Category: இன்றைய வசனம்

நம்முடைய தேவைகளை அறிந்து வைத்திருக்கிறார்

அன்பார்ந்த சகோதரர்,சகோதரிகளுக்கு,நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த உலகில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் பலவிதமான காரியங்கள் தேவைப்படுகிறது. பணத்தேவை, பொருளாதரத்தேவை, வீடு தேவை, நம்மை நேசிக்கும் அன்புள்ளங்கள் தேவை, நம் கவலைகளை பகிர்ந்துக்கொள்ள நல்ல நண்பர்கள் தேவை, இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். சில வீடுகளில் பணம், பொருளாதாரம இருக்கும்.ஆனால் அதை அனுபவிக்க அவர்களால் கூடாது போகலாம். நல்ல சுகம் இருக்கும், அவர்கள் பசியாலும், பட்டினியாலும் துன்பப்படுவார்கள். ஆனால் நம்முடைய தேவன் நம் மேல் மனதுருகி இந்த மாதிரியான கஷ்டங்களில் இருந்து நம்மை பாதுக்காக்க வல்லவராய் இருக்கிறார். அவரை நோக்கி கூப்பிடும் யாராயிருந்தாலும் இவைகளில் இருந்து விடுவிக்கப்படுவர். ஒருபோதும் தம்முடைய பிள்ளைகள் கஷ்டப்படுவதை ஆண்டவர் விரும்பமாட்டார் . கடவுள் தம்முடைய பிள்ளைகளுக்கு யார் மூலமாவது உதவிகளை அனுப்புவார். இதை வேதத்தில் நாம் நிறைய இடங்களில் வாசிக்கலாம். எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது: நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரவேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர். ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா...

நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்யாமல் இருப்போம்

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஒவ்வொரு சகோதரர் ,சகோதரிகளுக்கு என் அன்பின் நல்வாழ்த்துக்கள். பிரியமானவர்களே! விண்ணையும், மண்ணையும் படைத்த நம்முடைய கடவுள் அதை ஆள்வதற்கு மனுஷனையும் படைத்து இந்த பூமி முழுதும் நிரம்பும்படி செய்து அவர்களை இந்த பூமியை ஆண்டுக்கொள்ளும் படியும் செய்து,நம் அனைவருக்கும் ஒரே கடவுளாய் இருந்து நம்மை உருவாக்கி பரம்பரை பரம்பரையாக வரும் நம்முடைய முன்னோர்களின் உடன்படிக்கையை காத்து நடந்து கடவுளின் திருமுன் குற்றமற்றவர்களாய் நிற்கும்படி இந்த நாளில் உறுதி எடுத்து நம்முடைய சகோதரர் சகோதரிகளுக்கு துரோகம் ஏதும் செய்துவிடாதபடி ஆண்டவரின் முன் நிற்க நம்மை தகுதிப்படுத்தி,ஒரே இரத்தத்தால் கழுவப்பட்டவர்களாய் முன்னே தூரமாய் இருந்தவர்களும் இப்போது அவரின் பிள்ளைகளாய் ஓன்று கூடி அவர்முன் நம்மை தாழ்த்தி அவர் பாதம் பணிந்திடுவோம். நாம் யாவரும் ஆண்டவரின் ஒவ்வொரு கட்டளைக்கும் கீழ்படிந்து நடந்து அவர் நம்மோடு செய்துக்கொண்ட உடன்படிக்கை, வாழ்வும்அமைதியும்,தரும் உடன்படிக்கை யாவையும் காத்து நடக்கவே நமக்கு அறிவை அளித்திருக்கிறார்.மெய்போதனை அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது. தீமை அவன் உதடுகளில் காணப்படவில்லை: அவன் என் திருமுன் அமைதியோடும்,...

