Category: இன்றைய வசனம்

உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்

நோவா ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்ததுபோல் ஆபிரகாம் ஆண்டவரின் வார்த்தையை அப்படியே நம்பினதால் ஆண்டவரின் சிநேகதரர் ஆனார்.ஏனெனில் ஆபிரகாமும் சாராவும் வயது முதிர்ந்த வர்களாய் இருந்தார்கள்.சாராவுக்கு மாதவிடாயும் நின்று போயிற்று.இந்த ஒரு சூழ்நிலையில் குழந்தை பிறக்கும் என்று சொல்கிறப்பொழுது யாரால்தான் நம்பமுடியும்?ஆனால் ஆபிரகாம் ஆண்டவர் சொன்னதை நம்பினார்.நம்பிக்கை என்பது கண்ணுக்கு புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை.எபிரேயர் 11:1.அவரின் உறுதியான நம்பிக்கையால் அதிசயத்தை கண்டார். அன்பானவர்களே! நாமும் ஆண்டவரின் வாக்கை நம்பி நாம் வேண்டிக்கொண்டதை ஆண்டவர் நமக்கு தருவார் என்று உறுதியாய் நம்பினால் நிச்சயம் நம் நம்பிக்கையை ஆண்டவர் கணப்படுத்துவார் . அதிசயத்தைக்காணச் செய்வார். நாம் நமக்கு கொடுக்கப்பட்ட பணியில் ( வேலையில் ) யோசேப்பை போல உண்மையாய் இருந்தோமானால் ஆண்டவர் செய்யும் அதிசயத்தை காணலாம். நாம் நம்முடைய செயல்கள் யாவற்றிலும் உண்மையாய் இருந்தால் ஆண்டவர் நம்மோடு கூடவே இருப்பார். தொ.நூல்.39:2ல் ஆண்டவர் யோசேப்புடன் உடன் இருந்ததுபோல் நம்மோடும் இருப்பார். அவரை அவரின் சகோதரர் பொறமைக்கொண்டு அடிமையாய் விற்ற போதிலும் யோசேப்பு உண்மையாய் இருந்ததால் ஆண்டவர் அவருடனே இருந்தார்....

உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். மீகா 7 : 15

தேசத்தில் உள்ள எல்லா மக்களே!கடவுளின் நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, ஆண்டவரைத் தேடுங்கள்.அவரின் நீதியை தேடுங்கள். மனத்தாழ்மையை தேடுங்கள். அப்பொழுது ஆண்டவர் நம்மை எல்லாப்பொல்லாப்புக்கும் விலக்கி அதிசயங்களைக் காணப்பண்ணுவார். அவர் நம்நடுவில் இருக்கிறார். வல்லமையுள்ளவர். அவரே இரட்சிப்பார். அவர் நமது பேரில் சந்தோஷப்பட்டு மகிழ்ந்து தம்முடைய அன்பின் நிமித்தம் அமர்ந்திருப்பார். இஸ்ரயேல் ஜனங்கள் எகிப்தில் இருந்து புறப்பட்ட காலத்தில் அநேக அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்தார். நாமும் ஆண்டவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் பயந்து, கீழ்படிந்து நடக்கும்பொழுது அவரின் கிருபை நம்மை சூழ்ந்துக்கொள்ளும்.நாம் அவருக்காக பொறுமையுடன் காத்திருந்தால் நமது கூப்பிடுதலை கேட்பார். ஆண்டவர் நோவாவிடம் நீ ஒரு பேழையை உண்டு பண்ணு என்று சொன்ன நேரத்தில் எந்த ஒரு மழைக்கான அறிகுறியும் இல்லவே இல்லை. ஆண்டவரின் வார்த்தைக்கு நோவா கீழ்படிந்து ஒரு பேழையை உண்டு பண்ணுகிறார். அந்த ஊரில் அப்பொழுது வாழ்ந்த மக்கள் அவரை கிண்டல் செய்திருப்பார்கள். நோவாவை பார்த்து உனக்கு பைத்தியமா? என்று கூட சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஆண்டவரின் வார்த்தைக்கு அப்படியே கீழ்படிந்து...

