Category: தேவ செய்தி

ஓசன்னா எனும் புகழ்ப் பாடல்!

இன்று குருத்து ஞாயிறு. ஆண்டவர் இயேசுவின் பாடுகளின் ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. இன்றைய வாசகங்கள் குருத்தோலைப் பவனியைப் பற்றி மட்டும் பேசாமல், ஆண்டவர் இயேசுவின் பாடுகள், இறப்பைப் பற்றியும் பேசுகின்றன. எனவேதான், “பாடுகளின் ஞாயிறு” என்னும் பெயரும் உண்டு. இன்றைய நாளில் இயேசுவின் பாடுகள், துன்பங்களைப் பற்றிச் சிந்திப்போம். ஒரு மாற்றத்துக்காக, அவருடைய உடல் துன்பத்தை அல்லாது, உளவியல் துன்பங்களை, மன உளைச்சலை எண்ணிப் பார்ப்போம். இயேசு மெய்யான மனிதர் என்னும் உண்மையின் அடிப்படையில், இயேசு உண்மையான பாராட்டுதல்களை ஏற்றுக்கொண்டார், மகிழ்ச்சி அடைந்தார் என நாம் நம்பலாம். அதுபோல, அவரைப் பற்றித் தவறான செய்திகள், வதந்திகள் பேசப்பட்டபோது அவர் மனம் புண்பட்டார், தாம் அநியாயமாகக் குற்றம் சாட்டப்படுவதாக எதிர்வாதிட்டார் என்பதையும் நற்செய்தி ஏடுகள் பதிவு செய்திருக்கின்றன. எனவே, இயேசுவின் பாடுகளின் நாள்களில் அவருக்கு நேரிட்ட உச்ச கட்ட மன அழுத்தங்கள், உளைச்சல், தனிமை உணர்வு, அவமான உணர்வு… இவற்றையும் நாம் சற்று...

ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்

எரேமியா 31: 10, 11 – 12b, 13 ”ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்” இஸ்ரயேல் மக்கள் பாபிலோனில் அடிமைகளாக நெபுகத்நேசர் மன்னரால் நாடு கடத்தப்பட்டனர். அது கடவுள் கொடுத்த தண்டனையாகவே அவர்கள் பார்த்தார்கள். தாங்கள் கடவுளின் அன்பையும், இரக்கத்தையும் புறக்கணித்ததற்காக பெற்றுக்கொண்ட தண்டனை தான் இது என்று எண்ணிக்கொண்டார்கள். அவர்களுக்கு வேற்றுநாட்டில் இருப்பது மிகப்பெரிய வருத்தத்தைக் கொடுத்தாலும், கடவுளுக்கு எதிராக தாங்கள் செய்த பாவத்தையும், நன்றி மறந்த நிலையையும் நினைத்துப்பார்த்தபோது, இந்த தண்டனைக்கு தாங்கள் தகுதியானவர்கள் என்று, தங்களையே சமாதானப்படுத்திக் கொண்டார்கள். இது தான் அவர்களின் மனமாற்றம். என்றைக்கு நாம் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறோமோ அது மனமாற்றத்தின் தொடக்கமாக அமைகிறது. இந்த நிலையில் கடவுள் அவர்களை மன்னித்து, அவர்களுக்கு எதிர்காலத்தில் வழங்கக்கூடிய ஆசீர்வாதங்களை இறைவாக்கினர் வாயிலாக அறிவிக்கின்றார். கடவுள் தன் மக்களை ஆயர் மந்தையைக் காப்பது போல, காத்து வழிநடத்துவதாக இறைவாக்கினர் பாடுகிறார். அவர் மீண்டும்...

என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்

திருப்பாடல் 18: 1 – 2a, 3, 4 – 5, 6 ”என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்” அழுகையின் இறைவாக்கினர்“ என்று எரேமியாவைச் சொல்வார்கள். தாவீதிற்கும் இந்த அடைமொழி முற்றிலுமாகப் பொருந்தும். ஏனென்றால், அவரது உள்ளத்துயரத்தின் வெளிப்பாடே, அவர் எழுதிய திருப்பாடல்கள். இந்த திருப்பாடலும், தாவீதின் கலக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய திருப்பாடல். தன்னுடைய கவலையை அவர் பாடலாக வடிக்கிறார். துயரத்தோடு தொடங்குகிற அவரது பாடல், மகிழ்ச்சியில் முடிவடைகிறது. இந்த பாடல், சாமுவேல் புத்தகத்தில் வருகிற அன்னாவின் பாடலோடு இணைந்த ஒன்றாக இருக்கிறது. அன்னாவும் தன்னுடைய வேதனையை, பாடலின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார். நேரம் செல்லச்செல்ல அவரது வேதனை அதிகரிக்கிறது. இறுதியில் கடவுளின் மாட்சிமையை வலிமையாக உணர்த்தி அது நிறைவடைகிறது. அந்த பாணி, இந்த பாடலிலும் காணப்படுகிறது. இந்த உலகத்தில் நமக்கென்று இருக்கிற ஒரே ஆறுதல், ஆதரவு கடவுள் மட்டும்தான். நமக்கென்று ஏராளமான நண்பர்கள் இருந்தாலும், உயிர் நண்பர் என்று ஒருவர்...

“IMPELLED BY LOVE” (SEE 2 COR 5:14)

“Whom do You make Yourself out to be?” –John 8:53 Imagine that you are a present-day medical doctor transported back in time a thousand years. Impelled by love for the suffering people of the time, you use your knowledge to cure many people of malaria, smallpox, and other diseases. Your reputation as a healer spreads rapidly. Local doctors, spurred by jealousy, attack you viciously. Though you try your best to reveal the modern medical truth about sterility, hygiene, etc., these doctors angrily contest your every word. They ask you: “Whom do you make yourself out to be?” (Jn 8:53) Before...

ஆண்டவரையும், அவரது ஆற்றலையும் தேடுங்கள்

திருப்பாடல் 105: 4 – 5, 6 – 7, 8 – 9 ”ஆண்டவரையும், அவரது ஆற்றலையும் தேடுங்கள்” திருப்பாடல்களில் பெரும்பாலான பாடல்கள் கடவுளைப் போற்றுவதற்கும், புகழ்வதற்குமானது. இந்த புகழ்ச்சிப்பாடல்களில் ஒரு சில பாடல்கள் மிகச்சிறியதாகவும், ஒரு சில பாடல்கள் மிக நீண்டதாகவும் காணப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது என்றால், கடவுளைப் புகழ்வதற்கு நீண்ட பாடல்கள் தேவையில்லை. மாறாக, நல்ல தூய்மையான மனநிலை தான் அவசியம். எவ்வளவு நீளமாக நாம் பாடுகிறோம், வாழ்த்துகிறோம் என்பது முக்கியமல்ல, எந்த மனநிலையோடு நாம் கடவுளைப் போற்றுகிறோம், புகழ்கிறோம் என்பதுதான், இங்கே நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடமாக இருக்கிறது. கடவுளையும், அவரது ஆற்றலையும் தேட வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கின்றார். எதற்காக கடவுளையும், அவரது ஆற்றலையும் நாம் தேட வேண்டும்? இந்த உலகம் வாழ்வதற்கு கடினமானது. இங்கே நாம் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் ஏராளமாக இருக்கிறது. ஒவ்வொருநாளும் நாம் விழித்தெழுகிறபோது, பிரச்சனைகள் இல்லாத நாளாக இருக்க...