Category: இன்றைய சிந்தனை

வாழ்வின் சவால்களில் இறைப்பராமரிப்பு

கடவுளின் அன்பும், பராமரிப்பும் எந்த அளவுக்கு நம்மோடு இருக்கிறது என்பதை, எடுத்துரைக்கக்கூடிய அற்புதமான பகுதி. கடவுளுடைய பணியை நாம் செய்கிறபோது, பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். நம்மோடு கூட இருந்து, நம்மைக்காட்டிக்கொடுக்கிறவர்கள், நம்மோடு நயவஞ்சகமாகப் பேசிக்கொண்டு, மறுதலிக்கிறவர்கள், நம்மை எப்போது சாய்க்கலாம் என்று தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறவர்கள், என்று பலவகையான மனிதர்களை நாம் பார்க்கிறோம். இந்த மனிதர்களுக்கு நடுவில் தான், நாம் வாழ வேண்டும். இவர்களோடு தான் நமது வாழ்வும் இணைந்து இருக்கிறது. நாம் விரும்புகிறோமோ, இல்லையோ, இவர்களும் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள் என்பதை, நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கை எப்போதும் நாம் நினைத்தது போல இருக்காது. நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், பல தடங்கல்களை சந்திக்கிறோம். பல மனிதர்களின் மோசமான முகங்களை பார்க்கிறோம். ஒருகட்டத்தில் நாம் சோர்ந்து போகிறோம். பேசாமல், ஊரோடு ஒருவராக வாழ்ந்து விடலாமே என்று நினைக்கிறோம். நாம் கொண்டிருக்கக்கூடிய மதிப்பீடுகளையும், விழுமியங்களையும் காற்றில் பறக்க விட்டுவிடுகிறோம். இப்படியான...

தெளிவான இலக்கு

இயேசு தனது சீடர்களை கடவுளின் பணிக்காக அனுப்பும்போது, பிற இனத்தவரின் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று சொல்கிறார். இயேசு கடவுளின் மகன். இந்த உலகத்தையே படைத்து பராமரிக்கிறவர். இந்த உலகத்தில் உள்ள அனைவருமே அவரின் பிள்ளைகள். அப்படியிருக்க, இயேசு இப்படிப்பட்ட ஒரு குறுகிய எண்ணத்தை பறைசாற்றும் அறிவுரையைக்கூற வேண்டுமா? இயேசு குறுகிய மனம் கொண்டவரா? இயேசு சிதறிப்போன மக்களுக்காக மட்டும்தான் வந்தாரா? புறவினத்து மக்கள் கடவுளின் பிள்ளைகள் இல்லையா? என்ற கேள்விகள் நம் மனதில் நிச்சயமாக எழும். தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள்: ”ஆழக்கால் வைத்தாலும், அகலக்கால் வைக்காதே”. இயேசுவின் இலக்கு இந்த உலகமெங்கிலும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டுமென்பது. அந்த திட்டத்தை செயல்படுத்த பல முயற்சிகளையும், முன்னெடுப்புகளையும் மேற்கொள்கிறார். அதனுடைய ஒரு செயல்முறை திட்ட அடிப்படையில்தான், தனது எல்லையை சிறிது, சிறிதாக, படிப்படியாக விரிவுபடுத்துகிறார். யூத மனநிலையில் இருக்கிற தன்னுடைய சீடர்களையும் மெதுவாக பக்குவப்படுத்தும் பணியை இயேசு செய்தாக வேண்டும். ஒரேநாளில்...

ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூறுங்கள்

இந்த உலகத்தில் நடக்கும் அனைத்துமே கடவுளின் திட்டத்தின்படி தான் நடக்கிறது என்பதை, இந்த திருப்பாடல் (திருப்பாடல் 105: 16 – 17, 18 – 19, 20 – 21) வலியுறுத்திக் கூறுகிறது. கடவுள் மனிதர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே வேளையில், அவர் மனிதர்களுக்கென்று திட்டங்களையும் வகுக்கிறார். இஸ்ரயேல் நாட்டில் பஞ்சம் நிலவியது. இந்த உலகமே பஞ்சத்தால் பரிதவிக்கத் தொடங்கியது. அந்த பஞ்சத்திலிருந்து தன்னுடைய மக்களைக் காப்பாற்ற, அதற்கு முன்னரே யோசேப்பை அற்புதமாக எகிப்தில் ஆண்டவர் உயர்த்தியிருந்தார். யோசேப்பின் சகோதரர்கள் அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு தான், அவரை விற்றார்கள். ஆனால், விற்கப்பட்ட சகோதரனிடத்தில் நாம் மண்டியிட வேண்டியிருக்கும் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். அதுதான் இறைவனின் திட்டம். மனிதர்கள் செய்யும் தீமையையும் கடவுள் நன்மையாக மாற்ற வல்லவர். அதிலிருந்து மிகப்பெரிய ஆசீர்வாதத்தைப் பொழியச் செய்கிறவர். ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த உலகத்தை படைக்க முடிந்த இறைவனுக்கு,...

