Category: தேவ செய்தி

வீண் கவலை வேண்டாம்

வீணாக, தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம் என்பது தான், இயேசு இன்றைய நற்செய்தி வாயிலாக நமக்குக் கற்றுத்தரும் பாடம். இந்த உலகத்தில் நாம் பலவற்றை நினைத்து கவலைப்படுகிறோம். நமது பிள்ளைகளை நினைத்து, அவர்களது கல்வி வளர்ச்சியை எண்ணிப்பார்த்து, அவர்களது திருமண காரியங்களை நினைத்து, அவர்கள் நல்ல வேலையில் அமர வேண்டும் என்று, இதுபோன்று பல காரியங்களை நினைத்து நாம் கவலைப்படுகிறோம். ஆனால், இவையனைத்துமே தேவையில்லாத கவலைகள். எதற்கு நாம் கவலைப்பட வேண்டுமோ, அவற்றை நினைத்து நாம் கவலைப்படுவது கிடையாது. நமது ஆன்மீக காரியங்களில் நமக்கு உள்ள ஈடுபாடு சிறப்பாக இருக்கிறதா? நமது ஆன்மா சார்ந்த வளர்ச்சி காரியங்களில் நான் முழுமையாக பங்கெடுக்கிறேனா? பிள்ளைகள் கடவுளுக்கும், மனச்சான்றுக்கு பயந்து நடக்கிறார்களா? பெரியவர்களை மதிக்கிறார்களா? அவர்கள் கடவுள் சார்ந்த காரியங்களில் ஈடுபாட்டோடு பங்கெடுக்கிறார்களா? நேரத்தை சரியாகப் பயன்படுத்துகிறார்களா? இதைப்பற்றித்தான் நாம் அதிகமாக சிந்திக்க வேண்டும். இதைப்பற்றித்தான் நாம் அதிகமாக எண்ண வேண்டும். ஆனால், நாம் இதுபோன்று...

இயேசுவின் உண்மை

தேர்ந்து கொள்ளப்பட்ட ஊழியரைப்பார்த்து, இறைவாக்கினர் எசாயா உரைக்கிறபோது, அவர் ”கூக்குரலிட மாட்டார்” என்று சொல்கிறார். இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிற வார்த்தை, நாய் குரைப்பதற்கும், அண்டங்காக்கை கரைவதற்கும் பயன்படுத்தப்படுகிற சொல். அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற ஊழியரின் குரல் இப்படி இருக்காது. மாறாக, அவர் அன்பினாலும், அமைதியினாலும், அதேவேளையில் உறுதியாகவும் கடவுளின் வார்த்தையைப் பறைசாற்றுவார் என்பதுதான் உண்மைச்செய்தி. இயேசு இந்த உலகத்தில் இதைத்தான் நிலைநாட்டினார். அவர் மக்களுக்குப் போதித்தபோதும் சரி, அல்லது பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களோடு விவாதத்தில் ஈடுபட்டபோதும் சரி, தேவையில்லாமல் கூச்சலிடவில்லை. அவருடைய கருத்தை வெகு உறுதியாக வலியுறுத்தினார். அதேபோல அடுத்தவர்களின் கருத்துக்களில் இருக்கக்கூடிய உண்மையையும் ஆதரித்தார். அதனையும் ஏற்றுக்கொண்டார். மற்றவர்கள் போல, வெறுமனே சுய இலாபத்திற்காக கூச்சல், குழப்பங்களை போட்டு, உண்மையை திரித்து, தங்களுக்கு ஏற்ற வகையில் அவர் சொல்ல விரும்பவில்லை. இன்றைக்கு உண்மையை பெரும்பான்மை என்கிற மாயத்தோற்றத்தை உருவாக்கி, தங்களுக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்கிற கூட்டங்கள் நம் மத்தியில் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. அதனுடைய...

மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து ஆண்டவரைத் தொழுவேன்

திருப்பாடல் 116: 12 – 13, 15 – 16, 17 – 18 மீட்பின் கிண்ணம் என்றால் என்ன? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுப்பது என்பதின் பொருள் என்ன? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுப்பது என்பது இறைவனை வழிபடக்கூடிய செயலைக் குறிக்கிறது. இறைவனை வழிபடுகிறபோது, திருப்பாடல் ஆசிரியர் இந்த பாடலை பாடுகிறார். அவர் ஆண்டவரின் ஆலயத்தில் இருக்கிறார். இறைவனுக்கான காணிக்கைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறார். இறைவனுக்கான காணிக்கைப் படைக்கிறபோது, நீர்மப்படையலும், விலங்குகளின் இறைச்சியும், பலிப்பொருட்களுமாக இணைத்துப் படைக்கப்படுகிறது. இறைவனுக்கு படைத்துவிட்டு அதனை எடுக்கிறபோது, இறைவனின் முழுமையான ஆசீர்வாதம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. கிண்ணம் என்பது, “நிறைவான“ ஆசீரைக் குறிக்கக்கூடிய சொல்லாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்களின் மீட்புக்கான ஆசீர்வாதம், அதாவது வாழ்வை அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு தேவையான ஆசீர்வாதத்தை அவர்கள் நிறைவாகப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பது, இந்த சடங்கு உணர்த்தக்கூடிய உண்மையாகும். இறைவனிடம் வரக்கூடிய நாம் அவருடைய அருள் வரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற...

ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கை

திருப்பாடல் 105: 1, 5, 8 – 9, 24 – 25, 26 – 27 ஒரு சில திருப்பாடல்கள் மிக நீளமானதாக அமைந்திருக்கும். ஒரு சில திருப்பாடல்கள் மிகக் குறுகியதாக இருக்கும். குறுகியதோ, நீளமானதோ, எப்படிப்பட்ட மனநிலையோடு வார்த்தைகளில் ஒன்றித்திருக்கிறோம் என்பதுதான் இங்கே முக்கியமானது. இந்த திருப்பாடல் நீளமான திருப்பாடல். வழக்கமான மற்ற திருப்பாடல்களைப் போல, இறைவனின் மாட்சிமையைப் புகழ்வதற்கான பாடல் தான் இது. உடன்படிக்கைப் பேழையை கொண்டு வரக்கூடிய நிகழ்வை குறிக்கக்கூடிய பிண்ணனியைக் கொண்டதனால், இறைவன் இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை இது குறித்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இன்றைய திருப்பாடல் ஆபிரகாமோடும், இஸ்ரயேலின் முதுபெரும் தந்தையர்களோடும் இறைவன் செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது. ஆபிரகாம் குழந்தை இல்லாமல் இருந்த காலத்தில், கடவுள் அவர் வழியாக சந்ததியைப் பெருக்குவேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். ஆபிரகாமோ உடன்படிக்கையை மேற்கொள்கிறார். அந்த வாக்குறுதிக்கு உண்மையானவராக இருக்கிறார். இஸ்ரயேலை வழிநடத்திய...

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

திருப்பாடல் 103: 1 – 2, 3 – 4, 6 – 7 எல்லா திருப்பாடல்களிலும் இறைவனைப் போற்றுவதும், இறைவனுக்கு நன்றி செலுத்துவதும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லப்படுகிறது. அதற்கான காரணம் என்ன? இறைவனுக்கு நாம் ஒவ்வொருநாளும் நன்றி சொல்ல வேண்டுமா? இறைவனுக்கு நமது உள்ளம் தெரியாதா? இறைவனை எதற்காக நாம் போற்றிக்கொண்டே இருக்க வேண்டும்? இந்த கேள்விகள் பல நாட்கள் எனக்குள்ளாக எழுந்திருக்கின்றன. சற்று ஆழமாகச் சிந்தித்தபோது, எதற்காக திருப்பாடல் ஆசிரியர் இதனை திரும்ப திரும்ப வலியுறுத்திக் கூறுகிறார் என்பதை உணர முடிந்தது. இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலை பெற்ற அந்த நிகழ்வுகளை, பாஸ்கா விழா எடுத்துக் கொண்டாடி, அந்த நாளில் குடும்பத் தலைவர் தன்னுடைய பிள்ளைகளுக்கு, கடவுள் கொடுத்த அந்த விடுதலையின் நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் சொல்ல வேண்டும் என்று கடவுள் கட்டளை கொடுத்தார். அதற்கான காரணம், கடவுள் செய்த நன்மைகளை நாம் மீண்டும், மீண்டும் கேட்கிறபோது,...