Tagged: இன்றைய சிந்தனை

பெறுவதைவிட தருவதே மேலானது !

சில உண்மைகளை அனுபவத்தின் மூலம் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். அவற்றுள் ஒன்றுதான் கொடுப்பதன் மேன்மை. கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும் என்ற ஆண்டவரின் அருள்வாக்கின் அருமையை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். இன்றைய முதல் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் கொடுத்தலின் மேன்மை போற்றப்படுகிறது. முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியாவுக்கு அப்பம் கொடுத்துப் பசி நீக்கிய கைம்பெண்ணுக்கு ஆண்டவர் அற்புதமான முறையில் தொடர்ந்து உணவு கிடைக்கச் செய்த நிகழ்வை வாசிக்கிறோம். நற்செய்தி வாசகத்திலோ ஆண்டவர் இயேசு மறைநுhல் அறிஞர்களைச் சாடும்போது அவர்கள் பிறருக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்வதைக் கண்டனம் செய்கிறார். அத்துடன், ஏழைக் கைம்பெண் போட்ட காணிக்கையையும் பெரிதும் பாராட்டுகிறார். இரு வாசகங்களிலும் வருகின்ற கைம்பெண்கள் தாங்கள் பெறுகின்ற நிலையில் இருந்தபொழுதும்கூட கொடுக்கின்ற மனம் உள்ளவர்களாக இருந்தனர். எனவே, பாராட்டையும், இறை ஆசியையும் பெற்றுக்கொண்டனர். பொதுவாகவே, குறைவாக உள்ளவர்களுக்குத்தான் நிறைவான மனம் இருக்கிறது என்று நாம் சொல்கிறோம். இந்தக் கைம்பெண்கள் அதை எண்பித்துக்காட்டுகின்றனர்....

அறிவுள்ள செயல்பாடு

“நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்” இயேசுவின் இந்த அறிவுரை அதிர்ச்சியை தருகிறதா? உண்மை. ஆனாலும் அவர் சொல்ல வந்த கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். நேர்மையற்ற செல்வம் என இயேசு குறிப்பிடுவது இவ்வுலக செல்வங்களையே. இயேசுவின் பார்வையில்,விண்ணகச் செல்வத்தோடு ஒப்பிடும்போது இவை நேர்மையற்ற செல்வம். இருப்பினும் மனித கண்ணோட்டத்தில், நேர்மையான வழிகளில் சம்பாதித்தவை அனைத்தும் நேர்மையான செல்வம்தான். இந்த செல்வத்தைக்கொண்டு நண்பர்களைத் தேடிக்கொள்ள வேண்டும். விண்ணக செல்வத்தைத் சேர்த்துக்கொள்ள வேண்டும். நேர்மையான செல்வம் என்பது விண்ணகச் செல்வம் ஒனறே. “கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம்”; (பிலிப்பியர் 3 :8). “எகிப்தின் செல்வங்களைவிட, “மெசியாவின்” பொருட்டு இகழ்ச்சியுறுவதே மேலான செல்வம்”(எபிரேயர் 11 :26) இவ்வுலகில் கடவுள் நமக்குத் தந்த செல்வத்தைப் பயன்படுத்தி எவ்வாறு நண்பர்களை தேடிக்கொள்வது விண்ணக செல்வத்தைச் சேர்த்துக்கொள்வது என்பதற்கான வழிகளை ஆராய்வோம். அதைச் செயல்படுத்துவோம். அப்பொழுது நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நாம் நம்பத்தகுந்தவராய்...

