Category: Daily Manna

இறைவன் தரும் ஆசீர்வாதம்

1அரசர்கள் 18: 41 – 46 நாம் வணங்கும் இறைவன் ஆசீர்வாதத்தின் கடவுள் என்கிற செய்தி, இன்றைய வாசகத்தின் மூலமாக நமக்கு வழங்கப்படுகிறது. நாடெங்கிலும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இறைவாக்கினர் எலியா, தன்னை அரசன் முன்னால் நிறுத்தி, உண்மையான இறைவன் யாவே இறைவன் என்பதையும், பாகால் இறைவன் பொய்யானவர் என்பதையும் நிரூபிக்கிறார். மக்கள் அனைவரும் கடவுளை உண்மையான இறைவனாக ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த தருணமே, அவர்களின் பஞ்சம் நீங்கியது என்பதை, இந்த வாசகத்தில் நாம் பார்க்கிறோம். பாகால் தெய்வத்திற்கான பலிபீடங்களையும், மதகுருக்களையும் கொன்றொழித்த பின்பு, மக்கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்கிறார்கள். பாவங்களை மன்னிக்கின்ற தேவன், இஸ்ரயேல் மக்களின் மனமாற்றத்தை எண்ணிப்பார்த்து மகிழ்ச்சியடைகிறார். அவர்களை பஞ்சத்தின் பிடியிலிருந்து விடுவிக்க திருவுளம் கொள்கிறார். இறைவன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று திருவுளம் கொண்டிருக்கிறவர். அவர்கள் துன்பப்பட வேண்டும் என்று ஒருபோதும் நினைப்பவர் கிடையாது. எனவே தான், மக்கள் அவரை...

பயன்படுத்தும் வார்த்தைகள்

”இயேசு திருவாய் மலர்ந்து” என்கிற வார்த்தையின் அர்த்தத்தை நாம் பார்ப்போம். இது ஏதோ, ஒரு அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் அல்ல. மாறாக, அர்த்தத்தோடு பயன்படுத்தப்பட்டிருக்கிற வார்த்தைகள். இந்த வார்த்தைகளுக்கு, கிரேக்க மொழியில் இரண்டு அர்த்தங்கள் தரப்படுகிறது. 1. கடவுளின் இறைவாக்கை அறிவிப்பதைச் சொல்லும் வார்த்தைகள். இந்த வார்த்தைகளுக்கு தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. இந்த வார்த்தைகளுக்கு தனி அழுத்தம் உண்டு. இந்த வார்த்தைகள் வழக்கமான சாதாரண அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் அல்ல. இந்த வார்த்தையின் இரண்டாவது பொருள் 2. மக்கள் தங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து பேசுவதைக்குறிப்பது. இது சாதாரண போதனையல்ல. இயேசு பலமுறை மக்களுக்குப் போதித்திருக்கிறார். இந்தப் போதனையை சாதாரண போதனையோடு நாம் ஒப்பிடக்கூடாது. இது அதைவிட மேலானது. தனது உள்ளத்தின் ஆழக்கிடங்கை இயேசு வெளிப்படுத்துகிறார். இயேசுவை நேர்மையான உள்ளத்தோடு பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவருக்கும், இதுதான் வாழ்வின் மையமாக இருக்க வேண்டும், என்கிற ஆதங்கத்தோடு வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள். நாம் பொதுவாகப் பேசுவதற்கும்,...

கடவுளின் அன்பு

யோவான் நற்செய்தியாளர் அன்பு என்கிற வார்த்தைக்கு அதிக அழுத்தம் தருகிறார். அது கடவுளின் அன்பாக இருக்கட்டும். இயேசு மக்கள் மீது காட்டுகின்ற அன்பாக இருக்கட்டும். அதேபோல, தனது நற்செய்தியின் சிந்தனையாக, மக்கள் கடவுளின் அன்பைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எழுதுவதாக இருக்கட்டும். அன்பே அவரது நற்செய்தியின் அடிப்படையாக இருக்கிறது. அன்பிற்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார். ஆனால், நாம் வாழக்கூய இந்த உலகத்தில் அன்பு என்கிற வார்த்தை தவறாக திரித்துப்பயன்படுகிறது. அன்பின் ஆழம் தெரியாமல், அன்பின் மகத்துவம் புரியாமல், அன்பின் அர்த்தமே அறியாமல் அன்பு பார்க்கப்படுவது, சிதைக்கப்படுவது வேதனையிலும் வேதனை. உண்மையான அன்பை இந்த உலகத்தில் பார்ப்பதும் அரிதாக இருக்கிறது. எதிர்பார்க்கின்ற அன்பு தான் அதிகமாக காண முடிகிறது. என்னை அன்பு செய்தால் நான் அன்பு செய்வேன், என்று கைம்மாறு கருதுகிற அன்புதான் அதிகம். எதிர்பார்ப்பில்லா அன்பு அரிது. ஆனால், கடவுளின் அன்பு எதிர்பார்ப்பில்லாத அன்பு. கடவுள்தன்மையில் இருந்தாலும், மனிதர்களை அன்பு...

