Tagged: இன்றைய சிந்தனை

ஆன்மாவின் பலம்

சோர்வு என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று. அந்த சோர்வு உடல் அளவிலான சோர்வாக இருக்கலாம். உள்ளத்து அளவிலான சோர்வாக இருக்கலாம். அல்லது ஆன்மா சார்ந்த சோர்வாக இருக்கலாம். உடல் சார்ந்த சோர்வுக்கு, நல்ல உணவு உண்டால் அது சரியான தீர்வாக இருக்கும். நடக்கக்கூடிய நிகழ்வுகள் எதிர்பாராததாக இருக்கிறபோது, உள்ளம் சோர்வடைகிறது. இதையும் நாம் உடனே சரிசெய்து கொள்ளலாம். ஆனால், ஆன்மா சோர்ந்து விட்டால் நமது வாழ்க்கை அவ்வளவுதான். வாழ்வில் எத்தனை கவலை வந்தாலும், ஆன்மா தான் நமக்குள்ளிருந்து ஊக்கம் கொடுத்து இயக்கிக்கொண்டிருக்கும். அந்த ஆன்மாவை நாம் சோர்வடையச்செய்ய விடக்கூடாது. அதற்கு கடவுளோடு நாம் கொண்டிருக்கிற உறவு, நமது செப வாழ்வு உறுதுணையாக இருக்கும். இயேசு தனது பயணத்தில் தெளிவாக இருக்கிறார். யெருசலேம் நோக்கிய தனது பயணம் எப்படி அமையும் என்பதில் அவருக்கு சிறிதும் சந்தேகமில்லை. அதைத்தாங்குவதற்கு ஆன்மா வலிமையாக இருக்க வேண்டும் என்பதில் இயேசு உறுதியாக இருக்கிறார். எனவே தான், இயேசு...

வாழ்வின் அணுகுமுறை

நமக்குப்பிடித்தமான திரைப்படத்தை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். திடீரென்று யாராவது, கத்தினாலோ, பேசிக்கொண்டிருந்தாலோ, நமக்கு எரிச்சல் வருவது நிச்சயம். யாரென்றாலும், உடனடியாக நமது கோபத்தை வெளிப்படுத்திவிடுவோம். இயேசு மிகப்பெரிய போதகர். அவரைப்பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவரது போதனையைக் கேட்ட கிடைத்த, பொன்னான வாய்ப்பை, யாரும் நிச்சயம் நழுவ விடமாட்டார்கள். கேட்போரை, மீண்டும், மீண்டும் கேட்கத்தூண்டுகிற போதனை அது. அந்த சமயத்தில், யாராவது இடைஞ்சலாகப் பேசினால், நிச்சயம் யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும். அந்த கோபம் தான், பார்வையற்ற பா்த்திமேயுவைத் தாக்குகிறது. பர்த்திமேயு பார்வையற்ற குருடன். பிச்சைக்காரன். பார்வையற்றவர்கள் மற்றவர் உதவியோடு தான் வாழ வேண்டியுள்ளது. அதிலும், பார்வையை இழப்பது, மிகப்பெரிய கொடுமை. நன்றாக வாழ்ந்த பர்த்திமேயு, பார்வையோடு வாழ்ந்த பர்த்திமேயு, இப்போது பார்வையிழந்தவனாக, பிச்சை எடுத்து வாழக்கூடிய கோரநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டான். வாழ்வு நமக்கு எந்த நேரமும் ஒரேபோல இருப்பதில்லை. ஒரே இரவில் பணக்காரனாக மாறியவர்களும் உண்டு. ஒரே இரவில் அனைத்தையும் இழந்து...

