Category: தேவ செய்தி

இயேசுவைப் பின்பற்றுவோம்

நாம் அனைவருமே இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தின் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62) சாராம்சம். இன்றைக்கு பல புனிதர்களை தாய்த்திருச்சபை நமக்குத் தந்திருக்கிறது. இந்த புனிதர்கள் அனைவருமே சிறப்பான வாழ்வை வாழ்ந்தவர்கள். இப்படியெல்லாம் கூட வாழ முடியுமா? என்று, நாமே வியந்து பார்த்தவர்கள். நாம் வாழ்ந்த இந்த சமுதாயத்தில் வாழ்ந்த, புனித அன்னை தெரசா இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இந்த நவீன காலத்திலும் ஏழை, எளிய மக்கள் மீது அன்பு கொண்டு, சிறப்பான வாழ்வை வெளிப்படுத்தியவர்கள் நமது நாட்டில் பணிபுரிந்த இந்த புனிதை. எப்படி இவர்களால் இப்படி ஒரு வாழ்க்கை வாழ முடிந்தது என்றால், அவர்களது எளிமையான பதில், இறைமகன் இயேசுகிறிஸ்து. இயேசுவைப் பின்பற்றி வாழ்ந்த அந்த வாழ்க்கை தான், அவர்களால் இப்படிப்பட்ட சிறப்பான வாழ்வை வாழ, உறுதுணையாக இருந்தது. இயேசு தான், நமக்கு வழிகாட்டி. முன்மாதிரி. திருத்தூதர்கள் இயேசுவை பின்பற்றி தான், தங்களது...

கடவுளின் அன்பு

இன்றைக்கு இந்த உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள் பலபேர், கடவுளை பழிவாங்கக்கூடியவராக, கோபப்படக்கூடியவராக, இரக்கமில்லாதவராக பார்க்கக்கூடிய மனநிலையைப் பெற்றிருக்கிறார்கள். இந்த மனநிலை இன்றைக்கு உள்ள மனநிலை மட்டுமல்ல. இயேசுவோடு வாழ்ந்த சீடர்களின் மனநிலையும் கூட. தங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கேள்விப்பட்டவுடன், சீடர்களுக்கு கோபம் வருகிறது. எப்படியாவது அவர்களை பழிவாங்கி, தங்களது ஆளுமையை நிலைநிறுத்த வேண்டும் என்று, அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இயேசு அதனை தவறு என்று அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார். கடவுள் தன்னுடைய வல்லமையை, வலிமையை சாதாரண மனிதர்களுக்கு காட்ட வேண்டும் என்பதில்லை. அவர் அனைத்தையும் கடந்தவராக இருக்கிறார். அவர் மனிதர்கள் மட்டில் மிகப்பொறுமையோடு இருக்கிறார். கடவுள் எவ்வளவு தான் மனிதர்கள் மீது அன்பு வைத்திருந்தாலும், மனிதர்கள் கடவுளின் அன்பைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதற்காக, கடவுள் அவர்கள் மீது கோபப்படவில்லை. அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார். அவர்கள் மீது கோபப்படும் தன்னுடைய சீடர்களை, அவர்களது செயல் தவறு என்பதை எடுத்துரைக்கிறார். காரணம்,...

மிகப்பெரியவர் யார்?

”விண்ணரசில் மிகப்பெரியவர் யார்?” என்பது சீடர்களின் கேள்வி. இயேசுவின் பதில் ”மனந்திரும்பி சிறுபிள்ளைகள் போல் ஆக வேண்டும்”. இயேசுவின் இந்தப்பதில் சீடர்கள் விண்ணரசிற்கு வெளியே இருப்பதைச்சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் தவறான வழியில் சென்று கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது. வாழ்வில், மனிதர்கள் எதை எதிர்பார்த்து தங்கள் வாழ்வை நகர்த்துகிறார்கள் என்பது முக்கியம். அது பதவியையா? அதிகாரத்தையா? பணத்தையா? இன்பத்தையா? இவை அனைத்தும் விண்ணரசில் நுழைவதற்கு தடைக்கற்கள். அப்படியென்றால் வி்ண்ணரசிற்கு நுழைவது எப்படி? நாம் அனைவரும் சிறுபிள்ளைகளாக மாற வேண்டும். சிறுபிள்ளைகளிடத்தில் மூன்று முக்கியமான பண்புகள் காணப்படுகிறது. 1. தாழ்ச்சி. குழந்தைகள் எப்போதுமே தங்களை முன்னிறுத்திக்கொள்வதில் எள்ளளவும் பிரியப்பட மாட்டார்கள். அவர்கள் மறைவாக, பின்புலமாக இருந்து செயல்படுவதைத்தான் விரும்புவார்கள். வளர்ந்தபிறகு போட்டி உலகில் நுழைந்தபிறகு தான், தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முயல்கிறார்கள். 2. சார்ந்திருத்தல். மற்றவர்களைச் சார்ந்திருத்தல் என்பது குழந்தைகளில் இயல்புகளில் ஒன்று. மற்றவரை சார்ந்திருந்து வாழ்வை எதிர்கொள்கிறார்கள். அவர்களை அன்பு செய்கிறவர்கள் மட்டில், அவர்கள் மகிழ்வோடு சார்ந்திருக்கிறார்கள்....