செல்வம் என்னும் பொறுப்பு

லூக்கா நற்செய்தியாளரின் பல நல்ல சிந்தனைகளுள், முக்கியமானது செல்வத்தைப் பற்றிய அவரது கருத்தாக இருக்கிறது. செல்வத்தைப்பற்றியும், செல்வந்தர்களைப் பற்றியும், அதிகமாகச் சொல்கிறவர் லூக்கா நற்செய்தியாளர் என்றால், அது மிகையாகாது. லூக்கா நற்செய்தியை அனைவரையும் அனைத்துச் செல்கின்ற நற்செய்தி. ஏழைகளுக்கு ஆதரவு சொல்லும் அவர், செல்வந்தர்களையும் விட்டுவிடுவதில்லை. அவர்களின் குற்றங்களை, அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறார். அதே வேளையில், அவர்களின் வாழ்வுக்கான வழியையும் காட்டுகிறார். அதன் ஒரு பகுதிதான் நாம், இன்று வாசிக்கக்கேட்ட நற்செய்திப் பகுதி. செல்வத்தைப் பல வழிகளில் நாம் பயன்படுத்தலாம். நமக்கும் பயன்படுத்தலாம். மற்றவர்கள் பயன்பெறக்கூடிய வகையிலும் பயன்படுத்தலாம். எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான், நமது மீட்பு அடங்கியிருக்கிறது என்பதை, நற்செய்தியாளர் சுட்டிக்காட்டுகிறார். செல்வம் என்பது கடவுளால் கொடுக்கப்படுகிற வெறும் ஆசீர்வாதம் மட்டுமல்ல, மாறாக, அது மிகப்பெரிய பொறுப்பு. செல்வந்தர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கு அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அவர்களிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது, என்பது நம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள்....

”என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்” (லூக்கா 15:6)

இயேசு யாரைத் தேடி வந்தார்? கடவுளிடமிருந்து அகன்றுசெல்வோர் யாராயிருந்தாலும் அவர்களுக்கு வாழ்வளிக்கவே இயேசு வந்தார். ஆனால் சில வேளைகளில் சில மனிதர்கள் தங்களுடைய உண்மையான நிலையை மறந்துபோகிறார்கள். கடவுளின் முன்னிலையில் தாங்கள் நல்லவர்கள் என இவர்கள் இறுமாப்புக் கொள்வதோடு, பிறரைக் குறைகூறுவதிலும் பிறர் பாவிகள் எனக் குற்றம் சாட்டுவதிலும் இவர்கள் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இயேசுவின் போதனைப்படி, நாம் எல்லோருமே கடவுளின் இரக்கத்தை நம்பி வாழ வேண்டியவர்களே. நமக்குக் கடவுளின் உதவி தேவை இல்லை என நாம் கூற இயலாது. ஏனெனில் நாம் எல்லாருமே மந்தையைவிட்டு அகன்று போகின்ற ஆட்டிற்கு ஒப்பானவர்களே. நம்மைத் தேடி வருகின்ற அன்புமிக்க கடவுள் நம்மைக் கண்டுபிடித்து நம்மேல் தம் அன்பைப் பொழிகிறார் என்னும் உண்மையை நாம் ஏற்றாக வேண்டும். காணாமற்போன ஆட்டைத் தேடிச் செல்கின்ற ஆயரைப் போல நம்மைத் தேடி வருகின்ற கடவுளை நாம் எவ்வாறு புரிகின்றோம்? எல்லையற்ற அன்பு அவருடைய உள்ளத்தில் இருக்கிறது என்பதில்...

ஞானத்தால் மீட்பு அடைவோம் !

இவ்வுலகில் நாம் புரிந்துகொள்ள முடியாத செய்திகள் பல இருக்கின்றன. நமது உடல் நலம், மகிழ்ச்சி, செல்வம், வெற்றிகள்… இவையெல்லாம் எங்கிருந்து வருகின்றன. அவற்றைத் தொடர்ந்து பெறுவதற்கு என்ன உத்திகளைக் கையாளலாம் என எவ்வளவுதான் ஆழமாக எண்ணிப்பார்த்தாலும், மானிட மனம் குறைபாடுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறோம். ஆனால், இறைவன் தருகிற ஞானம் நம்மில் நிலைத்திருந்தால், நாம் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக, நம் வாழ்வின் நிலையாமை, நம் வாழ்வின் இறுதி இலக்கு… போன்றவற்றை இறைவன் மட்டுமே நமக்கு வெளிப்படுத்த முடியும். “நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உமது தூய ஆவியை அனுப்பாமலுமிருந்தால், உமது திட்டத்தை யாரால் அறிந்துகொள்ள முடியும்? என்னும் செய்தி இந்த உண்மையை நன்கு வெளிப்படுத்துகிறது. இறைவன் தரும் ஞானத்தால் மட்டுமே நாம் மீட்பு அடைய முடியும் என்று இன்றைய முதல் வாசகம் நிறைவுபெறுகிறது. எனவே, தூய ஆவி என்னும் இறைவனின் கொடைக்காக மன்றாடுவோம். ஆவியின் ஆற்றலால் செயல்பட்டு, மீட்படைந்தோராய்...