Category: இன்றைய வசனம்

கடவுள் நமக்கு மீட்பு அளித்துவிட்டார்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நல்ல நாமத்தில் எங்கள் அன்பான நல்வாழ்த்துக்கள். நம்முடைய ஆண்டவராகிய கிறிஸ்து இந்த உலகில் வந்து வாழ்ந்து நம் ஒவ்வொரு தேவைகளையும் சந்தித்து நமக்கு சந்தோஷத்தையும், சமாதானத்தையும் அளித்து தமது கிருபையினால் நம்மை மீட்டெடுத்து நமக்கு நல்வாழ்க்கையை தந்தருளியிருக்கிறார். கடவுள் நம்மை உருவாக்கி பெயர் சொல்லி அழைத்து நம் வலக்கரம் பிடித்து வழிநடத்தி காத்து வருகிறார். நிலையற்ற இந்த உலகில் நாம் மகிழ்ந்து வாழ்ந்திருக்கும்படி நம் குற்றங்களைக் கார்மேகம் போலும் நம் பாவங்களை பனிபடலம் போலும் அகற்றி பிள்ளைகளே என்னிடம் திரும்பி வாருங்கள் நான் உங்களுக்கு மீட்பு அளித்துவிட்டேன் என்று சொல்கிறார். எசாயா 44:22. நாம் நமது தேவைகளையும், எண்ணங்களையும் அவரிடம் ஒப்புக்கொடுத்து நம் விருப்பங்களை நிறைவேற்றி கொள்ளலாம். அதற்காக தானே இந்த உலகில் வந்தார். தமது உயிரை கொடுத்தார். அதனால் நாம் கலங்காமல், அஞ்சாமல் அவருடைய சாட்சிகளாய் வாழ்வோம். நம்மை படைத்தவரும், உருவாக்கியவருமான நம் ஆண்டவர் கூறுவதை பாருங்கள். அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக்கொண்டேன்:உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்: நீ எனக்கு...

நமக்கு விரோதமாய் உருவாக்கப்படும் ஆயுதம் நிலைத்திராது

அன்பான சகோதர,சகோதரிகளுக்கு, நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இன்றும் நாம் வாழும் இந்த உலகத்தில் பொல்லாத பிசாசு நமக்கு எதிராக எத்தனையோ சோதனைகளை உண்டுபண்ணி நம்மை கடவுளிடம் இருந்து பிரிக்க பல முயற்சிகளை செய்துகொண்டுதான் இருக்கிறான்.ஆனால் நாம் அவனுடைய தந்திரங்களுக்கு விலகி நம்மை பாதுகாக்க அனுதினமும் ஆண்டவரின் அருளையும்,கிருபையையும் பெற்று சோதனையிலிருந்து நம்மை விலக்கி பாதுகாத்துக்கொள்வோம். நாம் இரவும், பகலும் ஆண்டவரின் திருச்சட்டத்தை சிந்தித்து நடந்து நம்மை காத்துக்கொண்டால் நற்பேறு பெற்றவர்களாய் திகழலாம். சங்கீதம் 1:2. ஆண்டவரின் வார்த்தைகளை கைக்கொண்டு நடந்தோமானால் எந்த ஆயுதமும்,நம்மை சேதப்படுத்தாது.நம்மை தாக்குமாறு உருவாக்கப்பட்ட எந்த போர்க்கருவியும்,நிலைத்திராது. நம்மேல் குற்றம் சாட்டி தீர்ப்பு சொல்லும் நாவை ஆண்டவர் அடக்கி விடுவார்.இதுதான் அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு அவர் அளிக்கும் உரிமைச்சொத்து. எசாயா 54:17. ஒருவேளை நொடிப்பொழுது நம்மை கைவிடலாம்.ஆனாலும் அவருடைய பேரன்பால் நமக்கு இரக்கம் காட்டுவார். ஏசாயா 54:7. நாம் எந்தவொரு காரியத்தை குறித்தும்,கவலைப்படாமல் நம் பாரத்தை...

