Tagged: இன்றைய சிந்தனை

துருவங்களை இணைப்பவர் இயேசு

தொழுகைக்கூடத்தில் இயேசுவுக்கு எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துவிட்டது. பரிசேயர்களும், சதுசேயர்களும் இயேசுவிடம் குற்றம் காண நேரம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இயேசு தனது போதனை தளத்தை மாற்ற ஆரம்பிக்கிறார். தொழுகைக்கூடத்திலிருந்து, கடற்கரையிலும், தெருக்களிலும், ஆலயத்திலும் அவர் போதிக்கத்தொடங்குகிறார். இயேசு வாழ்ந்த காலத்தில், போதகர்களுக்கு பணிவிடை செய்வது என்பது ஆசீர்வாதமான செயலாகக் கருதப்பட்டது. போதகர்கள் செல்கிறபோது, அவரோடு உடனிருந்து, அவருக்குத்தேவையானவற்றை செய்து தருவதற்கு பலர் தானாகவே முன்வந்தனர். இயேசுவோடு பெண்களும் உடனிருந்தார்கள் என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கிறோம். இயேசுவோடு உடனிருந்த பெண்களில் முக்கியமானவர்கள் மகதலா மரியாவும், யோவன்னாவும். இந்த மகதலாவிடமிருந்து இயேசு பல பேய்களை ஓட்டியிருந்தார். அவருடைய கடந்த கால வாழ்க்கை ஒரு பாவ வாழ்க்கை. அவரோடு யோவன்னாவும் இருந்தார். இந்த யோவன்னா, ஏரோதுவின் மாளிகையில் மேற்பார்வையாளராக இருந்த கூசாவின் மனைவி. மேற்பார்வையாளர் பணி அதிகாரம் மிகுந்த பணி. அரசருடைய அனைத்து உடைமைகளுக்கும் பொறுப்பு இவராவார். அரசரின் மதிப்பையும், அன்பையும், நம்பிக்கையையும் பெற்ற ஒருவர் தான்...

தூய வியாகுல அன்னை திருவிழா

இந்த திருவிழா மரியாளின் துயரங்களை நினைவுகூற, ஏற்படுத்தப்பட்ட விழாவாகும். இது ஜெர்மனி மற்றும் போர்த்துகல் நாட்டில் தொடக்க காலங்களில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. போர்த்துகல் நாட்டு மறைப்பணியாளர்கள் தாங்கள் பணியாற்றிய பல இடங்களிலும் இதைக் கொண்டாடினர்.. உதாரணமாக, தமிழ்நாட்டில் ”பத்ரோவாதோ மறைபணியாளர்கள்” என்றழைக்கப்பட்ட இவர்கள் பல இடங்களில் வியாகுல அன்னை ஆலயங்களை எழுப்பி, அந்த பக்தி முயற்சியை வளர்த்தார்கள். திருத்தந்தை பதிமூன்றாம் பெனடிக்ட் 1721 ம் ஆண்டு இவ்விழாவை அனைத்துலக திருச்சபையும் கொண்டாட வழிவகை செய்தார். அவர் இவ்விழாவை மரியாளின் ஏழு வியாகுலங்களின் விழா என்றழைத்தார். தொடக்கத்தில் இந்நாளானது, குருத்து ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமையன்று நினைவுகூறப்பட்டது. ஏனெனில் மரியாளின் துயரங்கள், கன்னிமரியாளிடம் பிறந்த கிறிஸ்துவின் பாடுகளோடு கொண்டிருந்த நெருங்கிய தொடர்பினால் இவ்விழா புனித வாரத்திற்கு முன் கொண்டாடுவது முறையெனக் கருதப்பட்டது. திருத்தந்தை பத்தாம் பயஸ் இத்திருவிழாவை செப்டம்பர் 15 ம் நாள் கொண்டாடும்படி செய்தார். இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட நாளும் மிகவும் பொருத்தமாய் இருந்தது....

