Tagged: இன்றைய சிந்தனை

நிமிர்ந்து கடவுளைப் போற்று…

லூக்கா 13:10-17 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். லூக்கா 13:10-17 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருப்பாடல் 103:2 இவ்வாறு சொல்கிறது, “என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!” கடவுள் நாம் கருவான நாள் முதல் இந்நாள் வரை பல கனிவான செயல்களால் நம்மை கண்ணின் கருவிழிபோல காத்து வருகின்றார். அவரை நாம் போற்ற வேண்டும், கடவுளை எப்படி போற்ற வேண்டும் என்பதை தீய ஆவியிலிருந்து நலம்...

இறைவனின் அன்பு

எரேமியா 31: 7 – 9 இஸ்ரயேல் மக்களுக்கான நம்பிக்கைச் செய்தி இன்றைய வாசகத்தில் வழங்கப்படுகிறது. அது என்ன நம்பிக்கைச் செய்தி? ”நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்”. இஸ்ரயேல் மக்கள் செய்த பாவங்களுக்கு, தண்டனை வழங்கப்பட்டு விட்டது. இப்போது, அவர்களுக்கு ஆறுதலின் காலம் காத்திருக்கிறது. இறைவன் எப்போதும் நாம் செய்த பாவங்களை நினைவுகூர்கிறவர் அல்ல. பாவத்திற்கான தண்டனை பெற்ற பிறகு, அவர் மீண்டும் அவர்களை வழிநடத்துகிற ஆயனாக வருகின்றார். வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் கலந்தது. இந்த இரண்டு விதமான விளைவுகளுக்கும் மனிதர்களே காரணம். தவறு செய்கிறபோது, அதற்கான தண்டனையைப் பெற்றுக்கொள்கிறோம். நல்லது செய்கிறபோது, இயல்பாகவே மகிழ்ச்சி நம்மிடத்தில் வருகிறது. இந்த இரண்டு விதமான தருணங்களிலும், இறைவன் நம்மோடு இருக்கின்றார் என்பது, இந்த வாசகம் நமக்குத் தரும் செய்தி. நாம் மகிழ்ச்சியாக இருக்கிறபோது, இறைவன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். தன்னுடைய படைப்புத்திறனில் மகிழ்ச்சி கொள்கிறார். நாம் துன்பப்படுகிறபோது, நம்மை...

வெட்டப்படுவாயா? தட்டப்படுவாயா?

லூக்கா 13:1-9 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உலகில் வாழும் அனைவரும் ஏதாவது ஒருவிதத்தில் தங்கள் திறமையை வெளியே காட்ட வேண்டும். அப்படி வெளிக்கொணரும் நபர்களைத் தான் இந்த உலகம் தட்டிக்கொடுத்து பாராட்டுகிறது. இல்லையென்றால் இந்த உலகம் வெட்டுகிறது. இவர்களால் இந்த உலகில் வாழவே முடியாது. எல்லாரும் நன்கு வளர வேண்டும், கடவுள் கொடுத்த திறமைகளை வைத்து திறம்பட செயல்பட வேண்டும் என செல்லமாய் அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். மற்றவர்களால் நாம் பாராட்டப்பட வேண்டும் அல்லது தட்டிக்கொடுக்கப்பட வேண்டும் என்றால் இரண்டு செயல்களை நாம் சிறப்பாக செய்ய வேண்டும். 1. பலன் கொடுக்கனும் இதுவரை நாம் யாரெல்லாம் நன்கு பலன் கொடுத்து கொண்டிருக்கிறார்களே அவர்களை கூர்ந்து...

கடிகாரத்தைப் பார்! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை

லூக்கா 12:54-59 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். “ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”. வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இன்றைய நற்செய்தி வாசகம் காலத்தின் மதிப்பை நமக்குக் கற்றுத் தருகிறது. ஆகவே கேளுங்க.. கேளுங்க நற்செய்தி வாசகத்தை நல்லா கேளுங்க. மாறுங்க இன்றே மாறுங்க.. காலத்தை சரியாக பயன்படுத்தும்போது இரண்டு சாகசங்களை நாம் செய்ய முடிகிறது. 1. சமாதானம் செய்ய முடிகிறது எதிரியோடு சண்டை என்றால் சரியாக நேரத்தை பயன்படுத்தும் போது அங்கே சமாதானம் அறுவடை செய்யப்படுகிறது. எல்லா பகைவர்களையும் இந்த சரியான...

அக்டோபர் மாத அதிர்ச்சி…

லூக்கா 12:49-53 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மண்ணுலகில் தீமூட்டவே வந்தேன் என்ற வார்த்தையோடு இன்றைய நற்செய்தி வாசகம் ஆரம்பமாகிறது். ஆரம்பமே அதிரடி அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த வார்த்தைதான் அக்டோபர் மாத்திற்கான அதிரடி அதிர்ச்சியாகும். தீமூட்ட இந்த வார்த்தை எதிர்மறையானது அல்ல. மாறாக நேர்மறையானதும் நம்மை நேராக்க கூடியதும் இந்த வார்த்தைதான். எப்படி? இந்த நெருப்பு அல்லது தீ என்ற வார்த்தை இயேசுவைக் குறிக்கிறது. இயேசு என்ற நெருப்பிடம் நாம் நெருங்கி வரும்போது பல வல்ல செயல்கள் நடக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமான இரண்டு. 1. எரிக்கிறது நெருப்பின் மிக முக்கியமான பணி எரி்ப்பது. அசுத்தத்தை எரித்து அழகை அளிப்பது. இயேசு என்ற நெருப்பு நமக்குள் இருக்கும்...