Category: இன்றைய சிந்தனை

கடவுள் தம் நீதியை வெளிப்படுத்தினார்

திருப்பாடல் 98: 1, 2 – 3b, 3c – 4 ”கடவுள் தம் நீதியை வெளிப்படுத்தினார்” நீதி என்பது ஒருவருக்கு உரியதை ஒருவருக்குக் கொடுப்பது. அநீதி என்பது ஒருவருடைய உடைமையை அவரிடமிருந்து பறிப்பது. நீதி மற்றும் அநீதி என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கான அடிப்படை அளவுகோல் இதுதான். கடவுள் நீதியை வெளிப்படுத்தினார் என்பது ஒருவருக்கு உரியதை ஒருவருக்கு கொடுப்பது. இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது. இந்த உலகத்தை அவர் படைத்தபோது, குறிப்பிட்ட மனிதர்களுக்காக இந்த உலகத்தைப் படைக்கவில்லை. இந்த உலகத்தை எல்லாருக்குமாகப் படைத்தார். ஆனால், மனிதன் தன்னுடைய பேராசையினால், மற்றவா்களுக்கு உரியதை, தன்னுடைய தேவைக்கும் அதிகமானதை அபகரிக்கத் தொடங்கினான். இங்கே தான், அநீதி தொடங்குகிறது. ஒரு குழுவை மற்றொரு குழு அடக்கி வைக்கத் தொடங்குகிறது. அடிமைப்படுத்த தொடங்குகிறது. இங்கு தான் கடவுள் தன்னுடைய நீதியை வெளிப்படுத்துகிறார். சமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட மக்களை, அடிமைப்படுத்தப்பட்ட மக்களை அவர் கைதூக்கி விடுகிறார். தான் நீதியுள்ள...

நீங்கள் எல்லாரும் கடவுளைப் போற்றுங்கள்

திருப்பாடல் 148: 1 – 2, 11 – 12, 13, 14 ”நீங்கள் எல்லாரும் கடவுளைப் போற்றுங்கள்” மனிதன் யார்? என்கிற கேள்விக்கு பலவிதமான பதில்களை நாம் கேட்டிருக்கலாம். இன்றைய திருப்பாடல் மனிதன் யார்? மனிதன் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறான்? என்பதற்கான பதிலை, மிகத்தெளிவாக நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன் என்பதையும், மனிதனை கடவுள் படைத்தது அவரைப்போற்றுவதற்கும், புகழ்வதற்குமே என்பதையும் இது நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இயற்கையோடு இணைந்து கடவுளை மனிதன் போற்ற வேண்டும் என்பதுதான், மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கமாக இருக்கிறது. கடவுளை மனிதர்கள் அனைவருமே போற்ற வேண்டும். மனிதர்களில் பல வேறுபாடுகளை இந்த சமுதாயம் ஏற்படுத்தியிருக்கிறது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், பணக்காரர், ஏழை என்று பலவிதமான வேறுபாடுகளை இந்த உலகம் நமக்குக் கற்பித்திருக்கிறது. சாதாரண மக்கள் தான் கடவுளைப் போற்ற வேண்டும் என்றும், மற்றவர்கள் எல்லாமே பெற்றிருப்பதனால், அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், மனிதர்களில் ஒரு சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்,...

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்

திருப்பாடல் 138: 1 – 2b, 2c – 3, 7 – 8 ”ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்” ஆண்டவருக்கு முழு மனத்துடன் நன்றி சொல்வது என்பது எது? நாம் எல்லாருமே கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். கடவுளுக்கு காணிக்கை செலுத்துகிறோம். ஆனால், எப்படிப்பட்ட மனநிலையோடு செலுத்துகிறோம்? நன்றி மனநிலையோடு கடவுளுக்கு காணிக்கை செலுத்துகிறவர்களும் குறைவு. கடவுளுக்கு நன்றி செலுத்துகிறவர்களும் குறைவு. இதற்கு அடிப்படை காரணம், எதிர்பார்ப்பு. இன்றைக்கு கடவுளைத் தேடுகிறவர்கள் எல்லாருமே எதிர்பார்ப்போடு தான் தேடுகிறார்கள். கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்கிற மனநிலையோடு கடவுளைத் தேடுகிறவர்கள் இல்லாத சூழ்நிலை தான் காணப்படுகிறது. கடவுளுக்கு எதற்காக நன்றி செலுத்த வேண்டும்? ஏதாவது செய்தால் தானே நன்றி செலுத்த வேண்டும் என்பதான மனநிலை தான், மக்களிடத்தில் காணப்படுகிறது. ஆனால், கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட பலவற்றை நாம் பெற்றுக்கொண்டதாகவே நினைப்பது கிடையாது. அவற்றை வெகு சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். இந்த வாழ்க்கையும் சரி,...

