Tagged: இன்றைய சிந்தனை

அன்பு செய்ய கற்றுக்கொள்வோம்

எசேக்கியேல் 24: 15 – 24 எசேக்கியேலின் மனைவி இறந்து போவாள் என்கிற அடையாளம் இறைவாக்கினருக்கு வெளிப்படுத்தப்படுகிறது. அவள் இறந்து போனாலும், அதற்காக எந்தவிதமான புலம்பலோ, வருத்தமோ, அழுகையோ இருக்கக்கூடாது என்று, இறைவாக்கினருக்கு ஆண்டவர் அறிவுறுத்துகிறார். இறந்தவர்க்காக அழுவது என்பது மதக்கடமை. நம்முடைய உள்ளத்து வருத்தங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு. ஆனால், நம்பிக்கை உள்ளவர்களுக்கு அது தேவையில்லை. ஏனெனில், இறப்பு என்பது இன்னொரு வாழ்விற்கான பயணம். இந்த நிகழ்ச்சி நடக்கிறபோது, மக்கள், இறைவாக்கினரிடம், அவர் செய்வதன் பொருளைக் கேட்கிறார்கள். அவருக்கு நடந்தது போலவே, இஸ்ரயேல் மக்களுக்கும் நடக்கும் என்பதை, இறைவாக்கினர் அவர்களுக்கு அறிவிக்கிறார். அது நடக்கும் நேரத்தில் அவர்களால் அழவும் முடியாது. தங்கள் வருத்தத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியாது. தங்களுக்கிடையே வெறுமனே புலம்பிக்கொண்டு தான் இருக்க முடியும். அப்போது, மக்கள் அனைவரும், உண்மையான கடவுள், “யாவே“ இறைவனே என்பதை அறிந்துகொள்வார்கள். இந்த காட்சிகளும், நிகழ்வுகளும் இறைவாக்கினர் வழியாக மக்களுக்கு வெளிப்படுத்தப்படுவது,...

கடவுளே மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்

திருப்பாடல் 67: 1 – 2, 4, 5 – 7 இந்த திருப்பாடல் எண்ணிக்கை நூல் 6: 23 – 25 இறைவார்த்தையை மீண்டும் நமக்கு நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது. ஆண்டவர் சொல்கிறார்: ”நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்: நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை. ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக. ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன் மீது அருள்பொழிவாரா. ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக. இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர். நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்”. இங்கு இறைவனின் பணியாளர்கள் மக்களுக்கு எப்படியெல்லாம் ஆசீர்வாதமானவர்களாக இருக்க முடியும் என்கிற செய்தி இங்கு நமக்கு தரப்படுகிறது. இறைவன் அவருடைய பெயரை மக்கள் புனிதப்படுத்த, அவர்களை வழிநடத்த, தன்னுடைய செய்தியை அறிவிக்க இறைப்பணியாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்கள் இறைவனிடமிருந்து பெற்றிருக்கிற வல்லமையையும், கொடைகளையும் இந்த...

திருமண வாழ்வில் அதிக மகசூல் எப்படி?

மத்தேயு 19:3-12 இறையேசுவில் இனியவா்களே! இன்றைய திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருமணம் என்பது மனிதர்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்ச்சி ஆகும். திருமணம் என்பது காதலிப்பது போன்று இல்லை. இதில் விட்டுக் கொடுப்பது, நிதானம், ஒத்தச் செயல் செய்வது, விதிமுறைப்படி நடப்பது, குழந்தைகள் வளர்ப்பு போன்றவை அடங்கும். திருமணம் என்பது எதிர்-எதிர் பாலர் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கும் தனி உலகம். திருமணம் என்பது ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று முன்னோர்கள் கூறியதற்கு உகந்த பொருள் உள்ளது. உதாரணமாக நெல், கம்பு, கரும்பு உள்ளிட்ட பயிர்களை எடுத்துக் கொண்டால் அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மகசூல் கொடுத்துவிடும். அதைப்போல திருமண தம்பதியனர் எதிர் வரும் பிரச்சினைகள், சவால்கள் அனைத்தையும் சமாளித்து பயிர்களை போன்று குறிப்பிட்ட காலத்திற்குள்...

பழிவாங்கல்: தொடர் பகை தலைவிரித்தாடும்

மத்தேயு 18:21-19:1 இறையேசுவில் இனியவா்களே! இன்றைய திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்கள் செய்யும் தவறை மன்னிக்க முடியாமல் பழிவாங்கிக் கொண்டிருக்கும், பழிவாங்க காத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இன்றைய நற்செய்தி வாசகம் “போதும், உங்கள் செயலை நிறுத்துங்கள்” என்ற அறைகூவலோடு வருகின்றது. பழிவாங்குவது என்பது மனிதனை மிருகமாக்கும் குணம். பயம், கோபம், வெறுப்பு ஆகியவையே இந்த பழிவாங்கலின் பின்னால் ஒளிந்து கிடக்கும் தீய உணர்வுகளாகும். வெறுப்பு ஏற்படும்போதும், பழி வாங்கும்போதும் நம் உடலில் தோன்றும் விஷம் நம்மை சிறிது சிறிதாக கொல்வதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆழமாக புதைந்த வெறுப்பினால் மன அழுத்தம் ஏற்படுவதாகவும், படபடப்பு, வயிற்றுப்புண், நரம்புத் தளர்ச்சி, இதய நோய்கள் போன்றவை அடக்க முடியாதகோபம், பழிவாங்கும் வெறி போன்றவற்றால் தூண்டப்படுகின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன....

உறவே வாழ்வின் ஆணிவேர்

உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் இயேசு கிறிஸ்து. உறவில்லாமல் வாழ்வு இல்லை என்பதை இயேசு நற்செய்தியிலே சுட்டிக்காட்டுகிறார். உறவிலே விரிசல் ஏற்படுகின்றபோது, அந்த விரிசலை சரிசெய்ய எல்லாவித முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். விரிசலை அதிகப்படுத்துகின்ற செயல்களை நாம் செய்யக்கூடாது எனவும் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார். யாராவது நமக்கு எதிராக தவறு செய்தால், முதலில் நமக்குள்ளாகவே அதைப்புரிந்துகொண்டு, நம் உள்ளத்தை காயப்படுத்திக் கொண்டிருக்கக்கூடாது. அதை சரிசெய்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். முதலில் நாமாக சென்று சீர்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால், நம்பிக்கைக்குரியவர்களின் துணைகொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல வேண்டும். எது எப்படியென்றாலும், உறவை சரிசெய்வதில் தாமதிக்கக்சகூடாது என்கிற கருத்து ஆணித்தரமாக வலிறுத்தப்படுகிறது. கடவுளும் நாம் தவறுகள் எவ்வளவு. செய்தாலும், நம்மை மன்னித்து ஏற்றுக்கொண்டு நமக்கு புதுவாழ்வைத்தந்திருக்கிறார். அதற்காக, தன்னுடைய ஒரே மகனின் உயிரையே பலியாகத்தந்திருக்கிறார். கடவுளோடும், சக மனிதர்களோடும் நல்ல உறவோடு வாழக்கூடிய அருளிற்காக மன்றாடுவோம். கடவுள் நாம்...