Category: இன்றைய வசனம்

கடவுளின் மீட்பு

விண்ணுலகையும், மண்ணுலைகையும் படைத்து, விண்ணுலகை ஆள்வதற்கு தேவதூதர்களையும், மண்ணுலகை ஆள்வதற்கு தமது தொற்றத்தின்படியே மனிதனை உருவாக்கி, ஒரே இரத்தத்தால் தோன்றச் செய்து ஆசீர்வதித்து உலகம் தோன்றின காலமுதல் இன்றுவரை யதார்த்தமாய் வழிநடத்திய நம் கடவுளுக்கு மிகவும் பிரியமான அன்பானவர்களே!  நாம் பாவத்திலும், சாபத்திலும், விழுந்து போகாதபடிக்கு சாத்தானின் நரித்தனமான சோதனைகளிலிருந்து மீட்கவே நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இவ்வுலகில் குழந்தையாய் அவதரித்து நம்முடைய சமாதானத்துக்காக, சந்தோசத்திற்காக அவர் தம்மையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தார். இயேசுகிறிஸ்து தம்மை தாழ்த்தி சிலுவையை சுமந்து தலையில் முள்முடி சூட்டப்பட்டது எதற்காக? மனுகுலமே உங்கள் ஒவ்வொருவருக்காக. கிறிஸ்து என்பது ஒருவழி. அதுவும் ஒரேவழி அதுமட்டும்தான்.  திருத்தூதர்பணி 4:12;  யோவான் 14:6 ; அவராலே அன்றி மீட்பு யார் மூலமாகவும் இல்லை என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். சிலபேர் அறியாமல் அவர் கிறிஸ்துவர்களுக்காய் சிலுவை சுமந்தார் என்று நினைத்து [நானும்  ஒருகாலத்தில் இதுமாதிரி அறியாமல் இருந்ததால் இதை உங்களுக்கு சொல்கிறேன்.] தங்களுக்கென்று ,ஒரு கல்லினாலோ அல்லது மரத்தினாலோ ஒரு தெய்வத்தை உண்டுபண்ணி வணங்கி அதற்கு பலி செலுத்துகிறார்கள். இந்த உலகத்தையே படைத்த கடவுளை நாம் படைக்க...

கண்டித்து திருத்தும் நம் ஆண்டவர்

அன்பானவர்களே!!! நாம் இந்த உலகத்தில் வாழும் வாழ்க்கையில் நமக்கு எது முக்கியம் என்று தெரியாமல் அநேக காரியங்களில் தலையிட்டு சில சமயங்களில் நமக்கு நாமே எதிரி என்று சொல்லும் அளவுக்கு நம் எண்ணங்களும்,செயல்களும்,சில நேரங்களில் பொல்லாதவனவாக மாறிவிடுகிறது. அதனால்தான் நம்முடைய தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்கு துணை நிற்கிறார். ஏனெனில் எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது. தூய ஆவியார் தாமே சொல் வடிவம் பெறமுடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாக நமக்காக பரிந்து பேசுகிறார். உள்ளங்களை துருவி ஆயும் கடவுள் தூயஆவியாரின் மனநிலையை அறிவதால் கடவுளுக்கு உகந்த முறையில் நமக்காக வேண்டுதல் செய்கிறார். நாம் செய்ய வேண்டிய காரியத்தை நமக்கு தெளிவாக புரியவைக்கிறார். ரோமையர் 8:26-27 . ஒருசில நேரங்களில் நாம் வேண்டிக்கொள்வது நமக்கு கிடைக்காத பட்சத்தில் நம் மனம் சோர்ந்து போகிறோம். இல்லை பிரியமானவர்களே!! அதைவிட மேலான பெரிய காரியத்தை தரும்படிக்கே கடவுள் சமயத்தில்...

