Tagged: இன்றைய சிந்தனை

அறிவு, ஆர்வம், திறந்த மனம்

“அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என ஒரு கேள்வியை எழுப்பி, அதற்கான விடைக்குத் தனது சொந்த விளக்கத்தையும் அளித்த மறைநூல் அறிஞர் ஒருவரை இயேசு “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” எனப் பாராட்டும் நிகழ்வை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். இந்தப் பாராட்டிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்: மறைநூல் அறிஞரின் அறிவுத் திறனை இயேசு பாராட்டுகிறார். அறிவாற்றல் இறைவனைப் பற்றி அறிவதில், வாழ்வின் மதிப்பீடுகளை தெரிந்துகொள்வதில் செலவழிக்கப்படுவது பாராட்டுக்குரியது. மாறாக, இறைவனை மறுப்பதற்கோ, இறையாட்சி மதிப்பீடுகளைச் சிதைப்பதற்கோ பயன்படுத்தப்படும் அறிவு அழிவுக்குரியது. அறிவாற்றல் மிக்க மறைநூல் அறிஞரின் ஆர்வம் இங்கே பாராட்டப்படுகிறது. அந்த ஆர்வத்தின் காரணமாகத்தான், இயேசு “சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு” தாமும் கேள்வி கேட்க முன்வந்தார். “அணுகி வந்தார்” என்னும் சொல்லாடல் கவனத்திற்குரியது. ஆர்வம் இருந்தால் அணுகிவரவேண்டும். மறைநூல் அறிஞரின் திறந்த மனதை இயேசு பாராட்டினார். அறிவும், ஆர்வமும் மிக்க பலரும் இறையாட்சியை நெருங்கிவருவதில்லை. காரணம், அவர்களிடம்...

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்

ஏழைகள் என்றால் யார்? ஏழைகளுக்கு, விவிலியத்திலே இரண்டு வார்த்தைகள், கிரேக்க மொழியில் பயன்படுத்தப்படுகிறது. 1. Pநநௌ 2. Pவழமழள. Pநநௌ என்றால், நம்முடைய வழக்கிலே, அன்றாடங்காய்ச்சிகள் என்று, பொருள் கொள்ளலாம். தங்களுடைய உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவர்கள். இவர்கள் தினமும் உழைப்பதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, தங்கள் வாழ்க்கையை ஓட்டுபவர்கள். தங்களுக்கென்று, வேறு எதுவும் கிடையாது. உழைப்பை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள். Pவழமழள என்றால், தங்களுடைய ஒருவேளை உணவுக்காக கூட மற்றவர்களுடைய தயவை எதிர்பார்த்து இருப்பவர்கள். மனிதன் என்கிற தங்களுடைய மாண்பை இழந்து, மற்றவர்களிடம் கையேந்துபவர்கள். ஒருவேளை உணவு கிடைத்தாலும் உண்டு, இல்லையென்றால் பட்டினி என்ற நிலையோடு வாழ்பவர்கள். மத்தேயு நற்செய்தியிலே, இந்த இரண்டாவதாக பொருள்படக்கூடிய ஏழையைத்தான் இங்கே குறிப்பிடுகிறார். அதாவது, ஒருவேளை உணவுக்காகக்கூட, மற்றவர்களை எதிர்பார்த்து, சார்ந்து இருக்கக்கூடிய ஏழைகளை, இங்கே கூறுகிறார். அப்படியானால், ஏழையரின் உள்ளத்தவர்கள் என்றால் என்ன பொருள்: யாரெல்லாம், தங்களுடைய செல்வம், திறமை, அழகு, பதவி,...

