Category: தேவ செய்தி

நான் எதற்கும் அஞ்சிடேன்

அச்சம் என்பது மனிதர்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான ஒன்று. வாழ்க்கையில் எது நடக்குமோ? என்கிற பயம் எல்லாருக்குமே இருக்கும். அடுத்த வேளை என்ன நடக்குமோ என்கிற பதட்டம் மனிதர்களுக்குள்ளாக நிச்சயம் இருக்கும். ஆனால், இந்த உலகத்தில் பயப்படாமல் இருக்கிற மனிதர்கள் இருக்கிறார்களா? அவர்கள் யார்? கடவுள் மீது முழுமையான நம்பிக்கை உள்ளவர்களே, அடுத்த வேளையைப் பற்றியோ, அடுத்த நாளைப்பற்றியோ கவலை கொள்ளாத மனிதர்கள். ஆகவே, நாம் அனைவருமே கடவுள் மீது நமது முழுமையான நம்பிக்கையை வைத்து, நமது வாழ்வை வாழ்வதற்கு இந்த திருப்பாடல் (திருப்பாடல் 23: 1) நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் (யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-11)விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை, இயேசுவின் முன்னால் நிறுத்துகிறார்கள். எது சரி? எது தவறு? என்பதை அறிய வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, இயேசுவை எப்படி சிக்க வைக்கலாம்? என்பதற்காக. இது அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும். இந்த பிரச்சனை சற்று சிக்கலான பிரச்சனையும்...

கடவுளின் வல்லமை வெளிப்பட பொறுத்திருப்போம்

இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தல் என்பது இயேசுவுக்குப் புதிதல்ல. ஏற்கெனவே தொழுகைக்கூடத்தலைவரின் மகளுக்கும், நயீன் நகர் கைம்பெண்ணின் மகனுக்கும் உயிர் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த நிகழ்வுகளுக்கும், இலாசரை உயிர்ப்பிக்கும் நிகழ்வுகளுக்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது. இலாசர் நோயுற்றிருக்கிறார் என்பது இயேசுவுக்குத் தெரியவந்தாலும், அவர் அங்கு செல்வதற்கு தாமதிக்கிறார். இலாசர் இறந்து நான்கு நாட்கள் கழித்துதான் கல்லறைக்குச்செல்கிறார். ஏனென்றால், இயேசு கல்லறையைத்திறக்கச்சொன்னபோது, மார்த்தா அவரிடம், ‘ ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று. நாற்றம் அடிக்குமே’ என்கிறார். யூதர்களின் நம்பிக்கைப்படி, ஒரு மனிதனுடைய ஆவி தன்னுடைய உடலில் மீண்டும் நுழைவதற்காக, கல்லறையைச்சுற்றி, சுற்றி வருமாம். கல்லறை வாயில் அகற்றப்பட்டால் மீண்டும் அந்த உடலில் நுழைந்துவிட வாய்ப்பு தேடிக்கொண்டிருக்குமாம். நான்கு நாள்கள் ஆனபின், உடல் அழுகிவிடுவதால், தன்னுடைய உடலை அதற்கு அடையாளம் காணமுடியாமல், அங்கிருந்து சென்றுவிடுமாம். இதன் அடிப்படையில் தான் மார்த்தா இப்படிச்சொல்கிறார். இந்தப்புதுமையை நன்றாக ஆராய்ந்து பார்த்தால், நமது வாழ்வில் நடக்கக்கூடிய நிகழ்வுகள் கடவுளின் மகிமையை...

இவர்களில் நாம் யார்?

இன்றைய நற்செய்தியில் (யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 40-53) மூன்று வகையான கதைமாந்தர்களையும், அவர்களின் எண்ண ஓட்டங்களையும் பார்க்கிறோம். இவர்கள் ஒவ்வொருவருமே, பலதரப்பட்ட மனிதர்களைப்பிரதிபலிக்கிற பிம்பங்களாக இருக்கின்றனர். இவர்களில் நாம் யாராக இருக்கிறோம்? யாராக இருக்க வேண்டும்? என்னும் கேள்வியோடு இவர்களைப்பார்ப்போம். 1. காவலர்கள்: தலைமைக்குருக்களாலும், காவலர்களாலும் இயேசுவைக் கைதுசெய்வதற்காக அனுப்பப்பட்டவர்கள் காவலர்கள். அவர்களுக்கு தலைமைக்குருக்களின் அதிகாரம் நன்றாகத்தெரியும். அவர்கள் சொல்வதைத் தாங்கள் செய்யவில்லை என்றால், அதனால் வரும் விளைவுகளும் நன்றாகத்தெரியும். ஆனாலும், அவர்களின் துணிவு நம்மை வியக்கவைக்கிறது. நிச்சயம் அவர்களை அனுப்பிய தலைமைக்குருக்களுக்கு இது ஒரு அதிர்ச்சியான செய்திதான். ஆனாலும் அந்த அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல், ‘நீங்களும் ஏமாந்துபோனீர்களா?’ என்று தங்களது ஏமாற்றத்தை வெளியே காட்டாமல், அவர்களைப்பார்;த்து முணுமுணுக்கிறார்கள். காவலர்களின் உடல் மட்டுமல்ல, உள்ளமும் வீரம் என்பதற்கு அவர்களின் சாட்சியம் சிறந்த எடுத்துக்காட்டு. சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் அவர்களுக்கு இடம் இல்லையென்றாலும், அவர்களின் நேர்மை நமக்கெல்லாம் மிகப்பெரிய படிப்பினை. 2....

