Tagged: இன்றைய சிந்தனை

ஆவலோடு எதிர்பார்த்தது இதோ விரைவில்…

லூக்கா 21:20-28 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் ஆவலோடு எதிர்பார்த்திருந்தது கிடைக்கும் போது நமக்கு பெருமகிழ்ச்சி கிட்டுகிறது. நாம் எதிர்பார்த்திருந்தன் நோக்கமும் நிறைவு பெறுகிறது. நமது மனதின் ஏக்கமும் முடிவுக்கு வருகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவார் என எதிர்பார்த்திருக்கும் நமக்கு மிக உடனடியாக அவரது இரண்டாம் வருகை இருக்கும், நம் ஏக்கம் நிறைவேற போகிறது என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவின் இரண்டாம் வருகை நமக்கு இரண்டு ஆசீரைத் தருகிறது. 1. மீட்பு இயேசுவின் இரண்டாம் வருகையை நம்பியிருக்கும் எல்லோருக்கும் இயேசுவின் வருகை மீட்பு அளிக்கும். அந்த மீட்பிற்கான நாள் வெகுதொலையில் இல்லை. மாறாக மிகவும் அருகில் உள்ளது. நாம் அனைவரும் மெசியாவைப் பார்க்க...

நன்மைக்கு அமோக வெற்றி!

லூக்கா 21:12-19 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உலகில் வாழும் காலத்திலிருந்து கடைசி வரை நன்மைக்கும் தீமைக்கும் இடையே போட்டி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அந்த போட்டிகள் ஏதோ குறிப்பிட்ட காலத்தில் மட்டும் நடைபெறுவதல்ல. மாறாக தினம் தினம் நடைபெறுகின்றன. நாள்தோறும் நடைபெறும் இப்போட்டியில் நன்மை வெற்றி பெற்றால் நாம் சாதித்திருக்கிறறோம் என்று அர்த்தம். தீமை வெற்றி பெற்றால் நாம் சரிந்திருக்கிறோம் என்று அர்த்தம். பரிசோதித்துப் பார்க்க இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை பரிவோடும் பாசத்தோடும் அழைக்கின்றது. கிறிஸ்தவர்கள் நாம் நன்மையை வெற்றி பெற செய்ய வேண்டும். நம் வாக்குகள் அனைத்தையும் நன்மைக்கு அளிக்க வேண்டும். நன்மையை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்....

இடிக்கப்படும்! எல்லாம் இல்லாமல் போகும்!

லூக்கா 21:5-11 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் ஆர்வமாக மண்ணகத்தில் வாழும் போது பல கட்டிடங்களை நமக்காக கட்டுகிறோம். பலவிதமான செல்வங்களை சேகரிக்கின்றோம். பல உறவுகளோடு உற்சாகமாக இருக்கின்றோம். சிறப்பு கார்களில் உலா வருகின்றோம். பல படிப்புக்களை படித்து மேதையாகின்றோம். சிறந்த வேலையில் அமர்கின்றோம். இவையெல்லாம் நமக்காக மட்டுமே செய்கின்றோம். நம் பெயர் மகிமை பெற செய்கின்றோம். நம் புகழை இரண்டு மூன்று பேர் சொல்ல வேண்டும் என்பதற்காக செய்கின்றோம். நம் பெருமைக்காக செய்யும் இவையனைத்தும் இடிக்கப்படும் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். எருசலேம் ஆலய கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இடிக்கப்படுவது போல நம் சுயநலத்திற்காக மண்ணகத்தில் செய்யும் அனைத்தும் இடிக்கப்படும். அவையனைத்தும் காணாமல்...

குவித்து வைப்பது பாவம்

லூக்கா 21:1-4 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நற்செய்தி வாசகத்தில் ஏழைக் கைம்பெண் போட்ட காணிக்கையை ஆண்டவர் இயேசு கிறிஸ்து மிகவும் பாராட்டுகிறார். ஏன்? அவர் தனக்கு பற்றாக்குறை இருந்தும் அனைத்தையும் போட்டார். அடுத்து என்ன செய்வது என்பது தெரியாதிருந்தும் காணிக்கையளித்தார். மற்றவர்கள் தங்களுக்கென்று நிறைய சேமித்து வைத்து மிகவும் கொஞ்சமாக காணிக்கை போட்டனர். ஆனால் இவரோ தனக்கென்று எதையும் சேமிக்காமல் இருந்த அனைத்தையும் போட்டுவிட்டார். ஆகவே இயேசுவின் சிறப்பு ஆசீரைப் பெறுகின்றார். அன்புமிக்கவர்களே! நாம் நமக்கென்று குவித்து சேர்த்து வைப்பது பாவம். நமக்கு தேவையானது, நமக்கு குடும்பத்திற்கு தேவையானது போக மீதமிருப்பதை கடவுளுக்கு கொடுக்க வேண்டும், மற்றவரோடு பகிர வேண்டும். இரண்டு வழிகளில் அதை செய்யலாம்....

ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்

திருப்பாடல் 23: 1 – 2, 2 – 3, 5 – 6 உலகத்தில் வாழ்கிற மனிதர்கள் அனைவருமே நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று ஆவல் கொண்டிருக்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடு தான், மருத்துவத்துறை மற்றும் அறிவியலின் அசுர வளர்ச்சி. நாம் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கான எளிய முறையை திருப்பாடல் ஆசிரியர் நமக்குத் தருகிறார். அதாவது, ஆண்டவர் நம்முடைய ஆயராக இருக்கிறபோது, நாம் நீண்டநாட்கள் நிச்சயம் மகிழ்ச்சியோடு, நிறைவோடு வாழ முடியும் என்பது, ஆசிரியரின் நம்பிக்கையாக இருக்கிறது. எப்படி நாம் நீண்ட நாட்கள் வாழ முடியும்? நமக்கு எதிரிகள் இருக்கமாட்டார்களா? நமக்கு நோய், நொடிகள் வராதா? நம்மை எதிர்க்கிறவர்கள் இருக்க மாட்டார்களா? எதிர்ப்புக்கள் அனைத்துமே இருக்கும். ஆனால், ஆண்டவர் நம் சார்பில் இருந்து செயலாற்றுவார். ஆண்டவரை நம் ஆயராக ஏற்றுக்கொள்கிறபோது, இறைவன் நம்மை நலன்களால் நிரப்புகிறார். நம்முடைய பாத்திரம் நிரம்பி வழிகிற அளவுக்கு, கடவுள் நமக்கு ஆசீர்வாதங்களைத் தருகிறார்....