Category: இன்றைய சிந்தனை

என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்

திருப்பாடல் 90: 2, 3 – 4, 5 – 6, 12 – 13 ஒருவரின் துன்பநேரத்தில் தான், கடவுள் செய்திருக்கிற அளவற்ற நன்மைகள் நமக்கு நினைவுக்குள் வரும். அந்த நிலையைத்தான் தாவீது அரசர் வெளிப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் எவ்வளவோ நன்மைகளைச் செய்திருக்கிறார். கடவுளின் பலத்தையும், வல்லமைமிக்க செயல்களையும் முழுமையாக அறிந்தவர்கள் இஸ்ரயேல் மக்கள். கடவுளின் வல்லமையை அவர்கள் மட்டும் தான், முழுமையாக வெளிப்படுத்த முடியும். அந்த அளவுக்கு கடவுள் அவர்களுக்கு நன்மைகளைச் செய்திருக்கிறார். இஸ்ரயேல் மக்களின் நன்றிகெட்டத்தனம் அவர்களுக்கு தாங்க முடியாத துன்பத்தைக்கொடுத்திருக்கிறது. அந்த தருணத்தில் தான், இந்த திருப்பாடல் எழுதப்படுகிறது. கடவுள் மீது இஸ்ரயேல் மக்கள் வைக்க வேண்டிய நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது. கடவுளை தலைமுறைதோறும் புகலிடமாக இருக்க இந்த பாடல் பணிக்கிறது. நம்பி வந்தவர்களுக்கு ஆதரவு தரக்கூடிய இடம் தான் புகலிடம். இஸ்ரயேல் மக்கள் கடவுளை நம்பிவந்தால், அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தால், கடவுள்...

எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ அவர் பேறுபெற்றோர்

திருப்பாடல் 32: 1 – 2, 5, 6, 7 கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும் முழுமையாகப் பெற்றவர் தாவீது அரசர். உரியாவின் மனைவி பத்சேபாவுக்கு எதிராக பாவம் செய்தபோது, தாவீது கடவுளால் தண்டிக்கப்பட்டார். அவரது குழந்தை இறந்துபோனது. ஆனால், தாவீது தான் செய்த மிகப்பெரிய தவறை உணர்ந்து, அழுது கடவுளிடம் மன்றாடினார். தனது தவறை அவர் ஒப்புக்கொண்டார். கடவுளிடம் அவர் மன்றாடினார். அவரது மனவருத்தம் மற்றும் மனமாற்றம் கடவுளின் மன்னிப்பை அவருக்கு வழங்கியது. கடவுளின் ஆசீரையும் பெற்றுக்கொண்டார். இந்த அனுபவம் தான் தாவீதை, இந்த திருப்பாடலை எழுதத்தூண்டியிருக்க வேண்டும். வழக்கமாக, நாம் தவறு செய்கிறபோது, மற்றவர்களின் மன்னிப்பைப் பெறலாம். ஆனால், தாவீது அரசர், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்கிறார். அதாவது, உண்மையான மனமாற்றம், கடவுளின் மன்னிப்பை மட்டுமல்ல, கடவுளின் அருளையும், ஆசீரையும் நிரம்பப்பெற்றுக்கொடுக்கும். இன்றைய நற்செய்தியிலும் கூட, திக்கிப்பேசுபவரை இயேசுவிடம் கொண்டுவருகின்றனர். நோய்க்கு காரணம், ஒருவர் செய்த பாவம் என்பது இஸ்ரயேல்...

உணவா? உள்ளமா?

புதன் மாற்கு 7:14-23 பாவம் தன்னகத்தே தீமையானது. இது வெளியிலிருந்து வருவதல்ல. மாறாக நம்முள்ளிருந்து வருகின்றது. ஆனால் இறைவன் படைத்த உணவும், பிறவும் தன்னிலே தூயது. அதனைத் தீயதாக கருதுவது நம் எண்ணத்திலும,; பயன்படுத்துகின்ற விதத்திலும் தான் இருக்கின்றது. இஸ்லாமியர்கள் பன்றியைத் தீட்டு எனக் கருதி உண்ணமாட்டார்கள். இந்துக்கள் மாட்டுக்கறியை உண்ணமாட்டார்கள். உண்ணுகின்ற இந்துக்களை கீழ்சாதியினர்; என ஒதுக்கி வைத்து தீண்டத்தகாதவர்கள் என கருதுகிறார்கள். ஆனால் கிருத்தவர்கள் நாம் மட்டும் இந்த வானிற்கு கீழ் உள்ள அனைத்தையும் உண்டு களிக்கிறோம். காரணம் இயேசுவின் இவ்வாக்கு உணவுப் பொருட்களில் தீட்டு என்பதே இல்லை என்பதை கொஞ்சம் கொஞ்சம் தொடக்கக்காலத் திருஅவைத் தொட்டே நாம் அனைத்தையும் உண்ண ஆரம்பித்து விட்டோம். காண்க 1திமோ 4: 4,5. “கடவுள் படைத்தது அனைத்தும் நல்லதே, நன்றி உணர்வுடன் கொண்டால் எதையும் விலக்க வேண்டியதில்லை, கடவுளின் வார்த்தையும் நமது மன்றாட்டும் அதைத் தூயதாகும்” தூய பேதுருவும் இதை ஒத்தக்...

ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் விளங்குகின்றது

திருப்பாடல் 8: 3 – 4, 5 – 6, 7 – 8 கடவுளின் மாட்சிமையையும், சிறப்பையும், மாண்பையும் எடுத்துக்கூறக்கூடிய பாடல் தான் இந்த திருப்பாடல். கடவுளின் பெயர் இந்த உலகம் முழுமையும் மேன்மையாய் விளங்குகின்றது. எப்படி? கடவுளின் படைப்பு, அவரின் மேன்மையை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. இந்த உலகத்தில் இருக்கிற படைப்பு ஒவ்வொன்றுமே ஆச்சரியமூட்டக்கூடியது. அவ்வளவு மகிமையான படைப்புக்களை கடவுள் படைத்திருக்கிறார். எங்கு நோக்கினும் கடவுளின் படைப்பு தான், நம் கண்களுக்கு வியப்பாய் இருக்கிறது. அதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் நமக்கு வியப்பாக எடுத்துக்கூறுகிறார். கடவுளின் படைப்பு மட்டுமல்ல, இந்த படைப்பு முழுவதையும் மீட்டெடுக்க நம் ஆண்டவர் வகுத்த மீட்புத்திட்டமும் வியப்புக்குரியவை. அந்த மீட்பை எடுத்துரைப்பதற்காக, கடவுளின் மக்களை கொஞ்சம், கொஞ்சமாக பக்குவப்படுத்துகிற இயேசுவின் உறுதியான முயற்சி இன்றைய நற்செய்தியில் வெளிப்படுகிறது. கடவுளின் அன்பும், இரக்கமும் தான், மக்களை மீட்புப்பாதையில் கொண்டு செல்ல உதவும் என்பதையும், வெறும் சட்டங்களை வைத்து, நாம்...

இயேசுவுடனான நமது நெருக்கம்

தொழுகைக்கூடத்தில் சுற்றியிருந்த அனைத்து மக்களும் இயேசுவை ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். அவர்களின் ஆச்சரியத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. இவ்வளவு காலம், தீய ஆவிகள் என்றாலே, போதகர்களே பயந்து நடுங்கிய நாட்களில், இவ்வளவு துணிச்சலாக, போதனைப்பணிக்கு வந்து சிலநாட்கள் கூட ஆகாத, தச்சரின் மகன், நமக்கெல்லாம் அறிமுகமானவர், இவ்வளவு துணிவோடு போதித்து, தீய ஆவியை விரட்டக்கூடிய வல்லமை பெற்றிருக்கிறாரே? நிச்சயமாக இது பாராட்டப்பட வேண்டும். அவரிடத்தில் இருக்கிற சக்தி, அளப்பரியதுதான். இது போன்ற எண்ண ஓட்டங்கள் மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் தான், இயேசு தனது சீடரின் வீட்டிற்குச் செல்கிறார். இயேசு நிச்சயமாக, பேதுருவின் வீட்டிற்கு உரிமையோடு சென்றிருக்க வேண்டும். ஏனென்றால், அவர் தொழுகைக்கூடத்தில் போதித்திருக்கிறார். சற்று இளைப்பாற அவர் நினைத்திருக்கலாம். ஆனால், நிச்சயமாக, பேதுருவின் மாமியார் உடல்சுகவீனம் இல்லாமல் இருப்பது அவருக்குத் தெரிந்திருக்காது. ஏனென்றால், இயேசு வீட்டிற்குள் நுழைந்தபிறகுதான், அவருடைய சீடர்கள் பேதுருவின் மாமியார் உடல் சுகவீனம் இல்லாமல் இருப்பதை அறிவிக்கின்றனர். இயேசுவோடு...