கடவுளை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம்?

”என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத்தெரியாது”. இந்த வார்த்தைகள் தான் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முக்கியமான வார்த்தைகள். இந்த வார்த்தைகள் தான் இயேசுவைக் குற்றவாளியாக்கிய வார்த்தைகள். இந்த வார்த்தைகள் தான், இயேசுவிடமிருந்து பல நாட்களாக, அவரிடத்தில் குற்றம் காணுகிறவர்கள் எதிர்பார்த்த வார்த்தைகள். அவர்கள் இயேசுவைக் குற்றம் சுமத்த தேடிக்கொண்டிருந்தது கிடைத்துவிட்டது. இந்த வார்த்தைகளில் அப்படி என்ன தான் குற்றம் சுமத்த முடியும்? யூதர்கள் தாங்கள் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாக நினைத்தனர். தாங்கள் கடவுளுக்கு மிக அருகாமையில் உள்ளவர்களாக எண்ணினர். கடவுளை தங்களைத்தவிர அறிந்தவர்கள் யாரும் இல்லை என்ற மமதை கொண்டிருந்தனர். ஆனால், இயேசு அவர்களுக்கு கடவுளைத்தெரியாது என்று சொல்கிறார். சாதாரண மனிதர்கள் யாரும் பேசக்கூடாத இஸ்ரயேலைப்பற்றியும், இஸ்ரயேலின் கடவுளைப்பற்றியும் அவர் பேசியது, கடவுளைப்பழித்துரைத்ததற்கான செயல் என்று அதிகாரவர்க்கத்தினர் அவரை குற்றம் சுமத்தினர். கடவுளைப்பற்றி பலரும், பலவிதமாகப் புரிந்துகொண்டுள்ளனர். தங்களது அனுபவத்தை பலவிதமாக வெளிப்படுத்தியுள்ளனர். எழுதியும் வைத்துள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வெளிப்படுத்தியுள்ளனர். நாமும் கடவுள்...

இயேசுவின் சாட்சிகளாய் வாழ்வோம்

‘நீர்தான் கடவுளின் மகன் என்பதற்கு என்ன சான்று தருகிறீர்?’ என்று தன்னை மற்றவர்கள் கேட்டதற்கு, இயேசு இன்றைய நற்செய்தியில் பதில் தருகிறார். யூதர்களைப்பொறுத்தவரையில் உண்மை என்று நம்புவதற்கு இரண்டு சாட்சிகள் கட்டாயம் வேண்டும். ஒருவர் தனக்குத்தானே சான்று கூறுவதை, அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இணைச்சட்டம் 17: 6 “இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை முன்னிட்டே, குற்றவாளி கொலை செய்யப்பட வேண்டும்”. இணைச்சட்டம் 19: 15 “ஒருவனது எந்தக்குற்றத்தையும் எந்தப்பழிபாவச்செயலையும் உறுதிசெய்ய, ஒரே சாட்சியின் வாக்குமூலம் போதாது. இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தாலே அது உறுதி செய்யப்பட வேண்டும்.” இயேசு இந்த ஒழுங்குமுறையின்படி சான்றுகளைத்தருகிறார். இயேசுவின் முதல் சான்று திருமுழுக்கு யோவான்(33) இயேசுவின் இரண்டாவது சான்று தந்தையாகிய கடவுள்(37)மூன்றாவது சான்று மறைநூல். ஆனால், இந்த சான்றுகளையெல்லாம் விட இயேசு அதிக அழுத்தம் கொடுத்து கூறுவது, அவரின் செயல்கள்(36). தனது செயல்களை விட வேறு என்ன பெரிய சான்றை தான் கொடுத்தவிட...