Tagged: இன்றைய சிந்தனை

உங்கள் உற்காசத்தால் உங்கள் ஊர்க்காரர் உயரட்டும்!

மத்தேயு 13:54-58 ஒரே ஊரில் வாழும் மனிதர்கள் தங்கள் ஊர்க்காரரின் வளர்ச்சியில் மகிழ்ச்சி அடைவதில்லை. பெரும்பாலும் பொறாமை தான் பொங்கி வருகிறது. இப்படி இருப்பதனால் ஒருவருக்கொருவர் வளர்ச்சியை காண்பதில்லை. அதோடு மட்டுமல்லாமல் அந்த மொத்த ஊரிலும் வளர்ச்சி என்பது இல்லாமல் போகிறது. பல நல்ல காரியங்கள் நடக்காமலே போகிறது. அதற்கு மிக சிறந்த உதாரணம் தான் இன்றைய நற்செய்தி வாசகம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து மிகச்சிறந்த திறமையுடன் மறைநூலை எடுத்துரைத்த போது அவர்கள் தன் சொந்த ஊார்க்காரன் தானே என்று அலட்சியமாக இருந்ததால் இயேசு தன்னுடைய ஆற்றலை அங்கு வெளிப்படுத்த ஆசைப்படவில்லை. அதனால் இயேசு கிறஸ்துவின் திறமை அங்கே வெளிப்படுத்தப்படவில்லை. ஆகவே அந்த ஊரின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலே தடை ஏற்படுகிறது. நம் ஊார்க்காரன் என்ற உணர்வு நமக்குள் மேலோங்க வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பு கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் மனதார பாராட்ட வேண்டும். மிக அதிகமாகவே உற்சாகப்படுத்த வேண்டும். அதற்காகவே நாம் ஒரே...

குயவனும், மண்பானையும்

எரேமியா 18: 1 – 6 இறைவன் உருவகங்கள் வழியாக, தன்னுடைய செய்தியை, மக்களுக்கு அறிவிக்க வேண்டிய செய்தியை, இறைவாக்கினர் வழியாக அறிவிப்பதை இன்றைய வாசகத்தில் நாம் பார்க்கிறோம். குயவன், மண்பானை உருவகத்தை இறைவன் பயன்படுத்துகிறார். குயவன் மண்பானை செய்கிறான். அந்த மண்பானை என்பது, குயவனின் உருவாக்கத்தில் விளைந்தது. தன்னுடைய விருப்பத்திற்கேற்ப, தான் எண்ணியவற்றை, மண்பானையாக குயவன் வடிக்கிறான். அவர் செய்ய விரும்புவதையெல்லாம், அந்த மண்பானை செய்வதில் அவர் செய்து கொள்ளலாம். இந்த உவமையானது, இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிப்பதற்காகச் சொல்லப்படுகிறது. கடவுள் அவர்களுக்குச் சொல்கிற செய்தி இதுதான்: ஒரு நாட்டையோ, அரசையோ எப்போது வேண்டுமானாலும் பிடுங்கி எறிவதற்கு கடவுளுக்கு ஆற்றல் இருக்கிறது. ஏனென்றால், அவர் இந்த உலகத்தைப் படைத்து பராமரிக்கிறவர். அதேவேளையில், சொல்லப்படுகிற செய்தியைக் கேட்டு, அவர்கள் தங்கள் தீய வழிகளிலிருந்து விலகி, தங்கள் வாழ்வை மாற்றிக் கொள்வாரென்றால், நிச்சயம் கடவுள் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வார். எல்லாமே கடவுளின் கையில் இருந்தாலும்...

துறந்தால் மகிழ்ச்சி தூரமில்லை

மத்தேயு 13:44-46 “கூலுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை” என்பது நமக்குத் தெரிந்த பழமொழி. மனிதர்கள் பெரும்பாலும் இரண்டிற்கும் ஆசைப்படுவதால் ஆபத்தான பல நேரங்களை சந்திக்க நேரிடுகிறது. மனதிற்குள்ளே நாளும் மகிழ்ச்சி மத்தளமிட வேண்டுமென்றால் ஒருசிலவற்றை நம்மிடமிருந்து கழிக்க வேண்டும். ஒருசில அவசியமற்றவைகளை துறந்து தூரே தள்ளிவிட வேண்டும். நம்முடைய ஒருசில தீய பண்புகளையும் நம்மிடமிருந்து எரித்து சாம்பாலாக்க வேண்டும். இன்றைய நற்செய்தியில் புதையலை கண்டுபிடித்த ஒருவரும், முத்தை கண்டுபிடித்த ஒருவரும் மகிழ்ச்சியை சம்பாதிப்பதற்காக, உருவாக்குவதற்காக தங்களுக்குள் வைத்திருந்த அவசியமற்ற அனைத்தையும் துறக்கிறார்கள். முழுவதும் வேண்டாமென்று துறக்கிறார்கள். ஏனெனில் இந்த குப்பைகளை தூரே தட்டினால் தான் தங்களுக்குள் பேரின்பம் உண்டு என்பதை உணா்ந்த அவர்கள் இந்த சிறப்பான செயலை செய்கிறார்கள். மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். மகிழ்ச்சி என்பது எப்போதும் நம் அருகிலே உள்ளது. அதை நமக்கு மிகவும் தூரமாக்குவது நாம் தான். நிலையான மகிச்சியை நமக்குள் உருவாக்க வேண்டுமெனில் நாம் இழந்தே ஆக வேண்டும்....

