Category: தேவ செய்தி

காணிக்கை கொடுங்கள்! நல்லா இருப்பீர்கள்!

மாற்கு 12:38-44 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 32ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஒரு ஊரில் ஜோசப் என்னும் மனிதர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளிடத்தில் ஆழமான பக்திகொண்டிருந்தார். அதற்கேற்றார்போல் கடவுளுடைய கட்டளைகளை தவறாது கடைப்பிடித்து வந்தார், தன்னிடம் இருப்பதை முடிந்தவரை ஏழைகளுக்கும் இறைபணிக்கும் கொடுத்துவந்தார். இந்த ஜோசப்பின் வீட்டுக்குப் பக்கத்தில் பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவர் யாருக்கும் ஒரு பைசாகூட கொடுக்காதவர். இப்படிப்பட்டவருடைய வீட்டுக்கு வந்த ஓர் இறையடியார் அவரிடத்தில், “நீ சேர்த்து வைத்த செல்வம் யாவும் உன் அண்டை வீட்டானாகிய ஜோசப்பைத் தான் போய் சேரும்” என்று சொல்லிவிட்டுக் கடந்து போய்விட்டார். இது அந்த பணக்காரருக்கு ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியது. இத்தனை ஆண்டுகளும் நாம் சேர்த்துவைத்த செல்வம், யாரோ ஒருவருக்குப்...

உங்களை நம்ப முடியுமா?

லூக்கா 16:9-15 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்கள் பல விதங்களில் தங்களுடைய உண்மை நிலையை இழந்து வருகின்றனர். பல விதங்களில் பல வேடங்களை அணிகின்றனர். யாரையும் நம்ப முடியவில்லை என்பதுதான் பலரின் கூற்று. இது கிறிஸ்தவர்களுக்கு அழகல்ல. உண்மையை எடுத்துரைப்பதே என் பணி என்ற நமது ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டும், நம்பிக்கைக்குரியவர்களாக சாட்சியம் பகர வேண்டும் என்பதே இன்றைய வாசகத்தின் அழைப்பு. நம்பிக்கைக்குரியவர்களாக மாற இரண்டு ஆசைகளை தவிர்க்க வேண்டும். 1. பணம் பணத்தின் மீது ஆசை கொண்டவர்கள் பெரும்பாலும் உண்மையுள்ளவர்களாக, நம்பக்கூடியவர்களாக இருப்பதில்லை. பணம் அவர்களை நடிக்க சொல்கிறது. பொய் சொல்ல வைக்கிறது. அவர்களின் பேச்சில் சுத்தம் இருப்பதில்லை. ஆளுக்கு...

நீரூற்று தரும் புதிய வாழ்வு

எசேக்கியேல் 47: 1 – 2, 8 – 9, 12 நீரூற்று தரும் புதிய வாழ்வு இறைவாக்கினர் எசேக்கியேலோடு கடவுள் பேசுகிறபோதெல்லாம், காட்சியை அவருக்கு வெளிப்படுத்துகிறார். காட்சிகள் வழியாக, கடவுள் சொல்ல வந்த செய்தியை சொல்கிறார். எசேக்கியேலும் அதனைப் புரிந்து கொண்டு, வெளிப்படுத்துகிறார். எசேக்கியேல் புத்தகத்தின் ஒட்டுமொத்த அதிகாரங்களையும் நாம் வாசிக்கிறபோது, ஆங்காங்கே காணப்படுகிற இந்த காட்சிகளையும், அதன் அர்த்தத்தையும் தொடர்ச்சியாக பார்த்து அறியலாம். இந்த காட்சியில் “தண்ணீர்“ முக்கியத்துவம் பெறுவதை நாம் பார்க்கலாம். விவிலியத்தில், “தண்ணீர்“ அருமையான பல அர்த்தங்களை வெளிப்படுத்துகிற வார்த்தை. அதில் இரண்டு அர்த்தங்களைப் பொருத்திப் பார்ப்பது சாலச்சிறந்தது. விவிலியத்தில் முதலாவதாக, தண்ணீர் என்கிற வார்த்தை, வாழ்விற்கு சவாலானதாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக, கடல். கடலில் எழுகிற அலைகள் வாழ்வின் துன்பங்களுக்கு உருவகமாகப் பார்க்கப்படுகிறது. ஆனாலும், கடவுள் அதன் மீது தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்தியிருக்கிறார். எனவே தான், இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று வந்தபோது,...

உட்காருவதனால் உண்டாகும் பலன்கள் அதிகம்

லூக்கா 14:25-33 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். பரபரப்பான உலகில் வாழும் நாம் வாழ்க்கையில் எதையும் நிதானமாக உட்கார்ந்து சிந்திப்பதில்லை. உட்கார்ந்து சிந்திக்கும் போதுதான் நம்மைப் பற்றிய உண்மை நிலவரங்கள் வெளிப்படுகின்றன. அதிலே தான் நாம் நம்மை முன்னேற்றுவதற்கான செயல்பாடுகளைச் செய்ய முடிகிறது. உட்காருவதால் உண்டாகும் இரண்டு முக்கிய பலன்களை சொல்லித் தர வந்திருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். 1. பலம் கிடைக்கிறது நாம் உட்கார்ந்து சிந்திக்கும்போது கடினமான வாழ்க்கையை சந்திப்பதற்கான பலம் கிடைக்கிறது. உட்கார்ந்து ஒரு சில மணித்துளிகள் சிந்திக்கும்போது நம் மனது பலவிதமான, புதுமையான யோசனைகளை அள்ளி அள்ளி வழங்குகிறது. இயேசுவின் பின்னால் செல்லும் போது ஏற்படும் துன்பங்களை எப்படி சளி்க்காமால் சமாளிக்க வேண்டும்...

தயங்கினால் தடுமாற்றம் தான்…

லூக்கா 14:15-24 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கடவுள் நாம் புனிதத்தில் வளர நமக்கு அனுதினமும் அழைப்பிதழ் கொடுக்கிறார். அவரோடு நாம் நெருங்கி வர வேண்டும் என்பதே அந்த அழைப்பிதழின் நோக்கம். யார் அழைப்பிதழை ஏற்று அவருடன் நெருங்கி வாழ்கிறார்களோ அவர்களுக்கு பெரிய ஆசீர்வாதங்களான மகிழ்ச்சி, மனநிறைவு, சமாதானம், நல்ல ஆரோக்கியம் இவையனைத்தையும் இறைவன் இலவசமாக வழங்குகிறார். யார் அழைப்பிதழை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகிறார்களோ அவர்கள் தடுமாறுகிறார்கள். இரண்டு விதங்களில் தடுமாற்றம் நிகழ்கிறது. 1. இலக்கில் தடுமாற்றம் கடவுளின் அழைப்பை ஏற்காதவர் வாழ்க்கையானது இலக்கே இல்லாமல் ஒவ்வொரு நாளும் துவங்கும். குடிகாரன் போன்று தடுமாறுவர். எதையும் குறிப்பிடும் வகையில் இவர்கள் சாதிப்பதில்லை. தோல்வி ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக...