Tagged: இன்றைய சிந்தனை

கடவுளால் எல்லாம் இயலும்.மாற்கு 10:27

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நமது வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களையும், பாடுகளையும் நினைத்து நமது மனம் சோர்ந்து போய் இருக்கலாம். ஆனால் அந்த துன்பத்தின் வழியாக நாம் நடக்கும் போது அதில் ஏற்படும் அனுபவத்தினால் நிறைய காரியங்களை கற்றுக்கொள்ளலாம். அதனால்தான் தாவீது சொல்கிறார். நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது. அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்கிறேன். சங்கீதம் 119:71. ஒரு ராணுவ வீரன் ஒருவன் முகாமில் தீவிரமாக யாருக்கும் பயப்படாமல் தைரியத்தோடு சண்டை செய்தானாம். ஆனால் அவனுக்கு ஒரு வியாதியினால் தன் வாழ்நாளை எண்ணிக்கொண்டு இருந்தானாம். எப்படியும் உயிர் போகப்போகிறது. இராணுவத்தில் இறந்தால் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த திருப்தி இருக்கும் என்று நினைத்து தீவிரமாக சண்டை செய்தான். இதைப்பார்த்த அந்த நாட்டு ராஜா இவன் நம் படையில் இருந்தால் நமக்கு எப்பொழுதும் வெற்றி கிடைக்கும் என்று நினைத்து அவனை ஒரு நல்ல மருத்துவரிடம் அழைத்து சென்று அவனுக்கு உண்டான எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொண்டு அவனுக்கு சிகிச்சை அளிக்க...

கடவுளுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்வோம்

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு நம் தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் என்று எபிரேயர் 13:8 ல் வாசிக்கிறோம். நம்முடைய ஆண்டவர் ஒருநாளும் மாறாதவராய் இருக்க அவர் சாயலாய் படைக்கப்பட்ட நாமும் அவ்வாறே இருந்து அவருக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து அவரின் நாமத்திற்கு மகிமை உண்டு பண்ணுவோம். ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்படிந்து சகோதர அன்பிலே நிலைத்திருந்து அன்னியரை வரவேற்று விருந்தோம்பல் செய்தோமானால் நாம் நம்மை அறியாமலே வானத்தூதர்களை மகிழ்ச்சி படுத்தியவர்களாய் இருப்போம். சிறைப்பட்டவர்களோடு நாமும் சிறைப்பட்டவர்களாய் எண்ணி அவர்களுக்கு ஆறுதல் அளிப்போம்.துன்புறுத்தப்படுகிறவர்களை மறவாமல் அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும். பொருளாசையை விலக்கி நமக்கு உள்ளதே போதும் என்று நினைப்போம். ஏனெனில் நம் ஆண்டவர் நான் ஒருபோதும் உன்னைக் கைவிட மாட்டேன்! உன்னை விட்டு விலகவும் மாட்டேன் என்று நமக்கு வாக்கு அருளியிருக்கிறார். ஆதலால் நாம் துணிவோடு ஆண்டவரே எனக்கு துணை, நான் அஞ்ச மாட்டேன்: மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும் என்று தைரியமாக இருக்கலாம். நமக்கு...

வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.[ யோவான் 16:13]

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு நமது ஆண்டவராகியஇயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் நமது ஆண்டவரை நோக்கிப்பார்த்து அவர் பாதத்தில் அடைக்கலம் புகுந்தால் தமது தூய ஆவியானவர் மூலம் நாம் செய்ய வேண்டிய காரியங்களை நமக்கு வெளிப்படுத்தி நமது தேவைகளை சந்தித்து ஒரு தீங்கும் நம்மை தொடாதபடிக்கு பாதுகாத்துக்கொள்வார். தூய ஆவியானவரை நாம் பெற்றுக்கொள்ளும் பொழுது அவர் நமது பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், நமக்கு வெளிப்படுத்தி நாம் கடந்து செல்லும் பாதையில் நம்மோடு கூடவே இருந்து நமக்கு போதிப்பார். இதுவரைக்கும் நீங்கள் என் பெயரால் ஒன்றுமே கேட்கவில்லை. கேளுங்கள், உங்கள் சந்தோஷம் எல்லாவற்றிலும் நிறைவாய் இருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள். என் நாமத்தினால் வேண்டிக் கொள்வதை நானும் பிதாவிடம் கேட்டு உங்களுக்கு பரிபூரன ஆசீர்வாதத்தை கட்டளையிடும்படி அருள்செய்வேன், என்று வாக்கு கொடுத்திருக்கிறார். அவர் வாக்கு மாறாத தேவன். அவர் மனம் மாற மானிடர் அல்ல அவர் தேவாதி தேவன் கர்த்தாதி கர்த்தர்.அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட அப்படியே நிற்கும்....