நன்மையானதை தரும் ஆண்டவர்

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். நம் ஆண்டவர் இந்த உலகத்தில் வாழ்ந்த பொழுது கலிலேயா,மற்றும் யூதேயா நாடு முழுதும் சுற்றித்திரிந்து மக்களை சந்தித்து அவர்கள் தேவைகளை எல்லாம் நிறைவேற்றி பல நன்மைகளை செய்து வந்தார்.பகல் முழுதும் மக்களை சந்தித்து அவர்கள் விரும்பியதை கொடுத்து இரவு முழுதும் தமது பிதாவை நோக்கி வேண்டுதல் செய்ததாக வேதத்தில் வாசிக்கிறோம்.அதே ஆண்டவர் இன்றும் நம்முடன் கூடவே இருக்கிறார்.நம் தேவைகளை சந்திக்க காத்திருக்கிறார்.அவரிடத்தில் கேட்பவர்களுக்கு அவர் ஒருபோதும் இல்லை என்று சொல்லவே மாட்டார். அன்பானவர்களே இன்றும் நீங்கள் பலவித கஷ்டங்களை சந்திப்பவராக இருக்கலாம். வியாதியினால் கஷ்டம்,கடன் பிரச்சனையினால் கஷ்டம்,ஒரு நல்ல வேலை இல்லையே என்று கவலை,குடியிருக்க ஒரு வீடு இல்லையே என்று ஏங்கலாம்.எதற்காகவும் நீங்கள் மனங்கலங்க வேண்டாம்.இதோ நமக்கு நன்மைகளை தரும்படிக்கே ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்தில் வந்து நம்மைப்போல் பல கஷ்டங்களை அனுபவித்து,அந்த கஷ்டத்தின் வேதனையை உணர்ந்தவராய்,நாம் அதிலிருந்து...

அன்பின் தின சிறப்பு நிகழ்ச்சி

அன்பானவர்களே!உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பான அன்பின் நல்வாழ்த்துக்கள். கடவுள் மனிதனை படைத்து அவன் இதயத்தில் அன்பு என்ற பூவை உருவாக்கி அந்த பூ அந்த மனிதனையும், அவனை சார்ந்த அனைவரையும் மணக்க செய்ய வேண்டுமாய் விரும்பி மனிதனின் இதயத்தில் அன்பை விதைத்தார். ஆனால் நாமோ பிறரை அன்பு என்ற மனம் கொண்டு கவர்ந்து செயல்படுவதை விட்டு, சுயநலம், தற்புகழ்ச்சி, பெருமை, வெறுப்பு, தன்னலம் என்று நமக்கே நமக்கு என்று வாழ்ந்து கடவுளின் வழியில் இருந்து பிரிந்து சென்று பல இன்னல்களை வருவித்து கொள்கிறோம். இன்று உலகம் முழுக்க உள்ள அனைத்து மக்களும் கொண்டாடும் காதலர் தினம் அதாவது அன்பின் தினத்திற்கான அர்த்தம் புரியாமல் நம் இஷ்டத்துக்கு வாழ்ந்து பாவத்தை சேர்த்து கொள்கிறோம். காதல் என்றால் அன்பு. அந்த அன்பை நாம் எவ்வாறு கடைப்பிடித்து வாழ்கிறோம் என்று நாம் யோசித்து நம் மனசாட்சியில் குற்றமற்றவர்களாய் வாழ கற்றுக்கொள்வோம். காதலர் தினம் கொண்டாடுவது தவறு...

நம் நம்பிக்கையால் உலகத்தையே வெல்லலாம்.

இயேசுகிறிஸ்துவின் பேரில் நம்பிக்கை கொண்ட அன்பார்ந்த நெஞ்சங்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள். அன்பானவர்களே! நாம் வாழ்க்கையில் பல நேரங்களில் தோல்வியை கண்டு மனம் சோர்ந்து போய் விடுவதும் அல்லாமல் தற்கொலை செய்யும் அளவுக்கு கூட போய்விடுகிறோம். ஆத்திரத்திலும், அவசரத்திலும் எடுக்கும் முடிவு நம்மை எங்கோ கொண்டு சென்று விடுகிறது. அதனால்தான் நம் ஆண்டவர் அவருடைய பிள்ளைகள் ஒருபோதும் தோல்வியை கண்டு மனம் சோர்ந்து போய்விடக் கூடாது என்று நமக்கு முன்மாதிரியான வாழ்வை வாழ்ந்து காண்பித்து அவருடைய உயிரையே கொடுத்து நம்மை மீட்டு காத்தும் வருகிறார். மானிட அவதாரம் எடுத்த நம் ஒவ்வொருவருக்கும் ஆண்டவராகிய கடவுள் அவருடைய திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசுவின்மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே நாம் யாவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக ஆகும்படி நம்பிக்கையை நம் இதயத்தில் வைத்துள்ளார். அது குறையாதபடிக்கு காத்துக்கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.        ரோமர் 3:28. நாம் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்தில்...