கிறிஸ்துவுக்காக சான்று பகரும் வாழ்வு

திருத்தூதர்பணி 28: 16 – 20, 30 – 31 கிளாடியசின் காலத்தில் பெரும்பாலான யூதர்கள் உரோமை நகருக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்ட போதும், காலச்சூழலில் அவர்கள் உரோமை நகருக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தங்களுக்கான சலுகைகளைப்பெற்று, மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தனர். அவர்களில் பலரை, பவுல் அழைத்துப்பேசுகிறார். தான் நிரபராதி என்பதை அவர்களுக்கு விளக்க முற்படுகிறார். தன்னைப் பற்றிய செய்தி, நிச்சயம் எல்லா யூதர்களுக்கும் சென்றிருக்கும் என்பதில் அவருக்கு சந்தேகம் ஒன்றுமில்லை. ஆனாலும், தன்னுடைய தரப்பு நியாயத்தை அவர் எடுத்துக்கூறுகிறார். இங்கே ஒன்றை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தன்னை நியாயப்படுத்த வேண்டும் என்பது, பவுலடியாரின் முதன்மையான நோக்கம் கிடையாது. அப்படிப்பட்ட எண்ணம் அவருக்கு துளியளவும் இல்லை. கடவுளின் பணியைச் செய்கிறேன் என்பதில், அவர் உறுதியோடு இருந்தார். அதற்காக எவருடைய எதிர்ப்பையும் சம்பாதிப்பதற்கு தயாராகவே இருந்தார். அரசராக இருந்தாலும், தனக்கு தண்டனை கொடுக்கிற நிலையில் இருந்தாலும், அதனைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால்,...

உறுதியான மனம்

திருத்தூதர்பணி 25: 13 – 21 வாழ்க்கையின் ”குறிப்பிட்ட தருணம்“ ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையையோ, ஒரு சமூகத்தின் பார்வையையோ, ஒட்டுமொத்த நாட்டின் போக்கையோ மாற்றக்கூடியதாக இருக்கும். அசோகருக்கு கலிங்கத்துபோர் அவரது வாழ்க்கையின் போக்கையே மாற்றியது. தூய பவுலடியாருக்கு, உயிர்த்த இயேசுவின் காட்சி, அவருடைய வாழ்வையே மாற்றியது. இந்திய சுதந்திரப்போரில் சிப்பாய்க்கலகம் இந்திய சுதந்திர வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இயேசுவின் வளர்ப்புத்தந்தை யோசேப்பின் வாழ்வில் அவர் கண்ட கனவு, மரியாளைப் பற்றிய பார்வையை மாற்றியது. இப்படி ஒரு குறிப்பிட்ட “தருணமானது“ ஒரு தனிப்பட்ட மனிதரின் வாழ்வையோ, ஒட்டுமொத்த சமூகத்தின் போக்கையோ மாற்றக்கூடியதாக இருக்கிறது. உலக வரலாற்றின் குறிப்பிட்ட முக்கிய தருணமானது, இயேசுவின் உயிர்ப்பே என்பதை ஆணித்தரமாக பவுலடியார் சொன்னது, இன்றைய வாசகத்தில் விளக்கப்படுகிறது. பெஸ்தைச் சந்திக்க வந்த அகிரிப்பா, இரண்டாம் மார்க்கஸ் ஜீலியஸ் அகிரிப்பா ஆவார். இவர் அகிரிப்பாவின் மகனும் (12: 1 – 25), பெரிய ஏரோதுவின் கொள்ளுப்பேரனும் ஆவார்....