வேறுபாடுகள் நம்மை வளப்படுத்தட்டும்

ஒரு மிகச்சிறந்த தலைவர் என்பவர் மக்களை வழிநடத்துவதற்கு முன்னால், தனக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து தன்னோடு கூட வைத்திருக்க வேண்டும். போதனைகள் தலைவரோடு முடிந்து விடக்கூடாது. தொடரப்பட வேண்டும். இயேசு தனக்குப்பிறகும் தனது பணி தொடர வேண்டும் என நினைக்கிறார். அது வெறும் பெயரை நிலைநாட்டுவதற்கானது அல்ல. மாறாக, மக்கள் மீட்பு பெற வேண்டும் என்பதற்காக. மீட்புப்பணி தொடர்ந்தாற்றப்பட வேண்டும் என விரும்புகிறார். எனவே தனக்கான சீடர்களைத் தேர்ந்தெடுக்கிறார். இயேசு தனது சீடர்களாகத் தேர்ந்தெடுத்தது சாதாரணமானவர்களையும், வேறுபட்ட எண்ணம் உள்ளவர்களையும் என்கிற உண்மை பலரையும் வியக்க வைக்கலாம். இந்த சாதாரணமானவர்களால் கருத்து வேறுபாடு உள்ளவர்களால் என்ன செய்து விட முடியும், என்ற எண்ணமும் உள்ளத்தில் எழும். இயேசுவின் சீடர்கள் ஒவ்வொருவருமே, வித்தியாசமான குணம்கொண்டவர்கள். ஒருவரின் இயல்பு மற்றவரின் இயல்புக்கு எதிரான பண்பு கொண்டதாக இருந்தது. உதாரணமாக, மத்தேயு வரிதண்டுபவர். நாட்டை உரோமையர்களுக்கு விற்றுவிட்டு, சுயநலத்திற்காக அவர்களோடு உறவாடுகிறவர்கள் என்று யூத சமுதாயத்தினால் முத்திரைக்குத்தப்பட்டவர். அதேபோல்,...

நேர்மையில் நிலைத்திருந்து ஆண்டவரின் முகம் காண்பேன்

தன்னுடைய எதிரிகளின் சூழ்ச்சிகளாலும், தொடர் தேடுதல் வேட்டையினாலும் பெருத்த மன உளைச்சலுக்கும், விரக்திக்கும் ஆளாகியிருக்கிறார் தாவீது மன்னர். எங்கே தப்பிச்சென்றாலும், நிழல் போல தன்னுடைய எதிரிகள் தன்னை பின்தொடர்வதைக் கண்டு, மனம் வெதும்புகிறார். வேதனையின் உச்சத்திற்கே செல்கிறார். சாதாரண மனிதனாக, தன்னால் வாழ முடியவில்லையே என்று வேதனைப்படுகிறார். விரக்தியின் விளிம்பில் அவர் கடவுளை நோக்கி கூக்குரலிடுகிறார். இறைவனுடைய பாதுகாப்பிற்காகவும், புகலிடத்திற்காகவும் வேண்டப்படுகின்ற பாடலாக (திருப்பாடல் 17: 1, 2 – 3, 6 – 7, 8, 15) இது அமைந்திருக்கிறது. கடவுளிடம் தன்னுடை விண்ணப்பத்தை எடுத்துரைக்கிறபோது, தன்னுடைய நேர்மைத்தனத்தை அவர் விவரிக்கிறார். இவ்வளவு சூழ்ச்சிகள், வேதனை, நெருக்கடி, துன்பங்களுக்கு நடுவிலும், தான் கொண்டிருக்கிற நேர்மைத்தனத்தில் நிலைத்திருக்கும்படியாக ஆண்டவரிடத்தில் மன்றாடுகிறார். நேர்மையாக வாழ்ந்ததற்கு பரிசு கிடைக்கவில்லையே என்று தாவீது மனம் வெதும்பவில்லை. அழுது புலம்பவில்லை. இறைவனிடத்தில் முறையிடவில்லை. மாறாக, தன்னுடை நேர்தை்தனத்தில் தொடர்ந்து வளர, உறுதியாக இருக்க வேண்டுகிறார். தன்னுடைய எதிரிகளிடமிருந்து...