Category: இன்றைய சிந்தனை

படைப்புக்களின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகிறது

திருப்பாடல் 19: 2 – 3, 4 – 5 கடவுள் இருக்கிறாரா? எங்கே இருக்கிறார்? கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் என்ன? இவை போன்ற கேள்விகள், மனித உள்ளத்தில் அடிக்கடி எழக்கூடியவை. ஏனெனில், மனிதர்களாகிய நாம் எப்போதுமே, காரணங்களை, விளக்கங்களைத் தேடுகிறவர்களாக இருக்கிறோம். இன்றைய திருப்பாடல் கடவுளின் இருப்பை, அவருடைய மாட்சிமையை, மகிமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இந்த திருப்பாடலில் வரக்கூடிய முதல் நான்கு இறைவார்த்தைகளுமே, கடவுளின் வல்லமையை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. நாம் காலை விழித்தெழுவதிலிருந்து பார்க்கக்கூடிய எல்லாவற்றிலும், கடவுளின் மகிமையைக் கண்டுனரலாம். காலையில் எழக்கூடிய சூரியன், எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிற மேகக்கூட்டங்கள், இரவு, பகல் மாற்றம் – இவையனைத்துமே தங்களைப் படைத்தவர் ஒருவர் இருக்கின்றார் என்பதை, வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. நாளை சூரியன் தோன்றுமா? தோன்றும் என்கிற நம்பிக்கையை, இயற்கை நமக்கு தந்துகொண்டே இருக்கிறது. அவையனைத்துமே கடவுளின் வேலைப்பாடுகள் தான். கடவுளை நாம் வேறு எங்கேயும் தேட வேண்டாம்?...

இணைந்திருந்தால்.. .. நிலைத்திருந்தால் .. .. கேட்பதெல்லாம் நடக்கும்

வாழ்க்கை என்பது கனி நிறைந்த வாழ்வாக இருக்க வேண்டும். இந்த கனி தரும் வாழ்வு என்பது, நமக்குள் நிறைவையும் நிம்மதியையும் தருவது. பிறருக்கு பயன்படக்கூடியது. இறைவனுக்கு மகிமை சேர்ப்பது. ஒருவன் வாழ்ந்ததன் பயன் இதுதான். இத்தகைய கனி தரும் வாழ்க்கையை வாழ, ஒருவன் இறைவனோடு இணைந்திருக்க வேண்டும். இக் கருத்தை இயேசு இப்பகுதியில் பலமுறை உணர்த்துகிறார். ‘இணைந்திருத்தல்’ , ‘நிலைத்திருத்தல்’ என்னும் வார்த்தைகளை இதற்கென பலமுறை பயன்படுத்துகிறார். “இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது”. “இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்”. “என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது”. “நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.” இவ்வசனங்கள் இதற்குச் சான்றுகள். இயேசுவோடு இணைந்திருப்பதன் நெருக்கம் பல பலன்களைக் கொடுக்கவல்லது. இயேசுவை விட்டுக் கொஞ்சம் விலகினாலும் அந்த இழப்பு, கொஞ்சம் அல்ல. மிக மிகப் பெரிது. “என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது”...

பவுலடியாரின் நம்பிக்கை வாழ்வு

திருத்தூதர் பணி 14: 19 – 28 தொடங்கியிருக்கிற பணியில், உறுதி கொண்ட கொள்கையில் பிடிப்போடு இருக்க வேண்டும் என்கிற வார்த்தைகளுக்கு முன்னோடியாக திகழக்கூடியவராக, பவுலடியார் இருப்பதை, இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கிறிஸ்துவைப் பற்றி பல இடங்களுக்குச் சென்று அறிவித்து வந்த, பவுலடியாரின் போதனைகளுக்கு மக்கள் நடுவில் ஆதரவும் இருந்தது. எதிர்ப்பும் இருந்தது. எதிர்ப்பு என்பது சாதாரணமானதாக இல்லை. அவரை கொலை செய்ய செல்லும் அளவுக்கு இருந்தது. இன்றைய வாசகம் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத்தான் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. அந்தியோக்கியாவிலிருந்தும், இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல் மேல் கல் எறிந்தார்கள். அவர் இறந்துவிட்டார் என்றும் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது போல பவுல் இறக்கவில்லை. இந்த நிகழ்ச்சி நம்மில் ஒருவருக்கு நடந்திருந்தால், நம்முடைய அடுத்த சிந்தனை என்னவாக இருக்கும்? இனிமேல் இந்த பணி எதற்கு என்று, சோர்ந்துவிடுவோம் அல்லது சற்று உடல் தேறுகிறவரையில் ஓய்வு...

இறைவனின் பணிக்காக நம்மையே கொடுப்போம்

திருத்தூதர் பணி 13: 13 – 25 உயிர்த்த கிறிஸ்துவின் அடையாளமாக பவுல் விளங்குவதை இன்றைய வாசகத்தில் பார்க்கிறோம். இயேசு யார்? இயேசுவுக்கும் யூதர்கள் வழிபடக்கூடிய “யாவே“ இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்ன? இயேசு மீது எதற்காக நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்? என்று, மீட்பின் வரலாற்றை, தான் பெற்ற அறிவாற்றலைக் கொண்டு விளக்குகிறார். வரலாறு என்பது முக்கியமானது. நம்மைப் பற்றி அறிந்து கொள்வதற்கு, நம்முடைய வரலாற்றைப் படிக்க வேண்டும். அது ஓர் இனமாக இருக்கலாம் அல்லது தனி மனிதனாக இருக்கலாம். இயேசுவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு, அதிலும் சிறப்பாக அவரை நம்பி ஏற்றுக் கொள்வதற்கு, அவருடைய வரலாற்றை அறிந்து கொள்வது முக்கியமானது. யூதர்கள் அனைவருமே தங்களது மறையை தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். எனவே தான், பவுல் அவர்களுக்கு மீட்பின் வரலாற்றைப் பற்றி சொன்னபோது, அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. கிறிஸ்துவின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர் மீது நம்பிக்கை...

கடவுளே! எம்மீது இரங்கி, ஆசி வழங்குவீராக!

திருப்பாடல் 67: 1 – 2, 4, 5 & 7 கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு, அவரது இரக்கம் நமக்கு நிறைவாகக் கிடைக்க வேண்டுமென்று ஆசிரியர் அழைப்புவிடுக்கின்றார். கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு எதற்கு இரக்கம் தேவைப்படுகிறது? இரக்கத்திற்கும், ஆசீர்வாதத்திற்கும் என்ன தொடர்பு? கடவுளின் ஆசீரைப் பெற வேண்டுமென்றால், கடவுளின் இரக்கத்தைக் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால், கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு நாம் தகுதியற்றவர்கள். ஆசீர்வாதம் என்பது புனிதத்தன்மை நிறைந்தது. கடவுளிடமிருந்து வருவது. அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு, மனிதர்களாகிய நாம் தகுதியற்றவர்கள். கடவுளின் இரக்கம் நம்மோடு இருக்கிறபோது மட்டும் தான், அவரது அருளை நாம் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக இருக்கும். கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு முன்னதாக, நம்மையே கடவுளிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும். பழங்காலத்தில், முனிவர்கள் காடுகளில் நோன்பிருந்து, தவம் செய்தார்கள். இந்த தவத்தை அவர்கள் செய்வது, கடவுளின் அருளைப் பெற்றுக்கொள்வதற்கான தயாரிப்பிற்காகத்தான். தங்களையே ஒறுத்து, தங்களின் தேவையற்ற ஆசைகளை அடக்கி, உடலை வருத்தி,...