Tagged: இன்றைய சிந்தனை

அன்பின் ஆழத்தை உணர்ந்து செயல்படுவோம்.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரின் அன்பை நம் இதயத்தில் உணர்ந்து செயலில் காட்டி நன்றியுள்ளவர்களாய் இருப்போம். அன்பைக் குறித்து தீவிரமாக யோசித்துப் பார்ப்போமானால் அதின் செயல்பாடு யாவும் இனிமையாகவே இருக்கும். ஆனால் நாம்தான் அப்பேற்பட்ட  அன்பின் ஆழத்தை உணராமல் கோபம், பொறாமை, சண்டை, வாக்குவாதம் என்று நம்மை கெடுத்துக்கொள்கிறோம். நாம் ஒருவர்மேல் உண்மையான அன்பு வைத்தோமானால் அவர்களை எந்த சூழ்நிலையிலும் வெறுக்கவே மாட்டோம். நம் மனது அவர்களையே சுற்றி சுற்றி வரும். அவர்கள் சாப்பிட்டார்களா? தூங்கினார்களா? எப்படி இருக்கிறார்கள்? என்று நம் மனது நினைத்துக்கொண்டே இருக்கும். ஒரு தாய் தன் குழந்தையை இப்படித்தான் நினைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆகையால்தான் ஆண்டவரும் ஒரு தாய் தேற்றுவதுப்போல் நான் உங்களை தேற்றுவேன் என்று சொல்கிறார். தாய், பிள்ளை அன்பு மட்டும் அல்ல. அண்ணன், தங்கை, அக்கா, தம்பி நண்பர்களிடம் வைக்கும் அன்பு என்று உறவில் வித்தியாசம் வருமே தவிர அன்பில் எந்த வித்தியாசமும் கிடையாது. கடவுள் நம்மேல்...

நம்முடைய பெலன் நமது தேவனிடத்தில் இருக்கிறது.

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நமது மீட்பராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நல்ல நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நாளிலும் பலவிதமான நோயினால் துன்புறும் உங்களுக்கு நம்முடைய தேவன் என் மகனே!என் மகளே! நீ கலங்காதே, உங்களை நான் குணமாக்குவேன். அதற்காகவே நான் காயப்பட்டேன். என்னுடைய காயங்களை உற்றுப்பாருங்கள். அந்த காயங்களின் தழும்புகளால் நீங்கள் குணமடைவீர்கள். ஏனெனில் உங்களுடைய பலத்தினாலும் அல்ல, பராக்கிராமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினால் அதை நான் செய்வேன், எல்லா காரியமும் ஆகும் என்று சொல்கிறார். இதோ உன்னை புடமிட்டேன்: ஆனாலும் வெள்ளியைப்போல் அல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னை தெரிந்துக்கொண்டேன். என்னிமித்தம்,என்னிமித்தமே,அப்படி செய்தேன் என்று ஆண்டவர் சொல்கிறார். நானே முந்தினவரும், பிந்தினவருமானேன், நீங்கள் என்னை உண்மையோடும், ஆவியோடும் தொழுதுக்கொண்டால் நீங்கள் விரும்பும் சுகத்தை உங்களுக்கு கட்டளையிடுவேன், இது முதல் புதியவைகளையும், நீங்கள் அறியாத மறைபொருளானவைகளையும் உங்களுக்கு தருகிறேன் என்று ஆண்டவர் வாக்குத்தத்தம் செய்கிறார். 18 வருஷங்கள் கூனியாய் இருந்த ஆபிரகாமின் குமாரத்தியை குணப்படுத்தியதுபோல ஒரு நொடிப்பொழுதில் உங்களையும் குணமாக்குவேன். என் மகிமையை உங்களுக்கு...