நம்பிக்கையுள்ள செபம்

கடவுள் நம் அனைவரையும் அவருடைய வாரிசுகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தந்தையின் பெயரால் நாம் கேட்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற சிறப்பு சலுகையை நமக்குத் தந்திருக்கிறார். செபத்தைப்பற்றிய ஆழமான செய்தி இங்கே நமக்குத்தரப்படுகிறது. செபம் என்பது நம்பிக்கையின் வடிவமாக இருக்க வேண்டும். யாக்கோபு 5: 15 ”நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார்”. நம்பிக்கையிழந்த செபம் வலுவுள்ளதாக இருக்க முடியாது. வலிமையோடு நாம் செபிக்க வேண்டுமென்றால், கடவுளின் வல்லமையில் நம்பிக்கை வைத்து நாம் செபிக்க வேண்டும். செபிக்கிறபோது இயேசுவின் பெயரால் செபிக்க வேண்டும். இயேசுவின் பெயரால் செபித்தல் என்பது, இயேசு விரும்பாததை நாம் செபிக்கக்கூடாது என்று அர்த்தம் கொள்ளலாம். விலக்கப்பட வேண்டியதற்காக, தவிர்க்கப்பட வேண்டியதற்காக நாம் செபிக்கக்கூடாது. நமது சுய விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக செபிக்கக்கூடாது. நமது சுயவிருப்பம் மற்றவர்களுக்குத்தீங்கிழைத்தால் அது செபமாக இருக்க முடியாது. அந்த செபம் ஏற்கப்பட மாட்டாது. அதனால் தான் எல்லா செபத்தின் முடிவிலும், தந்தையின் திருவுளத்திற்கு ஏற்ப நடக்க...

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

திருப்பாடல் 100: 1 – 2, 3, 5 ”அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! திருப்பாடல் 100 சமய வழிபாடுகளில் அடிக்கடி தியானிக்கப்படக்கூடிய ஒரு பாடல். யூதர்கள் எப்போதெல்லாம் கடவுளுக்கு நன்றிக் காணிக்கை செலுத்தினார்களோ, அப்போதெல்லாம் இந்த பாடலையும் பாடி கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள். இந்த பாடல் கடவுளின் மகிமையை, மகத்துவத்தை, இனிமையை, சுவையை எடுத்துரைக்கக்கூடிய பாடல். அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள் என்று ஆசிரியர் கூறுகிறார். அனைத்துலகோரே என்று சொல்கிறபோது, அது இஸ்ரயேல் மக்களை மட்டும் குறிக்கக்கூடிய வார்த்தையல்ல. மாறாக, இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களும் கடவுளைப் புகழ வேண்டும் என்று குறிப்பிடுகிறது. அந்த புகழ்ச்சி சாதாரண புகழ்ச்சியாக இருக்கக்கூடாது. அது ஓர் ஆர்ப்பரிப்பாக இருக்க வேண்டும். ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள் என்றால் என்ன? திருப்பாடல் 98 சொல்கிறது: யாழினை மீட்டி வாழ்த்துங்கள். இனிய குரலில் வாழ்த்துங்கள். எக்காளம் முழங்கி, கொம்பினை ஊதி, ஆர்ப்பரித்துப் பாடுங்கள். ஆர்ப்பரிப்பு என்பது...