திருச்சிலுவையின் மகிமை விழா

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இறந்த சிலுவையானது சாதாரண பொருளாக அல்ல. மாறாக, தியாகத்தின் சின்னமாக, நினைவாகக் கருதப்படுகிறது. இயேசுவின் பாடுகள், அவருடைய இறப்பு மற்றும் உயிர்ப்பு தான் கிறிஸ்தவத்தின் விசுவாசத்தை உலகிற்கு கொண்டு வந்தது. எனவே தான் தூய பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (1: 17, 18) ”திருமுழுக்கு கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப்போய்விடும். சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப்பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை” என்று கூறுகிறார். நான்காம் நூற்றாண்டின் முதல் பகுதியில் திருச்சிலுவையின் பக்தி முயற்சியை நாம் காண முடிகிறது. அலெக்சாண்டிரியன் குறிப்பேடு வழங்கும் சான்றுப்படி கான்ஸ்டன்டைன் தாயான ஹெலன் (இலேனம்மாள்) அரசி தான், ஆண்டவரின் திருச்சிலுவையை செப்டம்பர் 14, 320 அன்று கண்டுபிடித்தார். அதன்பின் 13 செப்டம்பா்...

‘அக்கைம்பெண்ணைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, ‘அழாதீர்’ என்றார்” (லூக்கா 7:17)

உலகத்தில் மக்கள் அனுபவிக்கின்ற துன்பங்கள் கணக்கிலடங்கா. பசியும் பட்டினியும், வறுமையும் ஏழ்மையும், நோயும் நோக்காடும், வீடின்மையும் கல்வியறிவின்மையும் என்று மனிதரை வாட்டி வதைக்கின்ற இழிநிலைகள் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் பாரெங்கும் பரவியிருப்பது கவலையானதே. எத்தனையோ தேவைகள் இருக்கின்ற போது நம்மை அடுத்திருக்கின்ற மனிதரின் வேதனைகளை நாம் கண்டுகொள்ளாமல் போகின்ற ஆபத்து உள்ளது. உதவி கேட்டுப் பலர் வரும்போது நம் அருகிலிருப்பவருக்கு உதவி தேவை என்பதை நாம் மறந்துவிடக் கூடும். இயேசுவிடம் உதவி கேட்டு எத்தனையோ மனிதர் வந்தனர். கும்பல் கும்பலாக அவரைத் தேடிச் சென்றனர். தம்மை நெருக்கிய கூட்டத்தின் நடுவிலும் இயேசு ஓர் எளிய கைம்பெண்ணின் வேதனையைக் கவனிக்கத் தவறவில்லை. அப்பெண்ணின் ஒரே மகன் இறந்துவிட்டிருந்தார். கணவனும் இல்லை, மக்களும் இல்லை என்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்ட அப்பெண்ணைக் கண்டு இயேசு இரக்கம் கொள்கிறார். அவருடைய மகனுக்கு உயிர் அளிக்கிறார். இச்செயல் வழியாக இயேசுவின் வல்லமை விளங்கியது ஒருபுறமிருக்க, அவருடைய இரக்க...

திருவிருந்தில் பிளவுகள் !

திருவிருந்தின்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்னும் பவுலடியாரின் அறிவுரை அன்றைய கொரிந்து நகரக் கிறித்தவர்களுக்கு எவ்வளவு பொருந்தியதோ, அதே அளவு இன்றைக்கும் பொருத்தமானதாக, பொருளுள்ளதாக இருக்கிறது என்பது ஒரு வேதனையான உண்மை. அன்றைய நாள்களில் ஒற்றுமையின் விருந்தான திருவிருந்தில் பிளவுபட்ட மனதினராய், தகுதியற்ற உள்ளத்தினராய் கலந்துகொண்டனர். இன்றும்கூட சாதி உணர்வு, பகை உணர்வு, ஏற்றத்தாழ்வுகள் அத்தனை இருந்தும், எந்தவித உறுத்தல் உணர்வும் இன்றி ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் திருவிருந்தில் பங்குபெற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். கடவுளின் திருச்சபையை இழிவுபடுத்தி, இல்லாதோரை இழிவுபடுத்தும் செயலில் இன்றும் நாம் ஈடுபட்டுவருகிறோம். இதை நாம் உணர்கிறோமா? பவுலின் கடினமான சாட்டையடிச் சொற்கள் நம்மைச் சுடட்டும். நற்கருணை அருள்சாதனத்தில் நமக்கு உண்மையான நம்பிக்கை இருந்தால், நமது தகுதியின்மையை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கோர வேண்டும். திருவிருந்தின் முரண்பாடுகளைக் களைய வேண்டும். மன்றாடுவோம்: வானக உணவாக உம்மையே எங்களுக்குத் தந்த இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது ஒற்றுமையின் விருந்தில் பிளவுபட்ட உள்ளத்தினராய், சாதி, சமத்துவமற்ற உணர்வுகளோடு...