Category: இன்றைய சிந்தனை

ஆண்டவரை நம்புவோரே! உங்கள் உள்ளம் உறுதிகொள்வதாக!

திருப்பாடல் 31: 19 – 20a, 20bc, 21, 22, 23 தாவீது அரசர் அவருடைய வாழ்நாட்களில் சவுல் அரசரிடமிருந்து அதிகமான துன்பங்களை எதிர்கொண்டார். தாவீது, மக்களால் தன்னைவிட அதிகமாக நேசிக்கப்படுவதை அறிந்த சவுல் அரசர், தாவீதை ஒழித்துக்கட்ட விரும்பினார். அவருடைய கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக, தாவீது ஓடிக்கொண்டே இருந்தார். பலமுறை மயிரிழையில் அவர் உயிர் தப்பினார். அந்த நேரங்களில் கடவுள் மீது தான் வைத்திருந்த நம்பிக்கை தான், தன்னை முழுமையாகக் காப்பாற்றியதாக அவர் உணர்ந்தார். அந்த நேரத்தில் நம்பிக்கை கொள்வது வெகு எளிதானது அல்ல. அதைத்தான் இந்த திருப்பாடலில் தாவீது அரசர் பாடுகிறார். கடவுளிடத்தில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறபோது, நிச்சயமாக பலவிதமான சோதனைகள் நம்மை தாக்கிக்கொண்டே இருக்கும். அந்த சோதனைகள் தொடர்ச்சியாக வரும்போது, நமக்குள்ளாக எழக்கூடிய கேள்விகள், ஏன் எனக்கு தொடர்ச்சியாக துன்பங்கள் வந்து கொண்டிருக்கிறது? இந்த துன்பங்களில் கடவுள் எங்கே சென்றார்? என்னுடைய முழுமையான நம்பிக்கையை நான் ஆண்டவரில் தானே...

சொந்தங்களின் புறக்கணிப்பு !

இயேசு தம் சொந்த ஊருக்கு வந்தபோது புறக்கணிக்கப்பட்ட நிலையை இன்றைய நற்செய்தி வாசகம் அழகாகச் சித்தரிக்கிறது. ”இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை” என்று இயேசுவே தம் ஊர் மக்களிடத்தில் சொல்கின்றார். இயேசுவின் குடும்பத்தை, பின்னணியை, சுற்றத்தை நன்கு அறிந்தவர்கள் நாசரேத் ஊர் மக்கள். அந்த அறிமுகமே அவரை ஏற்றுக்கொள்வதற்கும், அவரது நற்செய்தியை நம்புவதற்கும் தடையாக அமைந்துவிடுகின்றன. எனவே, அவர்கள் அவரது செய்தியைப் புறக்கணிக்கின்றனர். நமது வாழ்விலும் இத்தகைய அனுபவங்கள் நமக்குக் கிடைத்திருக்கலாம். நமது சொந்த வீட்டினர், குடும்பத்தினர், உறவினர்களே நமது அருமையை, திறமைகளை உணராமல், அறியாமல் நம்மை இகழ்ந்து ஒதுக்கிய நிலை நமக்கு ஒருவேளை கிடைத்திருக்கலாம். நாம் கொஞ்சம் கவனமாக இருப்போம். அடுத்த முறை நன்கு அறிமுகமான நபர்களின் ஆளுமையை, ஆற்றல்களை, சிந்தனைகளைத் திறந்த மனதுடன் ஏற்றுக்;கொள்ள முன்வருவோம். அறிமுகமே முற்சார்பு எண்ணங்களைத் துhண்டி, உறவை முறித்துவிடாதபடி, தவறான தீர்ப்புகளுக்கு நம்மைத் தள்ளிவிடாதபடி கவனமாயிருப்போம். மன்றாடுவோம்: அன்புத் தந்தையே...

