Category: தேவ செய்தி

இயேசுகிறிஸ்து வழியாக நமக்கு வெற்றி கொடுக்கும் கடவுளுக்கு நன்றி

கடவுள் இயேசுகிறிஸ்து வழியாக மனித இனம் முழுவதும் வெற்றி வாகை சூடியவர்களாக புதிய உலகமாகிய விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லவே இந்த பூமிக்கு வந்து ஒரு மனிதனை போல பல பாடுகளை அனுபவித்து நமக்கு முன்மாதிரியை காண்பித்து சென்றுள்ளார். ஏனெனில் ஒரே மனிதனால் பாவம் இந்த உலகில் வந்தது. ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்படியாமையால் பலர் பாவிகளானதுபோல, ஒருவரின் கீழ்படிததால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள். ஆனால் குற்றத்தின் தன்மை வேறு அருள்கொடையின் தன்மை வேறு. ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள் கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது. இந்த அருள்கொடையின் விளைவு வேறு. அந்த ஒரு மனிதர் செய்த பாவத்தின் விளைவு வேறு, எவ்வாறெனில், ஒரு மனிதர் செய்த குற்றத்துக்குத் தீர்ப்பாகக் கிடைத்தது தண்டனை. பலருடைய குற்றங்களுக்கும் தீர்ப்பாகக் கிடைத்ததோ...

நம்பிக்கையால் உண்டாகும் மேன்மை

ஆபிரகாம் கடவுள்மீது நம்பிக்கை வைத்தார். அதை கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார். ஒருவர் வேலை செய்வதனால் கூலி அதாவது சம்பளம் கிடைக்கும். அது அவர்களின் உரிமை.அது நன்கொடை ஆகாது. ஒருவர் தம் செயல்களில் நம்பிக்கை வைக்காமல் கடவுள்மீது அதிக நம்பிக்கை கொண்டால், ஒருவேளை அவர் அதிகமான இறைப்பற்று இல்லாதவராக இருந்தாலும், அவர் கடவுள்மேல் வைத்த நம்பிக்கை யின் பொருட்டு கடவுள் அவரை தமக்கு ஏற்புடையவராக கருதுகிறார். ஏனெனில் கடவுள் ஒருவரது செயல்களை கவனிப்பதைவிட அவர்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை கவனிக்கிறார். அந்த நம்பிக்கையினால் அவர்கள் மேன்மை அடையும்படி செய்கிறார். இதற்கு உதாரணமாக நாம் பலருடைய வாழ்க்கையை காணலாம். நாம் கண்ணால் காண்பதை நம்புவதும்,நம் வேலைக்கு தக்க கூலி வாங்குவதும் ஒன்றும் அதிசயமில்லையே! நாம் காணாததை நம்முடைய அறிவுக்கு எட்டாத ஒன்றை நம்புவதே நம்பிக்கை. நோவா கண்ணுக்கு புலப்படாததை குறித்துக் கடவுளால் எச்சரிக்கப்பட்டபோது, தம் குடும்பத்தைக் காப்பாற்ற, கவனத்தோடு ஒரு பேழையை அமைத்தது நம்பிக்கையினால்தான். அதன் வழியாய் அவர் உலகைக் கண்டித்து இறைவனுக்கு ஏற்புடையவர் என்னும் உரிமைப்பேறு பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஆபிரகாம் வயது முதிர்ந்த நிலையில் இருந்த...

