Tagged: இன்றைய சிந்தனை

கடவுளை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம்?

”என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத்தெரியாது”. இந்த வார்த்தைகள் தான் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முக்கியமான வார்த்தைகள். இந்த வார்த்தைகள் தான் இயேசுவைக் குற்றவாளியாக்கிய வார்த்தைகள். இந்த வார்த்தைகள் தான், இயேசுவிடமிருந்து பல நாட்களாக, அவரிடத்தில் குற்றம் காணுகிறவர்கள் எதிர்பார்த்த வார்த்தைகள். அவர்கள் இயேசுவைக் குற்றம் சுமத்த தேடிக்கொண்டிருந்தது கிடைத்துவிட்டது. இந்த வார்த்தைகளில் அப்படி என்ன தான் குற்றம் சுமத்த முடியும்? யூதர்கள் தாங்கள் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாக நினைத்தனர். தாங்கள் கடவுளுக்கு மிக அருகாமையில் உள்ளவர்களாக எண்ணினர். கடவுளை தங்களைத்தவிர அறிந்தவர்கள் யாரும் இல்லை என்ற மமதை கொண்டிருந்தனர். ஆனால், இயேசு அவர்களுக்கு கடவுளைத்தெரியாது என்று சொல்கிறார். சாதாரண மனிதர்கள் யாரும் பேசக்கூடாத இஸ்ரயேலைப்பற்றியும், இஸ்ரயேலின் கடவுளைப்பற்றியும் அவர் பேசியது, கடவுளைப்பழித்துரைத்ததற்கான செயல் என்று அதிகாரவர்க்கத்தினர் அவரை குற்றம் சுமத்தினர். கடவுளைப்பற்றி பலரும், பலவிதமாகப் புரிந்துகொண்டுள்ளனர். தங்களது அனுபவத்தை பலவிதமாக வெளிப்படுத்தியுள்ளனர். எழுதியும் வைத்துள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வெளிப்படுத்தியுள்ளனர். நாமும் கடவுள்...

இயேசுவின் சாட்சிகளாய் வாழ்வோம்

‘நீர்தான் கடவுளின் மகன் என்பதற்கு என்ன சான்று தருகிறீர்?’ என்று தன்னை மற்றவர்கள் கேட்டதற்கு, இயேசு இன்றைய நற்செய்தியில் பதில் தருகிறார். யூதர்களைப்பொறுத்தவரையில் உண்மை என்று நம்புவதற்கு இரண்டு சாட்சிகள் கட்டாயம் வேண்டும். ஒருவர் தனக்குத்தானே சான்று கூறுவதை, அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இணைச்சட்டம் 17: 6 “இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை முன்னிட்டே, குற்றவாளி கொலை செய்யப்பட வேண்டும்”. இணைச்சட்டம் 19: 15 “ஒருவனது எந்தக்குற்றத்தையும் எந்தப்பழிபாவச்செயலையும் உறுதிசெய்ய, ஒரே சாட்சியின் வாக்குமூலம் போதாது. இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தாலே அது உறுதி செய்யப்பட வேண்டும்.” இயேசு இந்த ஒழுங்குமுறையின்படி சான்றுகளைத்தருகிறார். இயேசுவின் முதல் சான்று திருமுழுக்கு யோவான்(33) இயேசுவின் இரண்டாவது சான்று தந்தையாகிய கடவுள்(37)மூன்றாவது சான்று மறைநூல். ஆனால், இந்த சான்றுகளையெல்லாம் விட இயேசு அதிக அழுத்தம் கொடுத்து கூறுவது, அவரின் செயல்கள்(36). தனது செயல்களை விட வேறு என்ன பெரிய சான்றை தான் கொடுத்தவிட...