ஆண்டவரைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல்

இந்த திருவிழாவின் தொடக்கத்தில் இது கன்னிமரியாவின் தூய்மைச் சடங்கு விழா என்று அழைக்கப்பட்டது. குழந்தை பிறந்த பிறகு ஒரு பெண் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்ய வேண்டியிருந்ததால், இவ்வாறு அழைக்கப்பட்டது. இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த நற்செய்தி பகுதியை அடிப்படையாகக் கொண்ட இவ்விழா, கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு அடுத்த 40 நாட்களில் கொண்டாடப்பட்டது. தொடக்கத்தில் இந்த திருவிழாவானது கி.பி400 ம் ஆண்டிலே, எருசலேமில் கொண்டாடப்பட்டதாக நாம் அறிகிறோம். அதன்பிறகு, ஐந்தாம் நூற்றாண்டில், இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக, மற்றொரு வரலாறு கூறுகிறது. பின்பு ஒளி பவனியும் இத்தோடு இணைக்கப்பட்டது. இது புறவினத்து மக்களின் பாவப் பரிகார சடங்கிற்கு பதிலாகச் சேர்க்கப்பட்டு, கிறிஸ்தவர்கள் ஒளியேற்றப்பட்ட மெழுகுதிரிகளோடு பவனியாக ஊரைச்சுற்றி வந்தார்கள். இது இயேசு வரும்போது உலகில் உள்ள இருள் மறைந்துபோகிறது என்பதை உணர்த்துகிறது. இயேசு இதற்கு புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறார். ஏனென்றால், இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுகிறபோது, சிமியோன் இயேசுவை புறவினத்தார்க்கு வெளிப்பாடு...

ஆண்டவரிடமிருந்தே மீட்பு நேர்மையாளருக்கு வருகின்றது

திருப்பாடல் 37: 3 – 4, 5 – 6, 23 – 24, 39 – 40 நேர்மையாளராக வாழ வேண்டுமா? நேர்மையாளராக இந்த உலகத்தில் வாழ முடியுமா? இந்த உலகம் அப்படிப்பட்டவர்களை விட்டு வைக்குமா? நேர்மையாளர்களாக வாழ்கிறபோது, நமது நண்பர்களை நாம் இழக்க நேரிடும். நமது உறவுகள் நம்மை விட்டுவிட்டுச் சென்று விடும். இவையெல்லாம் நம்மால் எதிர்கொள்ள முடியுமா? – இது போன்ற கேள்விகள் நிச்சயம் நமது உள்ளத்தில் எழும். இத்தனை கேள்விகளுக்கும் இன்று நாம் தியானிக்கும் திருப்பாடல் பொறுமையாக பதில் தருகிறது. நேர்மையாளர்கள் துன்பங்களைச் சந்திக்க மாட்டார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், அவற்றை எதிர்கொள்வதற்குத் தேவையான ஆற்றலை இறைவன் வழங்குவார். அவர் நேர்மையாளர்களின் கால்களை உறுதிப்படுத்துவார். தாங்கள் நின்றுகொண்டு இருக்கக்கூடிய நேர்மை என்னும் விழுமியத்தை முழுமையாகப் பற்றிப்பிடித்துக் கொள்வதற்கு, ஆண்டவர் உடனிருப்பார். எவ்வளவு சோதனைகள் வந்தாலும், நாம் வீழ்ந்து போக ஆண்டவர் அனுமதிக்க மாட்டார். ஏனென்றால், நேர்மையாளர்களை...

பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்

திருப்பாடல் 96: 1 – 2a, 2b – 3, 7 – 8, 10 இந்த திருப்பாடல் 1 குறிப்பேடு 16 வது அதிகாரத்தோடு தொடர்புடையது. கடவுளின் பேழை நகரத்தின் கூடாரத்தில் வைக்கப்படுகிறது. பின்பு எரிபலிகளும், நல்லுறவுப் பலிகளும் செலுத்தப்படுகிறது. கூடியிருந்த மக்கள் கடவுளைப் போற்றிப்புகழவும், மகிமைப்படுத்தவும் செய்தனர். கடவுளின் மகிமையும், மகத்துவமும் இங்கே பாடலாக வெளிப்படுத்தப்படுகிறது. இஸ்ரயேல் மக்கள் வணங்கும் கடவுள் தான், அனைத்துலகத்திற்கும் அரசர் என்கிற செய்தி, அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தப்படுகிறது. கடவுளை புற இனத்து மக்களுக்கு அறிமுகப்படுத்துகிற மிகப்பெரிய பொறுப்பு இஸ்ரயேல் மக்களுக்கு இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் தான் கடவுளின் வல்ல செயல்களை முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் கடவுளின் ஆற்றலையும், வல்லமையையும் முழுமையாக அனுபவித்திருக்கிறார்கள். கடவுளைப்பற்றி முழுமையாக அறிந்திருக்கிற இஸ்ரயேல் மக்கள் கண்டிப்பாக, இதனை பிற இனத்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிப்பதன் மூலம் பிற இனத்து மக்களும், உண்மையான இறைவனை முழுமையாகக் கண்டுகொள்ள...