனெனில் நம்முடைய கடவுளாகிய ஆண்டவரின் தூயமக்கள் நாம். அதுமட்டுமல்லாது இந்த பூமியில் உள்ள மக்களினங்களில் நம்மையே தம் சொந்த மக்களாக தெரிந்துக்கொண்டார். நாம் மிகவும் நல்லவர்கள்...

பயப்படாதே,[அஞ்சாதே]நான் உங்களுடன் இருக்கிறேன்.எசாயா 43:5.

அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். வேதத்தில் 365 நாட்களுக்கும் 365 பயப்படாதே என்ற வார்த்தை இருக்கிறது. இது எதை குறிக்கிறது என்றால் நாம் ஒவ்வொருநாளும் பயப்படாமல் இருக்கும்படி நமக்காக எழுதி வைக்கப்பட்டுள்ளது. நாமும் இந்த வார்த்தையை பயன்படுத்தி ஜெபம் செய்து தைரியம் உள்ளவர்களாக மாறுவோம் நானும் எதற்க்கெடுத்தாலும் பயந்த சுபாவத்துடன் இருந்தேன். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகளை தினமும் வாசித்து தியானிக்கும் பொழுது என் பயம் எங்கே சென்றது என்று தெரியவில்லை. பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன், கலங்காதே, நான் உன் கடவுள். நான் உனக்கு வலிமை அளிப்பேன்: உதவி செய்வேன். என் நீதியின் வலது கரத்தால் உன்னை தாங்குவேன். எசாயா 41:10 ல் வாசிக்கலாம். நம்மை உண்டாக்கியவரும், நம் தாயின் கர்ப்பத்தில் உருவாக்கியவரும் நமக்கு உதவி செய்பவரும் அவரே. நான் தேர்ந்துக்கொண்ட எசுரூன் பயப்படாதே நீ அவமானதுக்குள்ளாக மாட்டாய்: வெட்கி நாணாதே. இனி நீ...

கடவுள் அவரது அன்பினால் நமக்கு புத்துயிர் அளிப்பார்.செப்பனியா 3:17

அன்பார்ந்த சகோதர,சகோதரிகளே,நமது தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் சோர்ந்து போயிருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் நம் ஆண்டவர் தமது வார்த்தைகளை அனுப்பி நம்மை தேற்றி, ஆதரித்து கண்மணியைப்போல் காத்து, நமது பெலவீனத்தை எடுத்துபோட்டு அவரின் பெலத்தால் நம்மை நிரப்பி, நம் தேவைகள், ஏக்கங்கள் யாவையும் சந்தித்து கிருபையளிக்கிறார். நமக்கு எதிராக எழும்பும் எல்லாக்குற்றங்களில் இருந்தும் நம்மை விடுவிக்க நல்லவராகவும்,வல்லவராகவும் இருக்கிறார். ஆண்டவர் நமது தண்டனை தீர்ப்பை தள்ளி, நம் பகைவர்களை அப்புறப்படுத்தி, நம் நடுவில் இருக்கிறார். இனி எந்த தீங்கையும் காணாதபடிக்கு நம்மை ஆதரிக்கிறார். செப்பனியா 3:15. நம்முடைய கடவுளாகிய ஆண்டவர் நம் நடுவில் இருந்து நமக்கு மீட்பு அளித்து நமது பெயரில் மகிழ்ந்து அவருடைய அன்பினால் நமக்கு புத்துயிர் அளித்து நம்மைக் குறித்து மகிழ்வார். இது எப்போது என்றால் நாம் அவர் விரும்பும் காரியங்களை செய்து அவரின் சித்தத்தை நிறைவேற்றினால் நமதுபேரில் அகமகிழ்வார். இயேசுகிறிஸ்து இந்த உலகில் வாழ்ந்த காலத்தில் ஒருநாள் அவரை நோக்கி...

ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாய் இருப்போம். மாற்கு 9:50.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஒவ்வொருவருக்கும் எங்கள் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் ஒவ்வொருவரும் நம்மால் கூடுமட்டும் எல்லோரிடமும் சமாதானமுள்ளவர் களாய் வாழ்ந்து நம்முடைய ஆண்டவரின் திருசித்தத்தை நிறைவேற்றுவோம். நமக்கு அமைதியை தருபவர் அவரே! சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் சமாதானத்தையே உங்களுக்கு அளிக்கிறேன், நான் உங்களுக்கு தரும் சமாதானம் உலகம் தரும் சமாதானம் போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். மருள வேண்டாம் என்று நம் தேவன் நமக்கு யோவான் 14:27ல் நமக்கு வாக்கு அருளியிருக்கிறார். வாக்கு அளித்த நம் கடவுள் உண்மையுள்ளவர். அதை கடைசி வரை நமக்கு நிறைவேற்றுவார். இன்றும் நம்மில் எத்தனை பேர் எல்லோரிடமும் அன்பு செலுத்துகிறோம் என்று நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்ப்போம். இயேசுவின் பாதையில் நடக்கிற நாம் அவர் காட்டிய வழியில் இருக்கிறோமா? நம்மையே உயிருள்ள பலியாக அவருக்கு படைக்கிறோமா? அவருக்கு உகந்த வாழ்வை வாழ்கிறோமா?என்று நம்மை ஆராய்ந்து நம்மிடத்தில் இருக்கும் தவறுகளை...