சுதந்திர தின மற்றும் மாதா விண்ணேற்படைந்த நாள் நல்வாழ்த்துக்கள்

இந்தியா என் தாய் நாடு. இந்தியர் யாவரும் என்னுடன் பிறந்தவர்கள். என் தாய் திருநாட்டை உளமார நேசிக்கிறேன். இந்த நாட்டில் பிறந்த நாம் ஒவ்வொருவரும் நம் நாட்டை நேசிக்க வேண்டும். உலகத்தில் எவ்வளவோ நாடுகள் இருக்கின்றன. ஆனால் எல்லா நாடுகளும் நம் வேதத்தில் இடம் பெறவில்லை. ஆனால் இந்தியா தேசம் நம் விவிலியத்தில் இடம் பிடித்துள்ளது. அதற்காகவே நாம் பெருமை பட வேண்டும். இந்தியாவை இயேசு அளவில்லாமல் நேசிக்கிறார், என்பதை இதன்மூலம் உணரலாம். சுமார் கி. மு . 470 – 460 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா தேசத்தை எழுதியிருக்கிறார்கள். இதை நாம் எஸ்தர் புத்தகம் முதல் அதிகாரம் முதல் வசனத்திலேயே காணலாம். அகாஸ்வேர் ராஜா அரசாண்ட காலத்தில் இந்தியா முதல் எத்தியோப்பியா தேசம் வரை சுமார் 127 மாநிலங்களை அரசாண்டார் என்று எஸ்தர் 1 : 1 ல் வாசிக்கிறோம். 127 நாடுகள் என்று இருக்கும் பட்சத்தில் இந்தியா தேசம் இடம் பெற்றிருப்பது நாம் எல்லோரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் தானே! எஸ்தர்...

இரத்தம் சிந்துதல் இன்றிப் பாவமன்னிப்பு இல்லை. எபிரேயர் 9 : 22

உண்மையில் திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தினால் தூய்மையாக்கப் படுகின்றன. அதனால் இயேசு தம்மையே பாவ பலியாக கொடுக்கவே இந்த பூமிக்கு வந்தார். அவருடையே இரத்தமே எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும். தூய்மைப் படுத்திக்கொண்டு இருக்கிறது. மோசேயின் காலத்தில் ஆடு, மாடுகள் பலியிடப்பட்டு குருவானவர் தமக்காகவும், மக்களுக்காகவும் அவற்றின் இரத்தத்தைக் கொண்டுப்போய் இரண்டாம் கூடாரத்தில் படைப்பார். அவர்கள் தங்கள் வழிப்பாட்டு பணிகளை நிறைவேற்ற முன் கூடாரத்தில் மட்டுமே நுழைவார்கள். இரண்டாம் கூடாரத்தில் தலைமைக் குரு மட்டுமே ஆண்டுக்கு ஒருமுறை செல்வார். இதனால் நாம் அறிவது தூய ஆவியார், முன்கூடாரம் நீடித்து இருக்கும்வரை, தூயகத்திற்குச் செல்லும் வழி இன்னும் வெளிப்படுத்தவில்லை என்பதைக் காட்டுகிறார். ஆனால் இப்போது கிறிஸ்து தலைமைக்குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்கு கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதைவிட மேலானது, நிறைவு மிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல. படைக்கப்பட்ட ஆடு, மாடுகளின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. இயேசு ஒருமுறை இந்த தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள...

காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகிறார். ஏசாயா 50 : 4

ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்து போகவில்லை! காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றது! அவரே பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!. அவரையே நம்முடைய பங்காக கொண்டு அனுதினமும் செயல்படுவோமானால் நம் நிழலாக இருந்து நம்மை காத்துக்கொள்வார். காலைதோறும் தேடுவோருக்கு அவர் நல்லவர்! ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்! ஏனெனில் அவர் கட்டளையிடாமல் யார் தாம் சொல்லியதை நிறைவேற்றக்கூடும்? ஆண்டவர் நம்மை ஆராய்ந்து அறிந்திருக்கிறார். நாம் அமர்வதையும், எழுவதையும் அறிந்திருக்கிறார். நம்முடைய எண்ணங்கள் சிந்தனைகள் யாவும் அவருக்குத் தெரியும். நாம் நடந்தாலும், படுத்திருந்தாலும் நம்முடைய வாயில் வார்த்தைகள் உருவாகும் முன்பே முற்றிலும் அவர் அறிந்திருக்கிறார். நம்மேல் அவர் வைத்துள்ள அறிவை நாம் அறியமுடியுமோ? அது நமக்கு வியப்பானது அல்லவோ! அவருக்கு மறைவாக எங்கேயாவது நாம் போகமுடியுமா? விண்ணையும், மண்ணையும், காற்றையும், கடலையும், மண்ணான மனிதர்களாகிய நம்மையும் படைத்தவர் அவர் அல்லவா!! நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நாம் பெற்றிட ஆண்டவர் நமக்கு கற்றோரின் நாவைக் கொடுக்கிறார். அதற்காகவே காலைதோறும் நம்மை தட்டி எழுப்புகிறார். கற்போர் கேட்பதுபோல நாமும் காலைதோறும் அவரின் வார்த்தைகளை வாசித்து...