இறையனுபவம்

யோவான் நற்செய்தியிலே இறையியல் சற்று ஆழமானதாக இருக்கிறது. காரணம், யோவான் இயேசுவின் வார்த்தைகளை மட்டும் எழுதவில்லை. அந்த வார்த்தைகளை தான் புரிந்துகொண்ட விதத்தில் எழுதியிருக்கிறார். அந்த புரிதல் மேலோட்டமான அறிவின் மூலமாக வந்ததில்லை. மாறாக, ஆழ்ந்த சிந்தனையின் மூலமாக, இயேசுவின் வார்த்தைகளை மீண்டும், மீண்டுமாக தியானித்தது மூலமாக வந்தது. இயேசுவோடு வாழ்ந்த யோவானுக்கு, அவரோடு இருந்தபோது, இயேசுவின் போதனைகள் அவ்வளவாக அவருக்கு விளங்கியிருக்கவில்லை. ஆனால், இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு அவருடைய வார்த்தைகளை தனது வாழ்வின் அனுபவத்தோடு பொருத்திப்பார்த்தபோது, அதில் இருந்த உண்மையை அவர் கண்டுகொண்டார். இன்றைய நற்செய்தியில், இயேசு தன்னை இறைத்தந்தையோடு இணைத்துப்பேசுகிறார். கடவுள் எப்படி இருக்கிறார் என்பதை இயேசுவிடமிருந்து அறிந்துகொள்ளலாம். ஏனென்றால், இயேசுவின் வார்த்தைகள் கடவுளின் வார்த்தைகள். இயேசுவின் உணர்வுகள் கடவுளின் உணர்வுகள். இயேசுவின் செயல்பாடுகள் கடவுளின் செயல்பாடுகள். பாவத்திற்கு எதிராக, கடவுள் எப்படி எழுகிறார் என்பதை இயேசுவின் வாழ்விலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். மனிதர்களைக் கடவுள் எப்படி பார்க்கிறார்...

குணம் பெற விரும்புகிறீரா?

இயேசு உடல் நலமற்ற மனிதரிடம் ”குணம் பெற விரும்புகிறீரா?” என்ற கேள்வியைக் கேட்கிறார். பல ஆண்டுகளாக, எப்படியாவது குணம் பெற்று விட வேண்டும் என்று அந்த மனிதர் நிச்சயமாக முயற்சி எடுத்திருப்பார். எப்படியாவது குணம் பெற்றுவிட வேண்டும் என்ற அவரின் எண்ணத்தின் வெளிப்பாடுதான், அந்த குளத்தின் அருகில் அவர் நீண்ட நாட்களாக காத்திருப்பது. அந்த மனிதர் தனது உடல் நலக்குறைபாட்டிற்கேற்ப தனது வாழ்வை மாற்றிக்கொண்டாலும், இதுதான் வாழ்க்கை, இதை வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள, சந்தர்ப்பத்தை அவர் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார். இயேசுவிடமிருந்து நிறைவான அருளைப்பெற்றுக்கொள்வதற்கு நமக்கு அடிப்படையிலே இருக்க வேண்டியது, ஆர்வம். எந்த ஒரு சூழலிலும் நம்பிக்கை இழக்காத தன்மை. கடைசி நிமிடத்திலும் இருக்கும் அந்த ஒரு துளி நம்பிக்கை. எதை இழந்தாலும் ஒரு மனிதன் நம்பிக்கை இழக்கக்கூடாது என்பதற்கு இந்த உடல் நலமற்றவர் சிறந்த எடுத்துக்காட்டு. எப்படியாவது குணம் பெற்றுவிட வேண்டும் என்கிற...

தாழ்ச்சி நிறைந்த உள்ளம்

அரச அலுவலர் ஒருவர் தனது மகனுக்காக இயேசுவைத்தேடி வந்த நிகழ்ச்சி இன்றைய நற்செய்தியாக நமக்கு தரப்பட்டிருக்கிறது. யார் இந்த அரச அலுவலர்? அரசரின் அவையில் பணிபுரியக்கூடியவருக்கு தச்சுத்தொழிலாளியின் மகனிடம் என்ன வேலை? அரச அலுவலர் ஏரோது அரசரின் அவையின் பணிபுரியக்கூடியவராக இருக்கலாம். இயேசு கானாவூரில் இருக்கிறார். அலுவலரின் சொந்த ஊரோ கப்பர்நாகும். கிட்டத்தட்ட இரண்டிற்கும் இடையேயான தொலைவு 20 மைல். இங்கே, அரச அலுவலரின் தாழ்ச்சி நிறைந்த நம்பிக்கை நமக்கு உதாரணமாக தரப்படுகிறது. அரசருடைய அவையில் பணியில் இருக்கிற அதிகாரிக்கு பல சலுகைகள் நிச்சயம் இருக்கும். அரண்மணையில் பணிபுரியும் மிகச்சிறந்த மருத்துவர்கள் நிச்சயம் அவருடைய மகனுக்கு சிகிச்சை அளித்திருப்பார்கள். அரசரின் அலுவலகத்தில் பணிபுரிகிறவர் இயேசுவைத் தேடி வந்தால், அது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பது அவருக்குத் தெரியும். தான் மிகப்பெரிய அதிகாரத்தில் இருக்கிறேன். எனவே, ஆளனுப்பி இயேசுவை அதிகாரத்தோடு, அழைத்து வர ஆணையிட்டிருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு, இயேசுவை அவர் தேடி...