Tagged: இன்றைய சிந்தனை

உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். மீகா 7 : 15

தேசத்தில் உள்ள எல்லா மக்களே!கடவுளின் நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, ஆண்டவரைத் தேடுங்கள்.அவரின் நீதியை தேடுங்கள். மனத்தாழ்மையை தேடுங்கள். அப்பொழுது ஆண்டவர் நம்மை எல்லாப்பொல்லாப்புக்கும் விலக்கி அதிசயங்களைக் காணப்பண்ணுவார். அவர் நம்நடுவில் இருக்கிறார். வல்லமையுள்ளவர். அவரே இரட்சிப்பார். அவர் நமது பேரில் சந்தோஷப்பட்டு மகிழ்ந்து தம்முடைய அன்பின் நிமித்தம் அமர்ந்திருப்பார். இஸ்ரயேல் ஜனங்கள் எகிப்தில் இருந்து புறப்பட்ட காலத்தில் அநேக அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்தார். நாமும் ஆண்டவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் பயந்து, கீழ்படிந்து நடக்கும்பொழுது அவரின் கிருபை நம்மை சூழ்ந்துக்கொள்ளும்.நாம் அவருக்காக பொறுமையுடன் காத்திருந்தால் நமது கூப்பிடுதலை கேட்பார். ஆண்டவர் நோவாவிடம் நீ ஒரு பேழையை உண்டு பண்ணு என்று சொன்ன நேரத்தில் எந்த ஒரு மழைக்கான அறிகுறியும் இல்லவே இல்லை. ஆண்டவரின் வார்த்தைக்கு நோவா கீழ்படிந்து ஒரு பேழையை உண்டு பண்ணுகிறார். அந்த ஊரில் அப்பொழுது வாழ்ந்த மக்கள் அவரை கிண்டல் செய்திருப்பார்கள். நோவாவை பார்த்து உனக்கு பைத்தியமா? என்று கூட சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஆண்டவரின் வார்த்தைக்கு அப்படியே கீழ்படிந்து...

மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்

இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் இந்த உலகத்தில் நடக்கப்போகும் காரியங்களை தமது சீடர்களுக்கு அறிவித்தார். அதற்கு அவர்கள் இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பலர் வந்து என் பெயரை வைத்துக்கொண்டு நானே அவர், என்றும் காலம் நெருங்கி விட்டது என்றும் கூறுவார்கள்:அவர்கள் பின்னே போகாதீர்கள். போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் முடிவு உடனே வராது என்றார். நாட்டை எதிர்த்து நாடும்,அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்கள், பஞ்சம், கொள்ளை நோய் ஆகியன ஏற்படும். அச்சுறுத்தக் கூடிய பெரிய அடையாளங்களும், வானில் தோன்றும் இவைகள் நடப்பதற்கு முன் உங்களைப்பிடித்து துன்புறுத்துவார்கள். தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வர். சிறையில் அடைப்பார்கள் என்று லூக்கா 21:8 to 12 வரை உள்ள வசனங்களில் சொல்லியிருக்கிறார். ஆனாலும் நாம் இவைகளைக் கண்டு ஒருபோதும் பயப்படாமல் மனஉறுதியோடு இருக்க வேண்டும். ஏனெனில் ஆண்டவர் அந்நேரத்தில் நம்மோடு இருந்து நாம் என்ன...

