Tagged: இன்றைய சிந்தனை

மனிதர்களை கடவுளின் சாயலாகப்பார்ப்போம்

நூற்றுவர் தலைவர்கள் புதிய ஏற்பாட்டில் மதிப்போடு குறிப்பிடப்படுகிறார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது, இயேசுவை “உண்மையிலே இறைமகன்” என்று ஒரு நூற்றுவர் தலைவர் சொன்னதை நாம் வாசித்திருக்கிறோம்.(மத்தேயு 27: 54). இயேசுவை ஏற்றுக்கொண்ட முதல் புறவினத்தார் கொர்னேலியு ஒரு நூற்றுவர் தலைவர். (தி.பணி 10: 22) பவுல் உரோமைக்குடிமகன் என்று கேள்விப்பட்டதும், அவரைக்கலகக்கும்பலிடமிருந்து காப்பாற்றியவர் ஒரு நூற்றுவர் தலைவர். (தி.பணி 22: 26) யெருசலேமுக்கும் செசரியாவிற்கும் இடையே பவுலைக் கொல்ல முயற்சி நடந்தபோது, அந்த சதியை ஆயிரத்தவர் தலைவரிடம் சொல்ல பவுலால் ஏற்பாடு செய்யப்பட்டவர் ஒரு நூற்றுவர் தலைவர்.(தி.பணி 23: 17) ஆளுநர் பெலிக்ஸ், பவுலை நன்றாகக்கவனித்துக்கொள்ள ஏற்பாடு செய்ததும் ஒரு நூற்றுவர் தலைவன்தான்.(தி.பணி 24: 23) உரோமைக்கான இறுதிப்பயணத்தின் போது, வெள்ளத்தினால் கப்பல் அலைக்கழிக்கப்பட்டபோது, அவருக்குத் தேவையான அனைத்தையும் செய்துகொடுத்து, பவுலை தலைவராக ஏற்றுக்கொண்டதும் ஒரு நூற்றுவர் தலைவர் தான். (தி. பணி 27ம் அதிகாரம்). இன்றைய நற்செய்தியில் (+...

இறைவாக்கை வாழ்வோடு இணைப்போம்!

மத்தேயு நற்செய்தியில் இறுதிக்காலம் பற்றி வருகின்ற ஒரு பகுதியை இன்று வாசிக்கக் கேட்கிறோம் (மத் 24:37-44). இயேசுவின் இரண்டாம் வருகையை விழிப்போடு எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று இங்கே கிறிஸ்தவ சமூகத்திற்குச் செய்தி வழங்கப்படுகிறது. இதில் மூன்று சிறு உவமைகள் உள்ளன. அவற்றில் மானிட மகன் திடீரென்று, எதிர்பாராத நேரத்தில் வருவார் என்பது வலியுறுத்தப்படுகிறது. முதல் உவமை நோவா பற்றியது. அவருடைய காலத்தில் வாழ்ந்த மக்கள் அன்றாட செயல்களைச் செய்வதில் மூழ்கியிருந்தனர். அப்போது எதிர்பாராத விதத்தில் பெருவெள்ளம் வந்து அவர்களை அடித்துச்சென்றது. கிறிஸ்தவ சமூகமும் அன்றாடக் கவலைகளில் மூழ்கியிருந்துவிட்டுத் தங்கள் வாழ்க்கையின் இறுதி நோக்கத்தை மறந்துவிடலாகாது. அவர்களுக்கு வழங்கப்படும் செய்தி: விழிப்பாயிருங்கள்! கிறிஸ்துவை அணிந்துகொண்டு, கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருப்பதே உங்கள் வாழ்க்கைக் குறிக்கோளாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்! திருவருகைக் காலம் “எதிர்நோக்கிக் காத்திருக்கும்” காலம் ஆகும். எபிரேய மக்கள் மெசியாவின் வருகையை எதிர்பார்த்தனர் என்றும் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கள் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறின எனவும் நாம்...