ஒரே கடவுளாகிய இயேசுகிறிஸ்துவை அறிவதே நிலைவாழ்வு

விண்ணையும், மண்ணையும், கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம். கடந்த காலங்களில் அவர் அனைத்து மக்களினங்களையும் அவரவர் வழிகளில் நடக்கும்படி விட்டிருந்தார். என்றாலும் அவர் தம்மைப்பற்றிய சான்று எதுவும் இல்லாதவாறு விட்டு விடவில்லை ஏனெனில் அவர் நன்மைகள் பல செய்கிறார். வானிலிருந்து மழையைக் கொடுக்கிறார். வளமிக்க பருவ காலங்களைத் தருகிறார். நிறைவாக உணவளித்து உங்கள் உள்ளங்களை மகிழ்ச்சி பொங்கச் செய் கிறார்.திருத்தூதர் பணிகள் 14:15,16,17. இப்படிப்பட்ட தேவனை அறிந்துக்கொள்வது எத்தனை அவசியம்! உண்மையான ஒரே கடவுளாகிய அவரை அறிந்து அவர் அளிக்கும் நிலைவாழ்வை பெற்றுக்கொள்வோம். உலகம் தோன்றுமுன்னே தந்தை இயேசுவை மாட்சிப்படுத்தியுள்ளார். இந்த உலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் என் பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளை கடைபிடித்தார்கள். உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துக்கொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள். அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல...

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும்.லூக்கா 18:1

தாம் தேர்ந்துக்கொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடும்பொழுது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா?அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா?விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்கு சொல்கிறேன் என்று இயேசு கிறிஸ்து லூக்கா 18:7,8 ஆகிய வசனங்களில் நமக்கு வாக்கு அருளியிருக்கிறார். நாம் மனந்தளராமல் எப்பொழுதும் அவரிடம் மன்றாட வேண்டும். அப்படி செய்தால் நாம் விரும்பிய காரியத்தை நமக்கு தந்து நம்மை ஆசீர்வதித்து காத்துக்கொள்வார். ஒரு நகரில் ஒருவர் குடியிருந்தார்.அவர் கடவுளுக்கு பயப்படமாட்டார். மக்களையும் மதிக்க மாட்டார். அவர் இருந்த தெருவில் ஒரு விதவைப்பெண் வாழ்ந்து வந்தார். அந்த விதைவைப் பெண் ஒருநாள் அந்த மனிதரிடம் சென்று அவளுக்கு எதிராக செயல்படும் எதிரியை தண்டித்து தனக்கு நீதி செய்யுமாறு கேட்டாள். அந்த மனிதரோ காதில் வாங்கவே இல்லை.ஆனாலும் இந்தப்பெண் மனம் சோர்ந்து போகாமல் தொடர்ந்து அந்த மனிதனிடம் சென்று தனக்கு நீதி வழங்க்கும்படிக்கு தன் எதிரியை தண்டிக்கும்படி ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தாள். ஆனாலும் அந்த மனிதரும் நெடுங்காலமாய் எதுவும் செய்யாமல் கண்டுக்கொள்ளாமல்...

கர்த்தரின் நாமம் பலத்த துருகம். நீதிமொழிகள் 18:10

ஆண்டவரது திருப்பெயர் உறுதியான கோட்டை.அவருக்கு அஞ்சி நடப்பவர் அதற்குள் சென்று அடைக்கலம் பெறுவார். நீதிமொழிகள் 18:10.ல் வாசிக்கிறோம். அவருடைய பெயரை நாம் உச்சரித்தாலே நமக்கு மிகுந்த சமாதானமும், சந்தோசமும் உண்டு. ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு. நான் உனக்கு மறுஉத்தரவு அருளிச் செய்து உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமை படுத்துவாய் சங்கீதம் 50:15ல் உள்ளபடி அவரை யே அண்டிக்கொண்டு சுகமாயிருப்போம் ஒரு குழந்தை எப்படி ஒரு வேற்று மனிதரை கண்டால் தன் தாயிடம் ஓடி தமது முகத்தை மறைத்து அவர்களை இருக்க அணைத்துக்கொள்ளுமோ, நாமும் ஒரு குழந்தையாய் ஆண்டவரின் பாதங்களை இறுகப்பற்றிக்கொண்டு அவரிடம் அடைக்கலம் புகுந்தால் நம்மை எல்லாத் தீங்கிற்கும் விலக்கி காத்துக் கொள்வார். கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் நம்மை தாழ்த்தி அவரிடம் தஞ்சம் புகுந்தால் ஏற்ற காலத்தில் நம்மை உயர்த்தி ஆசீர்வதித்து வழிநடத்துவார். ஏனெனில் அவர் நம்மேல் கவலைக்கொண்டு நம்மை விசாரிக்கிற ஆண்டவர். நமது கவலை எல்லாம் அவரிடம் ஒப்புக்கொடுத்து அவரை உறுதியாய் பற்றிக்கொள்வோம். நெருக்கடி வேளையில் நமக்கு ஆண்டவர்...