ஆண்டவரின் அன்பிலே நிலைத்திருப்போம்.[யோவான் 15:9]

அன்பானவர்களே!ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நமக்கு ஆண்டவர் நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புக்கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை என்று சொல்கிறார். நாம் அவரின் கட்டளைக்கு கீழ்படிந்து நடந்தோமானால் அவரின் அன்பிலே நிலைத்திருப்போம். ஏனெனில் உண்மையான திராட்சைக்கொடி அவரே. நாம் யாவரும் அதன் கிளைகள் ஆவோம். நாம் அவரோடு இணைந்து செயல்பட்டால் நாமும் மிகுந்த கனிகளை கொடுப்பவர்களாய் மாறுவோம். நாம் அவர் கட்டளை இடுவதையெல்லாம் செய்தால் நம்முடைய நண்பராய் இருப்பார். நண்பர்களுக்குள் எந்த ஒளிவும், மறைவும் இருக்காதே. அவர்கள் தங்கள் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துக்கொள்வார்கள். ஆண்டவரும் அதேபோல் நம்முடைய நண்பராய் இருந்து அவருடைய எல்லா விஷயங்களையும் நம்மோடு பகிர்ந்துக் கொள்வார். அப்பொழுது நாமும் மிகுந்த கனியை கொடுக்கும்படி வாழலாம். நாம் ஆண்டவருக்குள்ளும்,அவருடைய வார்த்தைகள் நம்முடைய இருதயத்துக்குள்ளும் நிலைத்திருந்தால் நாம் விரும்பி கேட்கும் அத்தனை காரியங்களையும் நமக்கு கட்டளையிடுவார். நாம் கேட்காதவற்றையும் கொடுத்து நம்மை ஆசீர்வதிப்பார். தேவைகள் யாவையும் சந்திப்பார். உயிரையே கொடுத்த ஆண்டவர் மற்றவற்றையும் கொடுக்காமல்...

ஆண்டவர் தமக்குரியோர்மேல் இறுதிவரை அன்பு செலுத்தினார்.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இதோ, நமக்காக நம்மை நேசிக்க நம்மேல் அன்புக்காட்ட, நம்மை மீட்டிட அதுமட்டும் அல்லாது தமது உயிரையே கொடுக்க விண்ணிலிருந்து மண்ணுலகம் வந்து தமது உயிரைக் கொடுத்து தமக்குரியோர்மேல் இறுதிவரை அன்பு செலுத்திய அவரின் அன்பின் மகத்துவம் எத்துனை இன்பமானது என்று ஒவ்வொருவரும் அறிந்து ருசித்து பார்க்க வேண்டுமாய் விரும்புகிறேன். இந்த நாளிலும் நம்மோடு அன்புக்காட்ட யாரும் இல்லையே என்று மனம் சோர்ந்துபோய் உள்ளீர்களா? கவலைப்படாதிருங்கள். நமக்காக ஏங்கி நாம் நன்றாக இருக்கும்படி தமது கண்ணை நம்மேல் வைத்து நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கும் ஒருவர் உண்டு என்பதை மறக்கவேண்டாம். ஏனெனில் மனிதர்கள் நம்மேல் அன்பு காட்டுவார்கள்.திடீரென்று என்ன காரணம் என்றே தெரியாமல் வெறுப்பார்கள். மனிதர்களின் அன்பு அடிக்கடி மாறிவிடும். நிலையற்ற மனிதர்மேல் நம்பிக்கை வைக்காதீர்கள்: அவர்களின் உயிர் நிலையற்றது. ஒரு பொருட்டாக கருதப்படுவதற்கு அவர்களின் தகுதி என்ன? ஏசாயா 2:22. என் வாழ்நாளை சில விரற்கடை அளவாக்கினீர் என் ஆயுட்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை. உண்மையில் மானிடர்...