Tagged: இன்றைய சிந்தனை

சமத்துவ இயேசு

யேசு புற இனத்து எல்லைப்பகுதியில் இருக்கிறார். ஏற்கெனவே தூய்மைச்சடங்கு மற்றும் சட்டங்களைப் பற்றிய தனது பார்வையைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். யார் என்ன நினைத்தாலும், எது உண்மையோ அதைத்துணிந்து போதித்திருக்கிறார். இப்போது புற இனத்தவர் மத்தியில் இயேசு இருக்கிறார். அடுத்து தனது பணி யாருக்கு இருக்கப்போகிறது என்பதை வெளிப்படுத்தும் அடையாளமாகக் கூட, இயேசுவின் தூய்மைச்சடங்குப்பற்றிய போதனை அமைந்திருக்கலாம். யூதர்கள் தீட்டான உணவு தங்கள் நாவில் படுவதையும், தீட்டான மக்களான புறவினத்தாரோடு உறவு கொண்டு வாழ்வதையும் வெறுப்பவர்கள். ஆனால், இயேசு அவர்கள் மத்தியில் இருக்கிறார். இயேசு வடக்குப்பகுதியில் புறவினத்து மக்கள் மத்தயில் இருப்பது, பாதுகாப்பு தேடிக்கூட இருக்கலாம் ஏனெனில், அவருக்கு எதிர்ப்பு வலுத்துக்கொண்டிருக்கிறது. தொடக்க முதலே பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும், இயேசுவை சட்டத்தை அழிக்க வந்தவராக குற்றம் சுமத்தினர். ஏரோது அரசன் தனது பதவிக்கு இயேசுவால் ஆபத்து வரப்போவதாக அறிந்து, அவர் மீது வெறியில் இருக்கிறான். அவருடைய சொந்த மக்களோ, அவர் மதிமயங்கிப்பேசுவதாக நினைத்தனர். இவர்களையெல்லாம்...

தூய எண்ணங்களை மனதில் விதைப்போம்

லேவியர் 11 ம் அதிகாரத்தில் தீட்டாகக்கருதப்படக்கூடிய விலங்குகளின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. யூதர்களுக்கு தூய்மை என்பது கண்ணும், கருத்துமாக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. எனவே, எவற்றை சாப்பிட வேண்டும்? எவற்றை சாப்பிடக்கூடாது? என்ற வரைமுறைகளை வகுத்திருந்தனர். எந்த அளவுக்கு இதில் கவனமாக இருந்தார்கள் என்றால், தீட்டான உணவைச் சாப்பிடுவதை விட சாவதே மேல் என்று பலர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வை நாம் மக்கபேயர் நூலில் பார்க்கலாம். இரண்டாம் மக்கபேயர் புத்தகத்தில் பன்றி இறைச்சியைச்சாப்பிடக் கட்டாயப்படுத்தப்பட்ட சகோதரர்கள் ஏழுபேர், பன்றி இறைச்சியைச்சாப்பிட்டு தங்களை தீட்டுப்படுத்துவதை விட சாவதே மேல் என்று தங்கள் உடலைப்பல்வேறு சித்திரவதைகளுக்குக் கையளித்ததையும், அவர்களை அவர்களின் தாய் ஊக்கப்படுத்தியதையும் நாம் வாசிப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால், இயேசு வெளியிலிருந்து சாப்பிடக்கூடிய உணவு அல்ல, மாறாக, மனித எண்ணத்திலிருந்து தோன்றும் தீய சிந்தனைகள் தான் மனிதனைத்தீட்டுப்படுத்துகின்றன என்று சொல்கிறார். எண்ணங்கள் தான் செயல்பாடுகளுக்கு அடிப்படை என்று சொல்வார்கள். நம் எண்ணங்கள்...