இந்நாளின் ஆசீர்வாதம்

இந்த நாளுக்குரிய ஆசீர்வாதத்தை கடவுள் உங்களுக்கு தர ஆவலோடு இதோ உங்கள் அருகில்,உங்கள் பக்கத்தில் நின்றுக்கொண்டு இருக்கிறார் பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் – மத்தேயு 11:28.இதோ என்னையே உங்களுக்காக கொடுத்தேனே. நீங்கள் விரும்பி கேட்கும் ஆசீர்வாதத்தை தரமாட்டேனா என்னை நோக்கி கூப்பிடும் யாவரையும் நான் ஆற்றி தேற்றுவேன். “நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்” – யோவான் 14 :14. ஜெபம். அன்பே உருவான இயேசப்பா, உம்மிடத்தில் வருகிரயாவரையும் அணைத்து காத்து நடத்தும் தகப்பனே உமக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன். என்னை நோக்கி கூப்பிடு,அப்பொழுது நான் உனக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன் என்று வாக்கு கொடுத்த இறைவா, உம்மையே நம்பி கூப்பிடுகிறேன். என்னுடைய எல்லா கஷ்டத்தையும் நீக்கி கரம் பிடித்து வழி நடத்தி காத்துக்கொள்ளும். எல்லா துதி,கணம்,மகிமை,உமக்கே  உண்டாகட்டும். கிறிஸ்துவுக்கே புகழ்!  கிறிஸ்துவுக்கு நன்றி ! ஆமென்.

சகோதர அன்பு

நாம் யாவரும் கடவுளின் மக்கள் என்று அழைக்கப்படுகிறோம். கடவுள் நம்மிடம் எத்துனை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். 1 யோவான் 3:1. ஆண்டவரிடம் எந்தவொரு பாரபட்சமும் இல்லை. அவருடைய  சாயலாக படைக்கப்பட்ட நம் எல்லோரையும் சகோதர,சகோதரிகளாய்  அவருடைய உறுப்பாய் இருக்கும்படி படைத்திருக்கிறார். உடல் ஒன்றே: உறுப்புகள் பல, உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல நாமும் கிறிஸ்துவின் உறுப்புகளாய் இருக்கிறோம். 1 கொரிந்தியர் 12 :12- 13. நீங்கள் யூதரா? கிரேக்கரா? செல்வந்தரா? அடிமையா? நாம் எல்லோரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்கு பெற்று அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். இவ்வாறு கடவுள் நம்மை படைத்திருக்கும்பொழுது நமக்குள் ஏன்  கோபம், சண்டை, பொறாமை, பகைமை, பிரிவினை, கட்சிமனப்பான்மை? [கலாத்தியர் 5:20.] இதையெல்லாம்விட்டு நாம் யாவரும் ஆண்டவர் விரும்பும் பிள்ளைகளாக மாறி வாழுவோம். ஆவியின் கனியாகிய அன்பு மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்மை, நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் இவைகளைப் பற்றிக்கொண்டால் நம்மிடம் அன்பு நீரூற்றைப்போல் ஊறும். கலா 5: 22 நாமும் அவருடைய உறுப்பாய்...

யார் பெரியவர்.

என்றும்போல் அன்றும் விடியக்காலத்தில் சரளா எழுந்து வந்து வாசற்கதவை திறந்தாள். அப்பொழுது திண்ணையில் மூன்று வழிப்போக்கர்கள் [வயதானவர்கள்] உட்கார்ந்து இருந்தார்கள். சரளாஅவர்களைப் பார்த்து ஐயா!உங்களுக்கு என்ன வேண்டும், ஏன் இங்கே உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று கேட்டாள் . அவர்கள் அவளிடம் அம்மா,நாங்கள் தூர தேசத்திலிருந்து வருகிறோம். இராமுழுதும் நடந்து வந்ததால் சிறிது களைப்பாக உள்ளது. அதனால் சிறிது நேரம் இங்கே உட்கார்ந்து இளைப்பாறிவிட்டு செல்லலாம் என்று நினைத்து இங்கே உட்கார்ந்து இருக்கிறோம். இதோ நன்கு விடிந்ததும் அருகில் உள்ள டீ கடைக்கு சென்று டீ அருந்திவிட்டு பக்கத்து கிராமத்துக்கு செல்கிறோம்,என்று சொன்னார்கள். உடனே சரளா ஐயா!உங்களுக்கு விருப்பம் இருந்தால் நான் டீ போட்டு தருகிறேன். நீங்கள் அருந்திவிட்டு செல்லுங்கள். நீங்கள் என் அப்பா மாதிரி இருக்கிர்கள் என்று சொன்னாள். அதற்கு அவர்கள் உன்னிடம் டீ வாங்கி குடிக்க வேண்டும் என்றால் உன் வீட்டுக்குள் வரவேண்டும் என்றால் எங்களில் யாரை முதலில் அழைப்பாயோ, அதைவைத்துதான் நாங்கள் உள்ளே வருவோம் என்று சொன்னார்கள். நாங்கள் மூவரும் ஒவ்வொரு குணாதிசயம் கொண்டவர்கள். நாங்கள்...