Category: தேவ செய்தி

பகிர்ந்து வாழ்வோம்

”இருப்பதிலிருந்து தான், நாம் மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும்”. இதனை கிராமப்புறங்களில், ”சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்” என்று, நாட்டுப்புற வழக்கில் கூறுவார்கள். இன்றைய நற்செய்தியும், ”உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்” என்று, இதனை அடியொற்றி சொல்கிறது. நாம் அனைவருமே மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காகப் பிறந்தவர்கள். இயற்கை அன்னையைப் பார்த்தால் அந்த உண்மை நமக்குத் தெரியவரும். அருவி, மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்துமே மற்றவருக்குக் கொடுப்பத்தில் நிறைவைப் பெறுகிறது. எந்த மரமும் அதன் கனியை, தானே உண்பதில்லை. பறவைகளும், விலங்குகளும் மனிதர்களும் பயன்பெறுவதற்காகவே அதைக் கொடுக்கிறது. மனிதர்களும் இயற்கை அன்னையின் பிள்ளைகள் தான். அவர்களும் அன்னையைப்போல தங்களின் வாழ்வில் மற்றவர்களுக்குக் கொடுத்து, அதில் நிறைவைக்காண அழைக்கப்படுகிறார்கள். எனவே, நாமும் மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காகவே, கொடுத்து வாழ்வதற்காகவே அழைக்கப்படுகிறோம். இன்றை நற்செய்தியும் இதனைத்தான் வேறுவார்த்தைகளில் சொல்கிறது. நாம் கொடுப்பது முதன்மையான காரியம். நாம் கொடுப்பது நல்லதாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்குப் பயன்படுவதாக இருக்க வேண்டும். எத்தனையோ மரங்கள்...

திருச்சிலுவைப் பெருவிழா

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இறந்த சிலுவையானது சாதாரண பொருளாக அல்ல. மாறாக, தியாகத்தின் சின்னமாக, நினைவாகக் கருதப்படுகிறது. இயேசுவின் பாடுகள், அவருடைய இறப்பு மற்றும் உயிர்ப்பு தான் கிறிஸ்தவத்தின் விசுவாசத்தை உலகிற்கு கொண்டு வந்தது. எனவே தான் தூய பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (1: 17, 18) ”திருமுழுக்கு கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப்போய்விடும். சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப்பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை” என்று கூறுகிறார். நான்காம் நூற்றாண்டின் முதல் பகுதியில் திருச்சிலுவையின் பக்தி முயற்சியை நாம் காண முடிகிறது. அலெக்சாண்டிரியன் குறிப்பேடு வழங்கும் சான்றுப்படி கான்ஸ்டன்டைன் தாயான ஹெலன் (இலேனம்மாள்) அரசி தான், ஆண்டவரின் திருச்சிலுவையை செப்டம்பர் 14, 320 அன்று கண்டுபிடித்தார். அதன்பின் 13 செப்டம்பா்...

இறைவனின் வருத்தம்

இந்த உலகத்தில் கடவுள் நம்மைப் படைத்தார் என்றால், அதற்கு முழுமையான நோக்கம், நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான். இந்த உலகத்தின் படைப்புக்களில் எல்லாம் சிறந்த படைப்பாக, மனிதர்களைப் படைத்தார். அவர்களை படைப்பின் சிகரமாக உண்டாக்கினார். அவர்களுக்கு பல சுதந்திரங்களையும் கொடுத்தார். இவ்வளவு செய்தாலும், மனித இனம் தன்னைப் படைத்தவரை நன்றியோடு நினைத்துப்பார்க்கவில்லை. இன்றைய நற்செய்தியின் வெளிப்பாடு, கடவுளின் கோபம் என்பதை விட, கடவுளின் மனவருத்தம் என்பதே யதார்த்தமான நிலையாக இருக்கிறது. மனிதன் மகிழ்ச்சியாக வாழத் தேவையான அனைத்தையும் கடவுள் கொடுத்திருக்கிறார். ஆனால், மனித இனம் மகிழ்ச்சியாக இல்லை. காரணம், சுயநலம். எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல், தான் மட்டும் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற குறுகிய மனம் தான், மனிதனின் மகிழ்ச்சியற்ற நிலைக்கு காரணமாக இருக்கிறது. தான் மகிழ்ச்சியாக இல்லையென்றாலும் பரவாயில்லை. மற்றவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிடக்கூடாது என்கிற எண்ணம், இன்றைய நாகரீக மனிதனின் நெஞ்சத்தில் பசுமரத்தாணி...

ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்

”அனுபவமே சிறந்த ஆசான்” என்று பொதுவாகச் சொல்வார்கள். திருப்பாடல் ஆசிரியரின் இந்த வரிகள், அவருடைய அனுபவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அறியாததை, தெரியாததை கற்றுக்கொடுப்பது தான் அனுபவம். இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்று அனுமானத்தின் அடிப்படையில் பல நிகழ்வுகள் நம்முடைய வாழ்க்கையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த அனுமானத்தை உறுதிப்படுத்துவதுதான் அனுபவம். திருப்பாடல் ஆசிரியருடைய அனுபவம் என்ன? அவருடைய அனுபவத்திற்கும், இன்றைய திருப்பாடலுக்கும் என்ன தொடர்பு? ”ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்” என்பதுதான் திருப்பாடல் ஆசிரியரின் அனுபவம். அவருடைய அனுமானம் இதுவரை, கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமே என்பதாக இருந்திருக்கிறது. அந்த அனுமானத்தின் அடிப்படையில் தான், அவரும் வாழ்ந்திருக்கிறார். ஏனென்றால், இஸ்ரயேல் கடவுளின் விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்று அவருடைய முன்னோர்கள் வழியாக கேள்விப்பட்டிருக்கிறார். அந்த நம்பிக்கையோடு தான், அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவருடைய அனுமானம் சரியானதல்ல என்பதை உணர்கிறார். கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, இந்த உலகத்திற்கு சொந்தமானவர்...

எழுந்து நடுவே நில்லும்

தாழ்வு மனப்பான்மை என்பது இந்த நவீன உலகத்தில் அதிகரித்து வரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. தாழ்வு மனப்பான்மையை வைத்து வியாபாரம் செய்யும் ஒரு குழு, அதனைப் பயன்படுத்தி பணத்திற்கு மேல், பணத்தைச் சம்பாதித்து வருகிறது. தாழ்வு மனப்பான்மை, இந்த சமுதாயத்தில் பல்வேறு குற்றங்கள பெருகவும் காரணமாக அமைந்துவிடுகிறது. இப்படி இந்த உலகம், தாழ்வு மனப்பான்மையினால், சிக்கித்தவிக்கும் சூழ்நிலையில், இயேசுவின் வார்த்தைகள், இந்த எதிர்மறையான மனநிலையைப்போக்கக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது. யூத சமுதாயத்தில் நோய்வாய்ப்பட்டவர்கள், ஏழைகள், வறியவர்கள் அனைவருமே பாவிகள் என முத்திரை குத்தப்பட்டவர்கள். அவர்கள் சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களாகவே கருதப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டன. அவர்கள் இழிவாகப் பார்க்கப்பட்டனர். அவர்கள் பொது இடத்தில் இருப்பதற்கு கூட, அனுமதி மறுக்கப்பட்டனர். இப்படிப்பட்ட பிண்ணனி உள்ள நிலையில், கைசூம்பிப்போன மனிதர் ஒருவரை, ”எழுந்து நடுவே நில்லும்” என்று சொல்கிறார். எழுந்து நிற்பது என்பது சாதாரண வார்த்தையல்ல. அது ஒருவருக்கு அதிகாரத்தைக் கொடுக்கும்...