சுயநல சட்டங்கள்

“கொர்பான்“ என்கிற வார்த்தையின் பொருள் “பரிசு, கொடை, காணிக்கை“ என்பதாகும். அதாவது கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்பது இதன் பொருளாகும். அது கடவுளுடைய உடைமையாகக் கருதப்படுவதாகும். கடன் கொடுத்த மனிதர், வாங்குவதற்கு வேறு வழியில்லாமல், கடைசியாக, நான் உனக்குக் கொடுத்த கடன் “கொர்பான்” என்றால், கடன்பெற்றவர் அந்த கடனை, கடவுளுக்கு திருப்பிக்கொடுக்க வேண்டிய மிகப்பெரிய நெருக்கடி நிலைக்கு உள்ளாகிறார். இயேசு வாழ்ந்தகாலத்தில், இது தவறாகப்பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக, ஒரு பெற்றோர் தனது பிள்ளையிடத்தில், மிகவும் கஸ்டமாயிருக்கிறது என்று உதவிகேட்கிறபோது, அந்த பிள்ளை, எனது உடைமைகளை, நான் “கொர்பான்“ என்று கடவுளுக்கு கொடுத்துவிட்டேன். என்னிடம் உள்ளது எல்லாம், கடவுளுடையது. எனவே என்னால், எதுவும் செய்ய முடியாது, என்று பதில் சொல்கிற நிலை பரவலாகக் காணப்பட்டது. ஆனால், பெற்றோரைப் பேணிக்காப்பது, மோசே கொடுத்த பத்து கட்டளைகளுள் ஒன்று என்பதை, அவர்கள் மறந்துவிட்டார்கள். ஆக, கடவுளின் பெயரால், கடவுளின் சட்டங்கள் உடைக்கப்பட்டன. இப்படிப்பட்ட இரட்டை வேடதாரிகளை இயேசு கடுமையாகச்...

உதவி

இயேசு சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அவரைப்பின்தொடர்கிறது. தங்களுக்குத் தேவையானது இயேசுவிடத்தில் இருக்கிறது, அதை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று, இயேசுவைப்பின்தொடர்ந்து கூட்டம் சென்று கொண்டிருக்கிறது. தன்னைத் தேடிவந்த அனைவருக்கும் இயேசு உதவி செய்கிறார். நற்செய்தியாளர்கள் இயேசுவைப்பற்றி சொல்கிறபோது, அவர் சென்ற இடங்களில் எல்லாம், நன்மைகளைச் செய்தார் என்பதை வாசிக்கிறோம். இயேசு மக்களுக்கு உதவியாக இருக்கிறார். உதவி என்பது உறுதுணையாக இருப்பது, தேவையறிந்து செய்வது, பயனுள்ளதாக இருப்பது என நாம் பொருள் கூறலாம். எது உண்மையான உதவி? இயல்பாகச் செய்வது, தேவையறிந்து செய்வது, பரிவுணர்வுடன் மகிழ்ச்சியாகச் செய்வது மற்றும் எல்லாச் சூழ்நிலைகளிலும் செய்வது. இதுதான் உண்மையான உதவி. இயேசுவின் உதவி இயல்பாக இருக்கிறது. யோசித்து, தியானித்து இதில் எனக்கு ஆதாயம் இருக்கிறதா? இதில் எனக்கு இடஞ்சல் ஏதாவது இருக்கிறதா? என்று எண்ணி செய்வதல்ல உதவி. செய்ய வேண்டுமென்பதற்காக செய்வதல்ல, தேவையறிந்து செய்வதுதான் உதவி. அது வெறுப்புணர்வோடு செய்யப்படுவதாக இருக்கக்கூடாது. பரிவு...

பயன்தரக்கூடிய வாழ்க்கை

உலகிற்கு உப்பாக இருப்பதற்கு இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். உப்பு உவர்ப்பற்று போனால், அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும் என்றும் இயேசு சொல்கிறார். உப்பு எப்போதுமே தனது உப்புத்தன்மையை இழப்பதில்லை. அப்படியென்றால், இயேசு என்ன அர்த்தத்தில் இங்கே சொல்கிறார்? பாலஸ்தீனத்தில் பொதுவாக சாதாரண ஏழை மக்களின் வீடுகளிலும், வீட்டிற்கு வெளியே ஓடுகள் பதித்த அடுப்புகள் காணப்படும். இந்த அடுப்பில் சூடு இருக்க தங்கியிருக்க வேண்டும் என்பதற்காக, அடுப்பின் அடியில் ஓட்டிற்கு கீழே உப்பு கொட்டப்பட்டு, அதன் மேல்தான் ஓடுகள் பதிக்கப்படும். ஏனென்றால், உப்பு வெப்பத்தை அதிகநேரம் தக்கவைக்கும் தன்மையுடையது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அந்த உப்பு, வெப்பத்தை தாங்கும் ஆற்றலை இழந்துவிடும். அப்போது, அது வெளியே எடுக்கப்பட்டு, கொட்டப்படும். இயேசு இந்த பிண்ணனியில், உப்பைப்பற்றிச்சொல்லியிருக்கலாம். “மிதிபடும்“ என்கிற வார்த்தைக்கும் ஓர் அர்த்தம் கொடுக்கப்படுகிறது. பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்களிடையே ஒரு பழக்கம் இருந்தது. யூதநம்பிக்கையை கைவிட்டு, வேறு தெய்வத்தை வணங்கிவிட்டு, மீண்டும் தாய்மதத்திற்கு...