இறைவனின் இரக்கம்

கப்பர்நாகுமிலிருந்து ஒருநாள் பயணம் செய்தால், நயீன் ஊரை அடைந்து விடலாம். நயீன் என்ற இந்த ஊர், என்டோருக்கும், சூனேமுக்கும் இடையே உள்ளது. இந்த சூனேமில் தான் இறைவாக்கினர் எலிசா இறந்த பிள்ளைக்கு உயிர் கொடுத்திருந்தார். லூக்கா நற்செய்தியாளர் 13 வது இறைவார்த்தையில், இயேசு அந்த தாயின் மீது பரிவு கொண்டதாக எழுதுகிறார். ஏனென்றால், அந்த தாய் ஒரு விதவை மற்றும் அத்தாய்க்கு அவன் ஒரே மகன். பரிவு என்கிற வார்த்தை தான், கிரேக்க மொழியில் இரக்கத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கிற வார்த்தை. இதற்கு மேல் இரக்கம் காட்ட முடியாது என்கிற அளவுக்கு வலிமையான வார்த்தை. ஆனால், இந்த வார்த்தையை நற்செய்தியாளர் பயன்படுத்தியதில் ஒரு குழப்பம் இருக்கிறது. பழங்காலத்தில் கடவுளை மக்கள் உணர்வுகள் இல்லாதவராகப்பார்த்தனர். அதற்கு காரணமும் இருக்கிறது. ஒரு மனிதர் அடுத்தவரை கவலைப்பட வைத்தாலோ, மகிழ்ச்சி கொள்ள வைத்தாலோ, அவரைவிடப்பெரியவர். அதாவது மற்றவரை தன்வயப்படுத்துகிற சக்தி அவருக்கு இருக்கிறது என்பது பொருள்....

மரியாளின் மாசற்ற இதயப்பெருவிழா

தொடக்கத்தில் மரியாளின் விண்ணேற்பு விழாவிலிருந்து, எட்டாம் நாள் இந்த விழா கொண்டாடப்பட்டது. ஆனால், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு பிறகு, விழாவின் நாள் மாற்றப்பட்டது. சங்கத்தில் நடந்த வழிபாட்டு மறுசீரமைப்பிற்குப் பின் , இயேசுவின் திரு இதயப்பெருவிழாவிற்கு அடுத்த சனிக்கிழமை இது கொண்டாடப்படுகிறது. இந்த பக்திமுயற்சியை பரப்பிட முயற்சி எடுத்தவர் ஜாண் யூட்ஸ் என்பவர். இவர்தான் இயேசுவின் திரு இதயப்பக்தியையும் பரப்பிட அனைத்து முயற்சிகளையும் எடுத்தவர். கி.பி 1860 ல் மரியாளின் மாசற்ற இதயத்திற்கான வணக்கத்தை ஏற்படுத்தினார். அன்னைமரியாள் மீது மக்கள் கொண்டிருந்த பக்தி, அவரது பரிந்துரையின் மூலமாக பெற்றுக்கொண்ட பல்வேறு நலன்கள், இவற்றின் மூலமாக இந்த பக்திமுயற்சி வெகு எளிதாக அனைத்து இடங்களுக்கும் பரவியது. திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் 1944 ம் ஆண்டு, இந்த திருவிழாவை உலகம் முழுவதும் கொண்டாடும்படியாக அறிமுகப்படுத்தினார். மீட்பின் வரலாற்றில் மிகப்பெரும் பங்காற்றுவதற்கு, தனது வாழ்வையே தியாகம் செய்தவர்தான் அன்னை மரியாள். நம் அனைவருக்கும் மீட்பு கிடைப்பதற்கு...

ஆசையே அழிவு

ஆண்டவர் உன்வாழ்வில் உனக்குக் குறை எதுவும் வைக்கவில்லையே. உனக்குப் போதுமானவை எவை என்பதை தெளிவாகத் தெரிந்து, போதுமானதைப் போதுமான அளவு தந்துள்ளார். செழிப்பான திராட்சைத் தோட்டம், சுற்று வேலி, காவல் மாடம், பிழிவு தொழிற்சாலை, போதுமான வருமானம் இப்படி உன் தெய்வம் உனக்குத் தந்துள்ள வாழ்க்கை வசதிகளை வரிசைப்படுத்திப் பார். மேலும் ஆசைப்பட்ட தோட்டத் தொழிலாளன் சொத்துக்கே ஆசைப்பட்டான். அனைத்தையும் உரிமை கொண்டாட ஆசைப்பட்டான். ஆசை அவனைக் குற்றவாளியாக்கியது. கொலைக்காரனாக்கியது. இருந்ததையும் இழந்துவிட்டு குற்றவாளியாக சிறையில் தண்டனை பெறும் நிலை. தோட்டத்தொழிலாளியை மட்டும் அல்ல. ஆசைப்படும் உன்னையும் என்னையும் எல்லோரையும் இப்பரிதாப நிலையில் பார்க்க வேண்டிய பரிதாப நிலை. கடவுள் கொடுத்ததில் நிறைவு அடைந்து, கடவுளுக்கு உரிமையுடையதை கடவுளுக்கும், கடவுள் பணிக்கும் கொடுத்து மேலும் நிறைவடைவோம். அதுவே அருளுடையோர் செயல். இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன். ~ அருட்திரு ஜோசப் லியோன்