தூய உள்ளத்தோடு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுவோம்

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த உலகத்தில் வந்து பிறந்த ஒவ்வொருவருவரும் நிலைவாழ்வு பெற்றிட வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவன் தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.யோவான் 3:16. இப்பேற்பட்ட தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் அவர் சாயலாய் உருவாக்கப்பட்ட நாம் அவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து ஒருவரில் ஒருவர் ஊக்கமாய் அன்புக் கூர்ந்து தூய உள்ளத்தோடு ஆழ்ந்த அன்பு காட்டிடுவோம். பழைய ஏற்பாடு புத்தகம் விடுதலை பயணம் 21:23,24,25ல் வாசிப்போமானால் அதில் உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், கைக்கு கை,காலுக்கு கால், சூட்டுக்கு சூடு, காயத்துக்கு காயம் என அடுக்கிக்கொண்டே போகும் அளவுக்கு கடவுள் கட்டளை பிறப்பித்தார். அதே சமயம் புதிய ஏற்பாடு புத்தகம் மத்தேயு 5:38 லிருந்து வாசித்துப்பார்ப்போமானால் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்  என்று சொல்லப்பட்டதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்:...

நம் தாய் வயிற்றில் உருவாகும்போதே நம்மை பெயர் சொல்லிக் கூப்பிட்டவர் நமது ஆண்டவர்.ஏசாயா 49:1

அன்பும், பாசமும் நிறைந்த சகோதர,சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் படும் பாடுகளை நமது ஆண்டவர் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். அவைகளை நமக்கு நன்மையாக மாற்றித் தர ஆவலோடு காத்திருக்கிறார். அந்த பாதையின் வழியில் கடந்து செல்லும் பொழுது அதின் மேடு, பள்ளங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டுமாய் சில கஷ்டங்கள் நேரிடும். ஆனால் அது எப்போதும் நீடிக்காது. மேடு, பள்ளங்களை நாம் அறிந்துக்கொண்டால் அதற்கு தகுந்தவாறு நாம் நடப்போமல்லவா, அதை நாம் கண்டுக்கொள்ளவே அதை அனுப்புகிறார். ஏனெனில் அவர் நம் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னரே நம்மை பெயர் சொல்லி கூப்பிட்டு அறிந்து வைத்திருக்கிறார். அதனால் நாம் எந்த சூழ்நிலையிலும் மனம் சோர்ந்து போகாதபடிக்கு அவரிடத்தில் சந்தோஷமாக இருப்போம். நாம் நீதித் தலைவர்கள் [நியாயாதிபதிகள்] புத்தகத்தில் 14ம் அதிகாரத்தில் சிம்சோனை பற்றி வாசிக்கிறோம். சிம்சோன் தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னரே கர்த்தருடைய தூதன் அவர்களை சந்தித்து இதோ நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனை பெறுவாய். அவன் தலையின்மேல் சவரகன்...

ஆண்டவர் ஒருவரே நம்மை வழிநடத்துவார்.

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்  இனிய நம்மத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம்முடைய தேவனாகிய ஆண்டவர் நம் ஒவ்வொருவருடன் கூடவே இருந்து நமது கரம் பிடித்து நம்மை வழிநடத்துவார். அதுக்கு நாமும் அவருடைய வார்த்தையை அசட்டை செய்யாதபடிக்கு ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தையை வாசித்து தியானித்து அதன்படியே நடந்தோமானால் நம்மை எந்த தீங்கும் அணுகாமல் வலக்கரம் பிடித்து நம்மை வழிநடத்துவார். நாம் தெரியாமல் வலப்பக்கம் இடப்பக்கம் சாயும்பொழுது வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உணர்த்தி காத்தருள்வார். நாம் 1 சாமுவேல் 14ம் அதிகாரத்தை வாசிப்போமானால் அதிலே இஸ்ரேயேல் ஜனங்களுக்கு எதிராக பெலிஸ்தியர் எல்லைக் காவலை வைத்து இஸ்ரயேல் ஜனங்களை சிறைப்பிடிக்க எல்லா ஏற்பாடும் செய்து வைத்திருந்தினர். ஆனால் சவுலின் குமாரன் யோனத்தான் ஆண்டவர் பேரில் உள்ள நம்பிக்கையால் தனது ஆயுததாரியாகிய வாலிபனிடம் விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்த தாணையத்திற்குப் போவோம் வா: ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்.அநேகம்பேரைக் கொண்டாகிலும் கொஞ்சம் பேரைக்கொண்டாகிலும் நம்மை மீட்க ஆண்டவருக்கு எந்த தடையும் இல்லை என்று...