கடவுள் விரும்பும் திறந்த உள்ளம்

மருத்துவரை யார் தேடுவார்கள்? எப்போது தேடுவார்கள்? நோய்வாய்ப்பட்டிருக்கிற அல்லது தான் பாதிக்கப்பட்டிருக்கிறோமோ என்று நினைக்கிற ஒருவர் தான் மருத்துவரை நாடுவார். அதுவரை யாரும் மருத்துவரை நினைத்துக் கொண்டிருப்பதில்லை. தேவை எழுகிறபோது மருத்துவரின் உதவியை ஒருவா் நாடுகிறார். தன்னை நோயாளி என்று கருதாத, நினைக்காத, நம்பாத யாரும் மருத்துவரை தேடுவது கிடையாது. இதுதான் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களின் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் தங்களை தூய்மையானவர்களாக, புனிதமானவர்களாக கருதிக்கொண்டிருந்தனர். கடவுளின் இரக்கம் தங்களுக்கு தேவையில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருக்கிறவர்களுக்கு இந்த உவமையை இயேசு சொல்கிறார். இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு பேரும் வேறுபாடான எண்ணங்களைக் கொண்டிருக்கிறவர்கள். இன்றைக்கு இந்த சமுதாயத்திலும் ஒவ்வொருவரும் வேறுபாடான கோணத்தில் சிந்திக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். அது நேர்மறையாக சிந்திக்கப்பட்டால் வளர்ச்சியை நோக்கியதாக இருக்கும். எதிர்மறையாகச் சிந்தித்தால் அழிவை நோக்கியதாக இருக்கும். இந்த இரண்டு பிள்ளைகளிடத்திலும் தந்தை ஒரே கோரிக்கையைத்தான் வைக்கிறார். பதில் முரண்பட்ட பதிலாக அவருக்கு...

வாழ்வு தரும் இறைவார்த்தை

இயேசு தன்னுடைய வார்த்தைகளைச் சீடர்களின் மனதில் நன்றாகப் பதிப்பதற்கு சொல்கிறார். சீடர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட தருணத்திலே, அனைத்தையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பின்தொடர்ந்தவர்கள். ஆனால், அதற்கு பிறகு, அவர்கள் இயேசுவிடமிருந்து அவ்வளவாக கற்றுக்கொண்டது போல தெரியவில்லை. இயேசுவையும் முழுமையாகப் புரிந்து கொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. அதனுடைய வெளிப்பாடு தான், தங்களுக்குள்ளாக சண்டையிட்டுக்கொண்டது, அதிகாரம், பதவிக்காகப் போட்டியிட்டது போன்ற நிகழ்வுகள். ஆக, சீடர்கள், இயேசுவின் வார்ததைகளை, தங்களுக்கானது என்ற எண்ணம் இல்லாமல், யாருக்காகவோ போதிக்கிறார் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தனர். இந்த சூழ்நிலையில் தான், இயேசு அவரது வார்த்தைகளை உள்ளத்தில் பதிக்குமாறு கூறுகிறார். இயேசுவின் வார்த்தைகள் வெறுமனே கேட்டு, காற்றில் விடுவதற்கான வார்த்தைகள் அல்ல. மாறாக, அவை உள்ளத்தில் பதிக்கப்பட வேண்டிய வார்த்தைகள். அது நம் வாழ்விற்கு வழிகாட்டக்கூடிய வார்த்தைகள். நமது வாழ்வை மாற்றக்கூடிய வார்த்தைகள். அந்த வார்த்தைகளை நாம் உள்ளத்தில் பதித்து, அதனை சிந்தித்து அதன்படி வாழ்ந்தால், நமக்கு ஏராளமான நன்மைகள் நிச்சயம்...