ஒரே கடவுளாகிய இயேசுகிறிஸ்துவை அறிவதே நிலைவாழ்வு

விண்ணையும், மண்ணையும், கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம். கடந்த காலங்களில் அவர் அனைத்து மக்களினங்களையும் அவரவர் வழிகளில் நடக்கும்படி விட்டிருந்தார். என்றாலும் அவர் தம்மைப்பற்றிய சான்று எதுவும் இல்லாதவாறு விட்டு விடவில்லை ஏனெனில் அவர் நன்மைகள் பல செய்கிறார். வானிலிருந்து மழையைக் கொடுக்கிறார். வளமிக்க பருவ காலங்களைத் தருகிறார். நிறைவாக உணவளித்து உங்கள் உள்ளங்களை மகிழ்ச்சி பொங்கச் செய் கிறார்.திருத்தூதர் பணிகள் 14:15,16,17. இப்படிப்பட்ட தேவனை அறிந்துக்கொள்வது எத்தனை அவசியம்! உண்மையான ஒரே கடவுளாகிய அவரை அறிந்து அவர் அளிக்கும் நிலைவாழ்வை பெற்றுக்கொள்வோம். உலகம் தோன்றுமுன்னே தந்தை இயேசுவை மாட்சிப்படுத்தியுள்ளார். இந்த உலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் என் பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளை கடைபிடித்தார்கள். உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துக்கொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள். அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல...

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும்.லூக்கா 18:1

தாம் தேர்ந்துக்கொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடும்பொழுது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா?அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா?விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்கு சொல்கிறேன் என்று இயேசு கிறிஸ்து லூக்கா 18:7,8 ஆகிய வசனங்களில் நமக்கு வாக்கு அருளியிருக்கிறார். நாம் மனந்தளராமல் எப்பொழுதும் அவரிடம் மன்றாட வேண்டும். அப்படி செய்தால் நாம் விரும்பிய காரியத்தை நமக்கு தந்து நம்மை ஆசீர்வதித்து காத்துக்கொள்வார். ஒரு நகரில் ஒருவர் குடியிருந்தார்.அவர் கடவுளுக்கு பயப்படமாட்டார். மக்களையும் மதிக்க மாட்டார். அவர் இருந்த தெருவில் ஒரு விதவைப்பெண் வாழ்ந்து வந்தார். அந்த விதைவைப் பெண் ஒருநாள் அந்த மனிதரிடம் சென்று அவளுக்கு எதிராக செயல்படும் எதிரியை தண்டித்து தனக்கு நீதி செய்யுமாறு கேட்டாள். அந்த மனிதரோ காதில் வாங்கவே இல்லை.ஆனாலும் இந்தப்பெண் மனம் சோர்ந்து போகாமல் தொடர்ந்து அந்த மனிதனிடம் சென்று தனக்கு நீதி வழங்க்கும்படிக்கு தன் எதிரியை தண்டிக்கும்படி ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தாள். ஆனாலும் அந்த மனிதரும் நெடுங்காலமாய் எதுவும் செய்யாமல் கண்டுக்கொள்ளாமல்...

தூய ஆவியையை பெற்றுக்கொள்ளுங்கள்

நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது நம்பிக்கையுடன் கேட்டால் கேட்டதை எல்லாம் பெற்றுக்கொள்வீர்கள். மத்தேயு 21:22. தூய ஆவியை நாம் பெற்றுக்கொண்டால் ஆவியானவர் எல்லா காரியங்களிலும் நம்மோடு கூடவே இருந்து நாம் நடக்க வேண்டிய பாதையையும், செய்ய வேண்டிய செயல்களையும் நமக்கு உணர்த்துவார். நாம் தவறு செய்யும்பொழுது அது தவறு என்று நம் இதயத்தில் உணர்த்தி நம்மை நல்வழிப்படுத்துவார். ஆவியானவர் இருக்கும் இடத்தில் நிச்சயம் விடுதலை உணடு. 1 கொரிந்தியர் 3:16. பாவிகளுக்கு கடவுள் செவிசாய்ப்பதில்லை: இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவுசாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும்.யோவான் 9 : 31.ஆகையால் அன்பானவர்களே! உங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு நீங்கள் விரும்பியதை தந்தருள்வார். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன் என்று நமக்கு வாக்கு அருளியிருக்கிறார். ஆகையால் நாமும் அவர்மீதே அன்புக்கொண்டு அவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போம். நமக்கு உதவும் பொருட்டே நம்மோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை நமக்கு அருளும்படி செய்திருக்கிறார். அவரே நமக்கு உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம்...