கிறிஸ்துவின் பணியாளராய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுவோம்.எபேசியர் 6:6

கர்த்தருக்குள் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம்முடைய எல்லா வேண்டல்களையும், மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்பி கிறிஸ்துவின் பணியாளர்களாய் செயல்பட்டு கிறிஸ்து எப்படி தான் ஒரு தெய்வ குமாரனாய் இருந்தும் தனது தந்தைக்கு எல்லா காரியங்களிலும் கீழ்படிந்து வாழ்ந்து அவரின் திருவுளத்தை நிறைவேற்றினாரோ நாமும் அதைப்போல் எல்லாக்காரியத்திலும் கிறிஸ்துவைப்போல் செயல்பட்டு கடவுளின் திருவுளத்தை அறிந்து அதன்படியே வாழ்ந்து அவரின் சித்தத்தை நிறைவேற்றுவோம். அப்பொழுது நமக்கு ஏற்படும் எல்லா பிரச்சனைகளிலும் இருந்து நம்மை பாதுகாத்து, காப்பாற்றி நம் தேவைகளையும், நாம் விரும்பும் எல்லாவற்றையும் கொடுத்து நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவார். நாம் வாழும் இந்த உலகத்தில் பலவிதமான கஷ்டங்களையும், இன்னல்களையும் நாம் ஒவ்வொருவரும் அனுபவக்கிறோம். கஷ்டம் இல்லாத வாழ்க்கை இல்லை என்று சொல்லும் ஒருவராகிலும் கிடையாது. ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர், வான்வெளியிலுள்ள தீயஆவிகள் ஆகியவற்றோடும் போராடி வாழ்கிறோம். ஆகையால் நாம் கடவுளோடு இணைந்து அவர் தரும் வல்லமையாலும்,...

தூய ஆவியின் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்வோம்.எபேசியர் 4:3.

அன்பார்ந்த சகோதர,சகோதரிகளுக்கு,நம்முடைய தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும் தூய ஆவியால் நிரம்பி ஜெபித்து, ஆண்டவரின் சித்தத்தை அறிந்து அதன்படியே செயல்பட்டால் நம் வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான கஷ்டங்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள தூய ஆவியானவர் நமக்கு உதவி செய்வார். வீண் வார்த்தைகளால் உங்களை யாரும் ஏமாற்றமுடியாது. ஏனெனில் நம்மில் இருக்கும் ஆவியானவர் இருளில் இருந்து காப்பாற்றி நம்மை ஒளியினிடத்தில் அழைத்து செல்பவராய் நமக்குள் வாசம் செய்கிறார். நமக்குள் இருப்பவர் உலகில் இருக்கும் எதிர்க் கிறிஸ்துவைவிடப் பெரியவர். யோவான் 4:4. தூய ஆவியின் தூண்டுதல் தமக்கு இருக்கிறது என்று சொல்லும் யாவரையும் நம்பவேண்டாம். அந்த தூண்டுதல் கடவுளிடம் இருந்து வருகிறதா என்று சோதித்து பார்த்து அறிந்துக்கொள்ளுங்கள். ஏனெனில் போலியானவர்கள் உலகெங்கும் தோன்றியுள்ளார்கள். நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவினால் உங்களால் நன்கு கண்டுணரமுடியும். அந்த அருள் பொழிவினால் உண்மை எது? பொய் எது? என்று நன்கு கற்றுக்கொள்ளலாம். நீங்கள் கற்றுக்கொண்டதற்கேற்ப ஆண்டவரோடு இணைந்து வாழ்ந்து ஒருமைப்பாட்டைக் காத்துக்...

அன்பும்,அமைதியும்,அளிக்கும் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்  இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் ஆண்டவருக்கு பிரியமானவர்களாய் இருக்கிறோமா என்று நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்த்து அவருக்கு பிரியமாய் வாழ்ந்தோமானால் அவர் நம்மேல் வைத்த அன்பு இன்னது என்று விளங்கும். அன்பே உருவான கடவுள் நம் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிப்பார்த்தார்.நாம் சந்தோசமாக, சமாதானமாக, அமைதியுடன் வாழ வேண்டுமாய் அவர் தம் உயிரையே நமக்காக கொடுத்தார். நம்முடைய அறிவுக்கெட்டாத அந்த அன்பை நாமும் அறிந்தோமானால் அதின் மகிமை நமக்கு நன்கு விளங்கும்.இதை வாசிக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் அன்பை அறிந்துக்கொள்ளும் வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பூரணத்தினாலும நிறையப்படவும், கடவுளின் மகிமையின்படி அவரின் அன்பின் மகத்துவத்தை அறிந்து செயல்பட்டால் எவ்வளவு நலமாயிருக்கும். அப்பொழுது நம் தேவன் நமக்கு அன்பையும்,அமைதியும் அளித்து நம்மோடு இருந்து நம்மை ஆசீர்வதிப்பார். அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. அதனால் தான் மறைநூல் அன்பு திருச்சட்டத்தின் நிறைவு என்று கூறுகிறது. நாம் ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு...