Category: இன்றைய சிந்தனை

எதுக்கு சண்டை? எதுக்கு சச்சரவு?

மத்தேயு 12:14-21 கடவுள் படைத்த உலகம் சண்டையில்லா சத்தமில்லா சந்தோசமான உலகம். அவர் படைத்த அந்த உலகை நல்லது எனக் கண்டார். ஆனால் அவர் நல்லது எனக் கண்ட உலகம் இப்போது நல்லது என்று கூறும் தகுதியை இழந்து நிற்கின்றது. காரணம் என்ன? எங்கும் சண்டை. எங்குப் பார்த்தாலும் சத்தம். சந்தோசமில்லை சங்கடம் தான் அதிகம். சண்டையுடனும் சத்தத்துடனும் சந்தோசமில்லாமல் இருக்கும் இந்த உலகத்தில் மீண்டும் அமைதியை உருவாக்க ஒவ்வொருவரும் இயேசுவை பின்பற்ற வேண்டும் என அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவைப் பற்றி நற்செய்தி வாசகம் ”இவர் சண்டை சச்சரவு செய்யமாட்டார்” என அறிமுகம் செய்கிறது. இயேசுவைப் பின்பற்றி நாமும் சமாதானத்தை உருவாவோம். சச்சரவு இல்லாத சந்தோசமான உலகத்தை சமைப்போம். மனதில் கேட்க… வாழும் குறுகிய காலத்தில் சண்டை எதற்கு? என்னை விட்டு பிரிந்து போன உறவுளில் சமாதானத்தை கொண்டு வருவேன்? மனதில் பதிக்க… இவர் சண்டை சச்சரவு செய்யமாட்டார்....

இரக்கப்படுவோருக்கு இறப்பில்லை

மத்தேயு 12:1-8 மனிதர்களாகிய நாம் பெரும்பாலும் இந்த உலகத்தை விட்டு போக விரும்புவதில்லை. இந்த உலகத்திலே நிலையாக வாழ வேண்டும் என்ற பேராசை அதிகமாக இருக்கிறது. இறப்பு வேண்டாம் என கடவுளிடம் போரட்டம் நடத்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். இறப்பில்லா வாழ்க்கை வேண்டும் என ஆசைப்படும் அத்தனை பேருக்கும் இன்றைய நற்செய்தி இனிப்புச் செய்தியாக வருகிறது. மனிதர்கள் இறக்காமல் வாழந்துக்கொண்டே இருக்கலாம். தலைமுறைதோறும் வாழ்ந்துக்கொண்டே இருக்கலாம். எப்படி? இரக்க உள்ளம் படைத்தவர்கள் வாழ்ந்துக்கொண்டே இருக்கலாம். அவர்கள் உடல் அழியலாம் ஆனால் அவர்களின் இரக்க உள்ளம் அழிவதில்லை. அவர்களுக்கு இறப்பில்லை. வாழ்நாட்களில் நாம் அரக்கத்தனமாக பல வேளைகளில் நடக்கிறோம். பல வேளைகளில் அமைதியை அழிக்கிறோம். பகைமையை வளர்க்கிறோம். இப்படி வாழ்கிற நாம் வாழ்வதில்லை. இறந்து போகிறோம். இப்படி இருப்பது நல்லதல்ல. இரக்கத்தோடு இருப்போம். இறக்காமல் இருப்போம். மனதில் கேட்க… • நான் அரக்கத்தனமாக இருப்பது எனக்கு அழகா? • இறக்காமல் இருக்க ஆசை இருக்கிறதா?...

நீங்கள் சுறுசுறுப்பானவரா? அல்லது தளர்வுற்றவரா?

மத்தேயு 11:28-30 நீங்கள் சுறுசுறுப்பானவரா? அல்லது தளர்வுற்றவரா? என்ற கேள்வியோடு நாம் கருத்துக்கணிப்பு நடத்தினால் வாழ்க்கையில் பல மனிதர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவதில்லை. மாறாக தளர்வுற்றவர்கள் தான் என்பது தெரிய வரும். வாடிய முகத்தோடு அவா்கள் நடப்பதைப் பார்க்கின்றபோது அவர்களிடத்தில் ஆற்றல் தீர்ந்துபோய் விட்டது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. உங்களிடத்திலே சுறுசுறுப்பாக செயல்படுவதற்கான ஆற்றல் தீர்ந்துவிட்டது என்றால் கவலை வேண்டாம். அந்த ஆற்றலைப் பற்றித்தான் இன்றைய நற்செய்தி வாசகம் பேசுகிறது. அந்த ஆற்றலை தருபவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பெருஞ்சுமைகளை இறக்கி வையுங்கள். கவலைகளை கொட்டுங்கள். சோகங்களை சொல்லுங்கள். உங்கள் துயரத்தின் புலம்பலை பற்றி பேசுங்கள். கவலை, சோகம், துயரம், பிரச்சினை, நோய் இவைகள் தானே உங்கள் ஆற்றலை உங்களிடமிருந்து பிடுங்கியது. அதனால்தானே நீங்கள் தளர்வுற்றுப் போனீர்கள்? அதைப்பற்றி கவலைப்படாதீர்ள். இப்போது எல்லாவற்றுக்கும் இளைப்பாறுதல் பெறுங்கள். அனைத்து ஆற்றலையும் அள்ளுங்கள். நிறைய அள்ளுங்கள். ஆண்டவரே அந்த ஆற்றல். மனதில் கேட்க… •...

உங்களிடத்தில் கடவுளைப் பார்க்கலாமா?

மத்தேயு 11:25-27 கடவுளின் சாயலிலும் உருவிலும் படைக்கப்பட்ட மனிதர்கள் கடவுள் போன்று செயல்படுவதில்லை. அவர்களுக்குள்ளே இருக்கும் கடவுளை வெளியே பிரதிபலிப்பதில்லை. மனிதர்கள் தங்களுக்குள்ளே கொண்டிருக்கும் அன்பில்லாமை, அடக்கமின்மை, அதிகாரமின்மை இவையனைத்தும் கடவுளின் பண்புகளை மறைக்கின்றன. ஆகவே மனிதன் கடவுளை வெளியே கொண்டு வர முடியவில்லை. கடவுளை வெளியே கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நம்முடைய ஆர்வமான கேள்விக்கு விடை கொடுக்கிறது நற்செய்தி வாசகம். ஞானிகள் கடவுளை வெளியே கொண்டு வர முடியாது. அறிஞர்கள் கடவுளை வெளியே கொண்டு வர முடியாது. அவர்களுக்கு கடவுளுடைய வெளிப்படுத்துதல் இல்லை. காரணம் தடைக்கற்காளாக அவர்களுடைய ஆணவம், அதிகாரம், அகங்காரம் இருக்கின்றன. கடவுள் எளிய உள்ளம் கொண்டவர்கள் உள்ளத்தில் குடிகொள்கிறார். குழந்தை உள்ளம் கொண்டவர்களோடு தங்குகிறார். அவர்கள்தான் கடவுளை வெளியே கொண்டு வருகிறார்கள். காரணம் அவர்கள் அவசியமற்றவைகளிலே சிக்குவதில்லை. ஆகவே அவர்கள் அழகாக ஆண்டவரை வெளியே கொண்டு வருகிறார்கள். மனதில் கேட்க… • நான்...

தீமைக்கு விடைகொடு … கடவுளின் துயருக்கு பதில்கொடு

மத்தேயு 11:20-24 பழைய ஏற்பாட்டில் கடவுள் கவலையடைந்தார். மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது. இதை தொடக்கநூல் 6:5-6 வரையுள்ள இறைவார்த்தைகளில் வாசிக்கிறோம், “மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார். மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது”. புதிய ஏற்பாட்டில் குறிப்பாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கவலையடைகிறார். மனம் வருந்துகிறார். உள்ளம் உடைந்துப்போகிறார். கொராசின், பெத்சாய்தா மற்றும் கப்பர்நாகும் நகர்களில் தீமை பெருகியதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளில் நாள் முழுவதும் தீமை உருவானதையும் அவர் கண்ணாரக் கண்டதால் கலங்கி நிற்கிறார். அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள் என்பதற்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து பல வல்ல செயல்களை அந்நகர்களில் செய்தார். அவையெல்லாம் பலனில்லாமல் போயிற்று. அவருடைய எதிர்பார்ப்பு எல்லாம் எரிந்து சாம்பலானது. நம் ஒவ்வொருவரையும் வரலாறு படைக்க வேண்டும் என்ற...