செபத்தின் வல்லமை

சோதனைகளும், சோகங்களும் தவிர்க்க முடியாதவை. அந்த சோதனைகளையும், சோகங்களையும் எதிர்கொள்வது எளிதானதும் அல்ல. அதே வேளையில் அவற்றிற்கு நாம் பலியாகிவிடக்கூடாது என்று, இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அவர் இந்த மண்ணகத்தில் வாழ்ந்தபோது, சந்திக்காக சோதனைகளும், சோகங்களும் கிடையாது. ஆனால், அவற்றையெல்லாம், அவர் தவிடுபொடியாக்கினார். தன்னுடைய சோகங்களை, சோதனைகளை தவிடுபொடியாக்கிய தனது அனுபவத்தின் மூலமாக, நமக்கும் அவர் இன்றைய நற்செய்தி வாசகத்தின் மூலமாகக் கற்றுத்தருகிறார். இயேசு நமக்கு தருகிற ஆலோசனை: ”விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்”. செபம் தான், வாழ்வின் சோதனைகள் மற்றும் சோகங்களிலிருந்து நமக்கு விடுதலை தரவல்லவை. கண்ணியிலிருந்து சிக்க வைப்பதற்கு வல்லமை படைத்தவை. நமது வாழ்க்கை செபத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டும். நாம் சரியான முடிவுகள் எடுப்பதற்கும், நமது வாழ்வை சரியான பாதையில் நடத்துவதற்கும் செபம் தான் சிறந்த அருமருந்து. இயேசு பகல் முழுவதும் மக்களுக்குப் போதித்து வருகிறார். பல தூரங்களுக்கு கால்நடையாக நடந்து...

இயற்கையைப் பாதுகாப்போம்

இயற்கை நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிற வரப்பிரசாதம். மரங்களும், விலங்குகளும் இயற்கையோடு இணைந்தவை. அவை நமக்கு சில அடையாளங்கள் வழியாக பல செய்திகளைத் தருகிறது என்பது நாம் அறிந்த ஒன்று. குறிப்பாக, மரங்கள் செழித்து வளர்வது, இலைகளை உதிர்ப்பது, காய் காய்ப்பது, கனி தருவது என்பதான ஒவ்வொரு செயலும், பருவநிலைகளைப்பற்றிய செய்திகளின் வெளிப்பாடாகத்தான் இருக்கிறது. ஒரு மரத்தை வைத்தே, காலத்தையும், நடக்க இருக்கிற நிகழ்வுகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும். அப்படித்தான் இன்றைய நற்செய்தியிலும், அத்திமரத்தை வைத்து, இயேசு நமக்கு ஒரு செய்தியைத் தருகிறார். இயற்கையோடு இணைந்த வாழ்வு தான் இயேசுவின் வாழ்வு என்றால் அது மிகையல்ல. இயேசு இயற்கையை அதிகமாக நேசித்தார். இயற்கையை வைத்தே பல செய்திகளை, இறையாட்சியைப் பற்றிய கருத்துக்களை மக்களுக்கு வழங்கினார். இன்றைய நவீன உலகில் மனிதன் இயற்கையை விட்டு எங்கோ சென்றுவிட்டான். அதன் பலனையும் அதற்காக அனுபவிக்கத் தொடங்கிவிட்டான். புதுப்புது நோய்கள், மனக்குழப்பங்கள், மன நலன் சம்பந்தப்பட்ட...

எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள் !

இன்று திருவருகைக் காலத்தைத் தொடங்குகிறோம். ஆண்டுக்கு ஒருமுறை இறைமகன் இயேசுவின் இரு வருகைகளைப் பற்றியும் நமக்கு நினைவூட்டுகிறது திருச்சபை. முதல் வருகை மீட்பின் வருகை. வரலாற்றில் நிகழ்ந்து முடிந்துவிட்ட ஒன்று. அந்த வருகையை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து கொண்டாடவும், நன்றி கூறவும், மீட்பின் ஒளியில் வாழவும் அழைக்கப்படுகிறோம். இரண்டாம் வருகை தீர்ப்பின் வருகை. இனிமேல்தான் நடக்க இருக்கிற வருகை. அந்த வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கவும், ஆயத்தமாயிருக்கவும் நினைவூட்டப்படுகிறோம். இந்த நினைவூட்டலில் மூன்று தளங்கள் இருக்கின்றன: 1. எப்பொழுதும்: நம் ஒவ்வொருவரின் இறப்பும் நமக்கு இரண்டாம் வருகைதான். அது எந்த நேரத்திலும் நிகழலாம். 2. விழிப்பாயிருந்து: எல்லா நேரமும் நமது சிந்தனையும், சொற்களும், செயல்களும் இறைவனுக்கேற்றதாக இருக்கும்படி கவனமாக வாழ்வது விழிப்புணர்வு. 3. மன்றாடுங்கள்: இந்த விழிப்புணர்வோடு சேர்ந்து செல்வது மன்றாட்டு. செபிக்கும்போதுதான் நாம் விழிப்பை அடைகிறோம். விழி;ப்பாயிருந்தால்தான் நாம் செபிக்கவும் முடியும். எனவே, விழிப்பும் செபமும் ;இணைந்தே செல்ல வேண்டும். தாய்;த் திருச்சபையின்...