Tagged: இன்றைய சிந்தனை

வாழ்வு தரும் இறைநம்பிக்கை

சீடர்களின் குழப்பமான மனநிலைக்கு எடுத்துக்காட்டு இன்றைய பகுதி. சீடர்கள் இயேசுவோடு இருந்ததின் பிண்ணனி, தங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பு தான். இதை மட்டும் நாம் கணக்கில் எடுத்து சீடர்களை விமர்சனம் செய்ய முடியாது. அப்படி விமர்சித்தால், அது தவறாக முடிந்து விடும். இயேசு தனது சாவைப்பற்றி அறிவித்தபோதும், துன்பக்கிண்ணத்தை குடிக்க இருப்பதாக சொன்னபோதும், சீடர்கள் அவரை விட்டுவிட்டு ஓடவில்லை. மாறாக, எதற்கும் தயார் என்று சொல்கிறார்கள். இரண்டுமே நேர் எதிர் மனநிலையைக் குறிக்கிறது. இந்த இரண்டுமே சீடர்களின் குழப்ப மனநிலையையும் உறுதிப்படுத்துகிறது. அப்படியென்றால், இவ்வளவு குழப்ப மனநிலையில் எது சீடர்களை இயேசுவோடு இணைத்துக் கட்டிபோட்டது? எது இயேசுவோடு அனைத்தையும் பொறுத்துக்கொள்ள தூண்டுகோலாக இருந்தது? எது இயேசு மீது முழுமையான அன்பு வைத்து, அவரோடு இருப்பதற்கு உறுதுணையாக இருந்தது? இயேசு மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை. அவர்கள் குழப்ப மனநிலையில் இருந்தாலும், இயேசு மீது வைத்திருந்த நம்பிக்கையை எந்த விதத்திலும்...

முயற்சி தரும் நிறைவு

கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் – போன்ற வார்த்தைகள் நாம் செய்ய வேண்டிய செயல்களைக் குறிக்கக்கூடிய சொற்களாக இருக்கிறது. இந்த சொற்களின் அடிப்படையான பொருள்: முயற்சி. முயன்றால் நாம் பெற முடியாதது ஒன்றுமில்லை. அந்த முயற்சி தான், நமது விசுவாச வாழ்வின் அடித்தளம். அந்த முயற்சியைப் பற்றிப்பிடித்து விட்டால், நாம் இந்த உலகத்தில் அடைய நினைப்பதை நிச்சயமாக அடைய முடியும். நாம் முயற்சி எடுக்க வேண்டும். ஒருபோதும் சோம்பேறிகளாக வாழக்கூடாது. எதிர்மறை சிந்தனை உடையவர்களாக இருக்கக்கூடாது. இந்த உலகத்தில் நம்மை விட எத்தனையோ பேர் குறைகளோடு படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கடவுளிடத்தில் முறையிடுவதற்கும், சண்டை போடுவதற்கும் எவ்வளவோ இருக்கிறது. அது நமது பார்வையில் நியாயமானதாகக் கூட தோன்றலாம். ஆனால், அவர்கள் அதையெல்லாம் பற்றி எண்ணுவதை விட்டுவிட்டு, மிக உறுதியாக வாழ்வில் முயற்சி எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். வாழ்வை மகிழ்வோடு வாழ்ந்திருக்கிறார்கள். தடைகளையும், சோதனைகளையும் வலிமையோடு வென்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நமக்கு சிறந்த உதாரணங்களாக வாழ்வில்...

பார்வை பெறவேண்டும் !

கண்களால் பார்த்தும், உண்மையைக் கண்டுகொள்ளாதவர்கள்பற்றி இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள் காட்டி இயேசு கூறுகிறார்; இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள். எனவே, கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். பார்க்க விரும்புகிறவர்கள் இறைவனின் இரக்கப் பெருக்கை வாழ்வின் எந்த நிகழ்விலும் பார்க்க முடியும். கண்களை மூடிக்கொள்பவர்கள் இறைவனின் பேரன்பை எந்த நிகழ்விலும் காண முடியாது. இது மனம் மாறாத தன்மை என்கிறார் ஆண்டவர். பார்க்க இயலாததும், பார்க்க மறுப்பதும் பாவம். நாம் மனம் மாறவேண்டும். கண்களை அகலத் திறந்து இறைவனின் இருத்தலை ஒவ்வொரு நிகழ்விலும் பார்க்கத் துணிவோமாக! மன்றாடுவோம்; பார்வையின் ஒளியே இயேசுவே, நீரே எமது ஒளி, நீரே எமது, நீரே எமது வாழ்வு. உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நீர் எங்களோடு இருக்கிறீர், உரையாடுகிறீர் என்று காண, உணர, அனுபவிக்க எங்களுக்குப் புதிய பார்வையைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே...