எது வேண்டும்: அங்கலாய்ப்பா? ஆசீர்வாதமா?

மத்தேயு 13:36-43 “விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே! உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!. உமது ஆட்சி வருக!” என நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஜெபித்தார். தந்தையின் ஆட்சியை இம்மண்ணுலகில் நிறுவுவதே இயேசுவின் திருவுளம். தந்தையின் ஆட்சிக்கு யாரெல்லாம் உதவி செய்கிறார்களோ அவர்கள் இயேசுவிடம் இருந்து பாராட்டு பெறுவர். யாரெல்லாம் இடறலாக இருக்கிறார்களோ அவர்கள் தண்டனை பெறுவர். அங்கலாய்ப்பா? நம் வாழ்க்கையில் அங்கலாய்ப்பையும், அழுகையையும் உருவாக்குவது அலகையே. அலகை ஆட்சி செய்வதால் இருளிலே ஒருசிலரின் பயணம் போகிறது. குணங்களும் பேய் குணங்கள் தான் இவர்களிடம் நிறைந்து காணப்படுகின்றன. அலகையின் பிடியில் சிக்கிக்கொள்பவா்கள் கடவுளின் ஆட்சிக்கு தங்கள் பங்களிப்பை தருவதில்லை. அலகையின் விருப்பப்படி இவர்கள் ஆடுவதால் வாழ்க்கை திண்டாட்டமாகவே இவர்களுக்கு அமைகிறது. ஆசீர்வாதமா? கடவுளின் ஆட்சிக்கு உதவி செய்கிறவர்கள் கதிரவனைப்போல் ஒளி வீசுவர். இறைவனிடம் நெருங்கி இருப்பதால் இவர்களுக்கு ஆசீர்வாதக்கதவுகள் திறந்தே இருக்கின்றன. நற்குணங்களால் இவர்கள் பலர் வாழ்வில் வெளிச்சமாக திகழ்கின்றனர். ஆண்டவர்...

கடுகு, புளிப்பு மாவு : தைரியம் தரும் தைலங்கள்

மத்தேயு 13:31-35 மனிதர்களுக்கான பல பிரச்சினைகளில் தாழ்வு மனப்பான்மை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. தாழ்வு மனப்பான்மை என்பது நான் சிறியவன், சிறந்தவன் அல்ல என்பதிலிருந்து உதயமாகிறது. இந்த தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களுக்கு தைரியம் கொடுக்கும் தைலமாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். கடுகு உருவில் சிறியது ஆனால் சிறந்தது என்பதை தன் வாழ்க்கையில் எடுத்துக் காட்டுகின்றது. கடுகு தனக்குள்ளே இருக்கும் சக்தியை உணா்ந்ததால் வானத்துப் பறவைகள் தங்கும் அளவுக்கு தன்னுடைய பிரம்மாண்டமான சக்தியை அந்த சிறிய விதை வெளிக்கொணர்கின்றது. புளிப்பு மாவு கண்ணுக்கு புலப்படாதது. ஆனால் சிறந்தது என்பதை தன் வாழ்க்கையில் எடுத்துக் காட்டுகின்றது. மாவு முழுவதையும் புளிப்பேற்றும் தன்னுடைய பிரம்மாண்டமான சக்தியை வெளிப்படுத்துகின்றது. நமக்குள்ளே கடவுள் கொடுத்த பிரம்மாண்டமான சக்தி இருக்கிறது. அதை கண்டுபிடிப்போம். அதை உசுப்பிவிடுவோம். மிகவும் சிறியவைகள் இப்படி செய்கிறது என்றால் ஏன் நம்மால் செய்ய முடியாது? எல்லாமே முடியும். நம்மை ஆட்டிப்படைக்கும் தாழ்வு மனப்பான்மையை தரை...