இறைவனின் வழிகாட்டுதல்

மனித வாழ்க்கையில் பயம் என்பது வாழ்வோடு கலந்துவிட்ட ஒன்றாக இருக்கிறது. தவறான ஒரு செயலில் ஈடுபடுகிறோம் என்றால், நம்மை அறியாமல் நமக்குள்ளாக ஒருவிதமான பயம் வரும். சரியான ஒன்றை, எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாம் துணிந்து செய்கிறபோதும், நமக்குள்ளாக பயம் வரும். ஆனால், இந்த இரண்டு பயத்திற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. தவறான செயலுக்காக நாம் பயப்படுகிறபோது, நம்முடைய ஆன்மாவிற்கு அது மிகப்பெரிய இடறலாக மாறுகிறது. சரியான செயலை எதிர்ப்புகளுக்கு மத்தியில் செய்கிறபோது, நமக்குள்ளாக நமது ஆன்மா நம்மை அந்த பயத்திலும் ஈடுபட வைக்கக்கூடிய மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது. இன்றைய நற்செய்தியில்(மாற்கு 10: 32-45) சீடர்களுக்குள்ளாக ஒருவிதமான பயம், கலக்கம். இதுவரை வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் இயேசுவுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. அதிகாரவர்க்கத்தினர் இயேசுவை எதிரியாக நினைத்திருந்தாலும், மக்கள் அவரை மெசியாவாக பார்க்கத் தொடங்கியிருந்தார்கள். எனவே, அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம், சிறப்பான வரவேற்பு அவர்களுக்கு இருந்தது....

உறவில் மகிழ்வோம்

தொடக்க கால கிறிஸ்தவ வரலாற்றில் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு பலவிதமான துன்பங்களும் நெருக்கடிகளும் நேர்ந்தது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் தங்கள் உறவுகளை கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதன் பொருட்டு இழக்க நேர்ந்தது. இதை முன்னிலைப்படுத்தி தான் பேதுரு ஆண்டவரிடம் இப்படியொரு வினாவை எழுப்புகிறார். இயேசுவுக்காக அனைத்தையும் விட்டுவிட்டு பின்பற்றிய எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்பதுதான் பேதுரு இயேசுவிடம் மறைமுகமாக எழுப்புகிற கேள்வி. இயேசு அவருக்குத் தருகிற பதில்: இம்மையி;ல் நூறு மடங்கும், மறுஉலகில் நிலைவாழ்வும் என்பது. அதாவது, தொடக்க கால கிறிஸ்தவர்கள் இயேசுவுக்காக தங்கள் குடும்ப உறவுகளை இழந்தாலும் கூட, திருச்சபை என்கிற மிகப்பெரிய குடும்பத்தின் அங்கத்தினராக, கடவுளை தந்தையென்று ஏற்றுக்கொண்டு ஒருவர் மற்றவருக்கு சகோதர, சகோதரிகளாக மாறும் மிகப்பெரிய, மிகவும் உன்னதமான உறவைப்பெற்றனர். இதுதான் இந்த உலகில் நூறுமடங்கு வீடுகளையும், சகோதரர்களையும், நிலபுலன்களையும் பெற்றுக்கொள்வீர்கள் என்று இயேசு சொல்வதன் பொருள். திருத்தூதர் பணி 2: 44 – 46 ல் பார்க்கிறோம்: “நம்பிக்கை கொண்டோர் அனைவரும்...

இயேசுவின் பிறர்நலம்

தற்பெருமை நிறைந்த உலகம் இது. இங்கே வாழக்கூடிய தலைவர்கள் தங்களை பெருமைப்படுத்திக்கொள்வதில் அதிக நாட்டம் கொள்கின்றனர். தங்களோடு சில முகஸ்துதிகளை வைத்துக்கொண்டு, அவர்களின் புகழ்ச்சி மழையில் இன்பம் காண்கின்றனர். தாங்கள் செய்வதையும் புகழ்ச்சிக்காகவே செய்கின்றனர். இந்த உலகத்தில் உதவி செய்கிற மனிதர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். 1. தற்பெருமைக்காகச் செய்பவர்கள் 2. தன்னை வளா்த்துக் கொள்வதற்காகச் செய்கிறவர்கள் 3. தன்னலமில்லாமல் செய்கிறவர்கள். தற்பெருமைக்காகச் செய்கிறவர்கள், தங்களது பெயர், புகழ் மற்றவர்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு செய்கிறவர்களாக இருக்கிறார்கள். எதைச்செய்தாலும் தாங்கள் பெருமைப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணமாக இருக்கிறது. தன்னை வளர்த்துக்கொள்வதற்காகச் செய்கிறவர்கள் எதிர்பார்த்து செய்கிறவர்கள். இன்றைக்கு நான் இதைச்செய்கிறேன் என்றால், நாளை இது எனக்கு கிடைக்கும், என்கிற எதிர்பார்ப்போடு செய்கிறவர்கள் தான் இவர்கள். மூன்றாவது வகையான மக்கள் எதையும் எதிர்பார்க்காமல், புகழுக்காக அல்லாமல், நன்மையைச் செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்கிறவர்கள். இயேசு இந்த மூன்றாம் வகையைச்...