“நான் ஆண்டவரைக் கண்டேன்”

இது பலருக்கு இயற்கை. ஒன்றை ஒருவரிடம் சொல்லச் சொன்னால், சொன்ன செய்தியை மறந்துவிடுவர்.தன்னுடைய அனுபவத்தை விலாவாரியாக விவரித்த பின், புறப்படுவதற்கு முன், ஐயோ ஒன்றை மறந்துவிட்டேனே, இதைச் சொல்லச் சொன்னார் என்று விஷயத்தைச் சொல்லுவார்கள். அவர் சொன்னதை விட தான் அனுபவித்தது, பார்த்தது, கேட்டது, ருசித்தது, ரசித்தது அவ்வளவு ஆழமான அழுத்தத்தையும் தாக்கத்தையும் அது ஏற்படுத்தியிருக்கும். உயிர்த்த இயேசு மரியாவிடம் சீடர்களுக்குச் சொல்லச் சொன்ன செய்தி, “என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்” (யோவா20:17)என்பது. ஆனால் மரியா சொன்னதோ முதன் முதலில் “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்பது. அதன் பின்னரே உயிர்த்த இயேசு சொன்ன செய்தியைச் சொல்கிறார். மகதலா மரியா இவ்வாறு செய்ததன்மூலம் தானும் இயேசுவின் சீடன் என்பதை உறுதிசெய்கிறார். பவுலடியார், தான் ஒரு சீடர், திருத்தூதர் என்பதற்கு ஆணித்தரமான சான்றாக, ‘நானும் உயிர்த்த இயேசுவைக் கண்டேன்’ என்பதையே சான்றாக்குகிறார்.(வாசிக்க 1 கொரி 15:8) ஆகவே தான் ஆண்டவரைக்...

உண்மையான தேடல்

மறைபொருள்(Mystery) என்கிற வார்த்தையின் பொருள் இங்கே கவனிக்கப்படத்தக்க ஒன்று. மறைபொருள் என்கிற வார்த்தையின் பொதுவான பொருள்: புரிந்து கொள்ள முடியாதது, புரிந்து கொள்வதற்கு வெகு கடினமானது. ஆனால், புதிய ஏற்பாட்டில் “மறைபொருள்“ என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுகின்ற அர்த்தம் சற்று வேறுபாடானது. மறைபொருள் என்பது குறிப்பிட்ட சிலருக்கு புரிந்து கொள்ளக்கூடியதும், சிலருக்கு புரிந்து கொள்ள இயலாததுமானதாகும். இந்த அர்த்தத்தில்தான் இங்கே பயன்படுத்தப்படுகிறது. யாருக்கு புரிந்து கொள்ள முடியும்? யாருக்கு புரிந்து கொள்ள முடியாது? தேடல் உள்ளவர்களுக்கு புரிந்து கொள்ள முடியும். தேடல் இல்லாதவர்களுக்கு புரிந்து கொள்ள முடியாது. வாழ்வு என்பது ஒரு தேடல். ஒவ்வொரு நிமிடமும் நாம் தேடிக்கொண்டே இருக்கிறோம். தேடிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், எல்லாரும் இந்த தேடலில் ஈடுபடுகிறார்களா? என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே. இறையாட்சியைப்பற்றிய தேடல் உள்ளவர்களுக்கு இயேசு சொல்வதை நிச்சயம் புரிந்து கொள்ள முடியும். இறையாட்சியைப்பற்றிய கவலை இல்லாதவர்களுக்கு அதைப்பற்றிய புரிதல் நிச்சயம் இருக்க முடியாது. இயேசுவின்...