Tagged: இன்றைய சிந்தனை

தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழா

வாழ்க்கையை கோலாகலமாக்கு… மத்தேயு 1:1-16,18-23 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்னை மரியாளின் பிறந்த நாள் விழாவினைச் செப்டம்பர் 8 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மிக கோலாகலமாக நாம் கொண்டாடுகின்றோம். அன்னை மரியாள் மிகவும் கோலாகலமாக வாழ்ந்தார். ஆகவே அவரின் அன்பு பிள்ளைகளாகிய நாமும் மிகவும் கோலாகலமாக கொண்டாடுகின்றோம். இந்த இனிய நாளில் நம் வாழ்வை கோலாகலமாக மாற்ற வேண்டும். அதற்கு மரியை மாதிரியாக கொண்டு வாழ வேண்டும் என இப்பெருவிழா பெருமகிழ்ச்சியோடு நம்மை அழைக்கின்றது. மரியிடமிருந்து நான்கு மாதிகள் நமக்கு மூலதனமாக உள்ளன. 1. அருள் தெரிகிறது “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கும் முன்பே அறிந்திருந்தேன் நீ பிறக்கும் முன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்(எரே...

நன்மைக்கு விடுமுறை இல்லை

லூக்கா 6:6-11 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கையை நீட்டி நன்மையை பெறுகின்ற ஒவ்வொரு கிறிஸ்தவா்களும் நன்மை செய்ய வேண்டும் என்ற அழைப்பைப் பெறுகின்றார்கள். நன்மை என்று ஆண்டவரின் உடலை எதற்காக சொல்கிறோம்? நாம் நன்மை செய்பவர்களாக மாற வேண்டும் என்பதற்காகவே. இயேசு நடந்த இடமெல்லாம் நன்மையை மட்டுமே செய்தார். நாமும் அப்படி செய்ய வேண்டும் என்ற அழுத்த திருத்தமான அறிவிப்போடு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். நன்மை செய்யும் போது நாம் இரண்டு காரியங்களை கண்டுக்கொள்ளவே கூடாது. 1. குறைகளைக் கண்டுக் குனியாதே நாம் நன்மைகள் செய்யும் போது பல விதமான விமர்சனங்கள் வரும். அவைகள் நம் நன்மைகளுக்கு தடையாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நாம்...

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்

திருப்பாடல் 95: 1 – 2, 6 – 7, 8 – 9 கடினப்படுத்துவது என்றால் என்ன? ஒரு மனிதன் முதல்முறை தவறு செய்கிறபோது, அவனையறியாமலேயே குற்ற உணர்வு அவனை ஆட்கொள்கிறது. தவறு செய்து விட்டோமே என்று அவன் வேதனைப்படுகிறான். அந்த தருணத்தில் அவன் தவறிலிருந்து விடுபட வேண்டும். அந்த தருணத்தை அவன் தவறவிட்டு விட்டால், அதன் பிறகு அவனது குற்ற நடவடிக்கைகள் தொடரும். தவறு செய்வது அவனுக்கு பழக்கமாகிவிடும். அதுதான் கடின உள்ளம். தவறு செய்வதைப்பற்றிக் கவலைப்படாத உள்ளம். திருந்த நினைக்காத உள்ளம். இலக்கில்லாத உள்ளம். இஸ்ரயேல் மக்கள் இத்தகைய கடின உள்ளம் கொண்டிராதவாறு, கடவுள் அவ்வப்போது அவர்களை நினைவூட்டிக் கொண்டிருந்தார். கடவுளிடமிருந்து அவர்கள் ஏராளமான அருட்கொடைகளைப் பெற்றிருந்தாலும், அவர்கள் கடவுளை மறந்துவிட்டு, வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்றனர். கடவுள் தங்களுக்குத் தேவையில்லை என்று நினைத்தனர். ஆனால், அதற்கான பலனை அவர்கள் அனுபவித்தபோது, மீண்டுமாக கடவுளைத் தேட ஆரம்பித்தனர். இது தொடர்ந்து...

வாழ்வு தரும் இறைவார்த்தை

இறைவார்த்தை நமது வாழ்விற்கு வழிகாட்டியாக இருந்து நம்மை வழிநடத்துவதாக இருக்கிறது என்பதை, இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். ஓய்வுநாளைப் பற்றிய ஒரு பிரச்சனை, பரிசேயர்களால் எழுப்பப்படுகிறது. அந்த பிரச்சனைக்கு தீர்வு எப்படி காண்பது? எது சரி, எது தவறு என்பதை எப்படிச் சொல்வது. இறைவார்த்தை வழிகாட்டியாக இருக்கிறது. இயேசு தனது சீடர்களைப் பிரச்சனையிலிருந்து காப்பாற்ற, இறைவார்த்தையை மையப்படுத்திச் சொல்கிறார். பிரச்சனைகளுக்கு தீர்வாக, நிச்சயம் இறைவார்த்தை இருக்கிறது என்பதை, இது நமக்குச் சொல்கிறது. இறைவார்த்தையை மையப்படுத்தித்தான் இயேசுவின் வாழ்க்கை அமைந்திருந்தது. தொடக்கத்தில் இயேசுவின் குழந்தைப்பருவ நிகழ்ச்சிகளின் முடிவில், மறைநூல் வாக்கு நிறைவேறவே, இவ்வாறு நிகழ்ந்தது என நற்செய்தியாளர்கள் சொல்வது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இயேசு சோதிக்கப்படுகிறபோது, அந்த சோதனையை எதிர்த்து வெற்றிபெறுவதற்கு, இயேசுவிற்கு உதவியாக இருந்தது இறைவார்த்தை தான். தனது பணிவாழ்வை ஆரம்பிக்கிறபோது, கடவுளின் பணிக்காக தனது வாழ்வையே அர்ப்பணிக்கிறவர் எதனை இலக்காகக் கொண்டு வாழ வேண்டும் என்பதை,...

மகிழ்ச்சியாக இருக்க விடுங்கள்…

லூக்கா 5:33-39 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் மகிழ்ச்சியாக இருப்பதை விரும்பாத ஒருசிலர் எதையாவது, அவசியமில்லாததைச் சொல்லி நம்முடைய மகிழ்ச்சியை தடைசெய்ய அதிக ஆசைப்படுவர். அவர்களைக் காணும் போது எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் சொல்லித் தருகிறது. 1. கண்டுக்கவே வேண்டாம் கேட்க வேண்டும். ஆனால் அதற்கு பதில் பேசக் கூடாது. அதை பெரிதாக எண்ணக் கூடாது. பெரிதாக எண்ணினால் அவர்கள் பெரிய ஆளாக மாறிவிடுவார்கள். நம் மகிழ்ச்சி பறிபோகும். இயேசு பரிசேயர்கள், சதுசேயர்கள் பேசும்போது கையாண்ட பாணியை நாம் கையாள வேண்டும். 2. கறைப்படுத்தவே வேண்டாம் நம் மகிழ்ச்சிக்கு தடையாக இருக்கும் மனிதர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்ற...