Category: Mother Mary

தெய்வீகப் பெருமை கூறும் தேவ தாயின் வணக்க மாதம்

அன்னை மரியின் தியாகத்தை சிந்திப்போம், வாழ்வில் ஏற்போம்! வைகாசி மாதம் வணக்க மாதமாகவும் மாதாவின் மாதமாகவும் நினைவு கூறப்படுகின்றது. நமக்கொரு தாய் இருக்கின்றார். நம்மை என்றும் காக்கின்றார் என்று பாடும் மாதமிது. மே மாதம் மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம். “அருள் நிறைந்தவளே வாழ்க ஆண்டவர் உம்முடனே” என கபிரியேல் வான தூதர் மரியாளைப் புகழ்கின்றார். (லூக் 1:28) இறைவன் வாசம் செய்ய தேர்ந்து கொண்ட திருக்கோயில் நம் தாய் மரியாள். பெண்ணினத்தின் ஆசிர்வதிக்கப்பட்ட பேரரசி நம் பிரியமுள்ள அன்னை அவளை அன்றாடம் அன்புடன் நினைத்து நெஞ்சாரப் புகழ்வது நம் எல்லோரதும் கடமை. சிறப்பாக நம் அன்னையை புகழவும் வாழ்த்தவும் இந்த மே மாதம் நமக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இம் மாதம் முழுவதும் தினமும் மாலையில் ஆலயத்தில் அல்லது நம் வீடுகளில் ஒன்றுகூடி செபமாலை மன்றாட்டுகளை அர்ச்சனைப் பூக்களாக்கி குடும்பங்களாக குழுக்களாக கூடி செபமாலை சொல்லுவோம். பெண்கள் கூடுமிடங்களில் பேச்சு நிறைந்திருக்கும். மாதாவின் வாழ்வை...

சோதனைகளிலும் மாதா இறைவனோடு இணைந்திருந்தார்

மாதாவின் வணக்க மாதத்தையொட்டிய சிறப்புக் கட்டுரை திருவிவிலியம் தூய கன்னி மரியாவைப் பேறு பெற்றவர் என்று எதனால் அழைக்கின்றது? மாதா கூட தாம் பேறுபெற்றவர் என்றும், எல்லாத் தலைமுறையினரும் தம்மைப் பேறுபெற்றவர் என்று அழைப்பர் என்றும் கூறுகின்றார். (லூக் 1 : 48). வேறு எவருக்கும் கிடைக்காத நான்கு அருளை ஆண்டவர் மாதாவுக்குக் கொடுத்தார். கத்தோலிக்கத் திருச்சபையும் மாதாவைக் குறித்து நான்கு மறையுண்மைகளைப் போதிக்கின்றது. அவை முறையே மாதா இறைவனின் தாய். நித்திய கன்னி, ஜென்ம பாவமில்லாமல் பிறந்த அமலோற்பவ மாதா மற்றும் விண்ணேற்பு அடைந்தவர். இந்த மாபெரும் அருளைப் பெற்றதால் அல்ல அவர் பேறுபெற்றவர் என்று அழைக்கப்படுவது. மாறாக அவரது நம்பிக்கையால்தான். ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் (லூக் 1 : 45). யோவான் நற்செய்தியில் இயேசு இரண்டு நற்பேற்றைக் குறித்து கூறியுள்ளார். ஒன்று : பிறருக்குச் செய்யும் சேவை (13 : 17);...